உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஒடிசாவில் ரூ.60 ஆயிரம் கோடியில் வளர்ச்சி திட்டங்கள் தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

ஒடிசாவில் ரூ.60 ஆயிரம் கோடியில் வளர்ச்சி திட்டங்கள் தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புவனேஸ்வர்: ''காங்கிரஸ் மக்களைக் கொள்ளையடிக்க எந்த வாய்ப்பையும் விட்டுவைக்கவில்லை'' என ஒடிசாவில் ரூ.60 ஆயிரம் கோடியில் வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்த பின் பிரதமர் மோடி பேசுகையில் தெரிவித்தார்.ஒடிசாவின் ஜார்சுகுடாவில் தொலைத்தொடர்பு, ரயில்வே, சுகாதாரம், உயர்க்கல்வி மற்றும் கிராமப்புற வீட்டுவசதி உள்ளிட்ட துறையில் ரூ.60 ஆயிரம் கோடிக்கும் மேல் மதிப்புள்ள வளர்ச்சி திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அவர் பிஎஸ்என்எல் 4ஜி சேவையை தொடங்கி வைத்தார். பின்னர் பிரதமர் மோடி பேசியதாவது: இன்று தொடங்கப்பட்ட பெர்ஹாம்பூர்-உத்னா அம்ரித் பாரத் ரயில் குஜராத்தில் உள்ள ஒடியா மக்களுக்கு பயனளிக்கும். கலை மற்றும் கலாச்சாரத்தில் ஒடிசா மாநிலம் உலக புகழ் பெற்றது. இரட்டை எஞ்சின் அரசாங்கத்தின் முயற்சிகளால் ஒடிசா வேகமாக முன்னேறி வருகிறது. இது வரை நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு 4 கோடிக்கு மேற்பட்ட வீடுகளை கட்டி கொடுத்துள்ளோம். பொருளாதார ரீதியாக அதிகாரம் பெற விரும்பும் நாடு, கப்பல் கட்டுமானத்தில் கவனம் செலுத்துகிறது. கப்பல் கட்டுமானம் தளத்தை ஊக்குவிக்க பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டாளிகள் மக்களைக் கொள்ளையடிப்பதால், ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். காங்கிரஸ் மக்களைக் கொள்ளையடிக்க எந்த வாய்ப்பையும் விட்டுவைக்கவில்லை. ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்திற்கு வரி விதித்தது. பாஜ அரசு ரூ.12 லட்சமாக வரம்பை உயர்த்தியது. பாஜ அரசு ஏழை மக்கள், தலித்துகள், பழங்குடியினருக்கு அதிகாரம் அளிப்பதில் கவனம் செலுத்துகிறது. ஒடிசா பல தசாப்தங்களாக வறுமையைக் கண்டுள்ளது, ஆனால் இப்போது செழிப்புக்கான பாதையில் உள்ளது. உள்நாட்டு தொழில்நுட்பத்தைக் கொண்டு 4G தொலைத் தொடர்பு சேவைகளைத் தொடங்கிய உலகின் ஐந்து நாடுகளில் இந்தியாவும் இப்போது ஒன்று ஆகும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

Priyan Vadanad
செப் 27, 2025 16:42

ஒடிசாவில் பஞ்சாயத்து வார்டு மெம்பெருக்கான தேர்தல் எதுவும் நடக்கபோகிறதா?


vivek
செப் 27, 2025 16:45

அங்கு டாஸ்மாக் கிடையாது பிரியன்...நீ போனால் வேஷ்டு


M.Sam
செப் 27, 2025 16:25

இதில் இருந்து ஓன்று புரிகின்றது பிஜேபி அரசு அது ஆளும் மாநிலத்துக்கு மட்டும் நிதி உதவிகளை நலத்திட்டங்களை வாரி வல்லுங்கிறது யாரு வீடு ணம் மக்களின் வரி பணம் அதிக அரி காட்டும் தமிழ் ஆடு மக்களுக்கு நிதி குறைவு ஏன் என்று கேக்க தோன்ற வில்லையா ? இங்கு உள்ள அரசியில் காட்சிகளை பார்க்கும் து திமுகவை தவிர அணைத்து கட்சிகளுமே பிஜேபியின் அடிமைகள் தான் என்பதில் சந்தேகம் இல்லை வரைகலை தமிழ் நாட்டுக்கு நல்லது செய்ய போகிறார்கள்


Gokul Krishnan
செப் 27, 2025 15:12

காங்கிரஸ் மக்களை கொள்ளை அடித்தது என்றே வைத்து கொள்வோம் ஆனால் பதினொரு ஆண்டுகளாக எத்தனை காங்கிரஸ் தலைவர்கள் ஊழல் வழக்கு பதியப்பட்டு உங்கள் ஆட்சியில் தண்டனை தரப்பட்டது


vivek
செப் 27, 2025 18:57

அட அறிவிலியே...நீ முரசொலி மட்டுமே படிப்பாயா


Indian
செப் 27, 2025 14:29

தமிழ் நாடு ஒதுக்கப்படுகிறது , தமிழ் மக்கள் புறக்கணிக்க படுகிறார்கள் .......இலங்கையிலும் இது போல தான் புறக்கணிக்க பட்டர்கள் .... இறைவன் பார்த்து கொள்வார் .....


Kumar Kumzi
செப் 27, 2025 15:12

இந்தியன் பெயரில் பதுங்கியிருக்கும் பங்களாதேஷ் கள்ளக்குடியேறி ரோஹிங்கியாவுக்கு இந்தியாவில் என்னடா வேல


Indian
செப் 27, 2025 15:35

பிஹாரி வந்தேறிக்கு , தமிழ் நாட்டில் என்ன வேலை .


Venugopal S
செப் 27, 2025 13:56

ஒடிசாவுக்கு அறுபதாயிரம் கோடி,உத்தரப் பிரதேசத்துக்கு எழுபதாயிரம் கோடி,குஜராத்துக்கு எண்பதாயிரம் கோடி,தமிழ்நாட்டுக்கு மட்டும் பிம்பிலாக்கி பிலாப்பி!


தியாகு
செப் 27, 2025 14:30

எத்தனைஆயிரம் கோடிகள் தமிழ்நாட்டுக்கு கொடுத்தாலும் திருட்டு திமுகவின் தலைமை குடும்பமும், குறுநில மந்திரிகளும், சிறுகுறுநில எம் எல் ஏக்களும், தலைமுறை குடும்ப கொத்தடிமை கழக அடாவடி அடிமை உடன்பிறப்புகளும் தங்கள் வீட்டுக்கு ஊழல்கள் லஞ்சங்கள் மூலம் கொண்டுசென்றுவிடுவார்கள். அதனால் தமிழ்நாட்டுக்கு கொடுக்காமல் இருப்பது நல்லது.


Kumar Kumzi
செப் 27, 2025 15:15

டாஸ்மாக் கொத்தடிமைங்க எப்போதும்மே ஓங்கோல் துண்டுசீட்டு கூமுட்ட சொல்லும் பொய்களை தானே நம்புவானுங்க த்தூ


V Venkatachalam
செப் 27, 2025 20:39

இருக்கட்டுமே. வெரி சிம்பிள். அங்கு ஒழுங்கானவர்களின் கையில் ஆட்சி இருக்கு. திருட்டு துர் முகவில் எவனையாவது ஒழுங்கானவன்னு சொல்ல முடியுமா? அலிபாபா வில் வருகிற 40 திருடர்கள் மாதிரி 40 பேரு வடை போண்டா மிக்ஸர் சாப்புடுகிறான்களே அவனுங்க டமில் நாட்டுக்கு பணம் கேட்டு வாங்கி வர வேண்டியதுதானே. அதை விட்டுட்டு காந்தி சிலைக்கு அடியில் நின்னு கோஷம் போடுறானுங்க.குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் செல்லாத ஓட்டுப்போட்ட புத்திசாலிகள் யாரு?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை