உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பெங்காலி எதிர்ப்பு கொள்கை; பா.ஜ., மீது மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு

பெங்காலி எதிர்ப்பு கொள்கை; பா.ஜ., மீது மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு

கோல்கட்டா: டில்லியில் ஜெய் ஹிந்த் காலனியில் வசிக்கும் பெங்காலி மக்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படுவதாக கூறிய மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பெங்காலி எதிர்ப்பு கொள்கையை பா.ஜ., கடைபிடிப்பதாக குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; வசந்த் குன்ச்சின் ஜெய் ஹிந்த் காலனியில் இருந்து வரும் செய்திகள் மிகவும் வருத்தத்தைத் தருகின்றன. இந்த காலனியில் பெரும்பாலும் வாழ்பவர்கள் பெங்காலிகள், அவர்கள் தான் தொழிலாளர்களாக நகரத்தை கட்டியெழுப்புகிறார்கள்.அவர்களுக்கான தண்ணீர் விநியோகம் பா.ஜ., தலைமையிலான அரசின் உத்தரவின் பேரில் துண்டிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. நேற்றிரவு திடீரென மின்சாரம் துண்டிக்கப்பட்டது. தண்ணீர் டேங்கர்களை டில்லி போலீஸ் மற்றும் அதிவிரைவு படையினர் தடுத்ததாக குடியிருப்புவாசிகள் குற்றம்சாட்டியுள்ளனர் கடந்த டிசம்பரில் ஏற்கனவே டில்லி போலீஸால் நடத்தப்பட்ட மீறலுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும்போதே, தற்போது மக்களை கட்டாயமாக வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வாழ்விடம், தண்ணீர், மின்சாரம் போன்ற அடிப்படை உரிமைகளை பறிக்கும் ஒரு நாட்டை நாம் எப்படி ஜனநாயக அரசு என்று கூற முடியும்?மேற்கு வங்கத்தில் 1.5 கோடிக்கும் அதிகமான கூலி தொழிலாளர்கள் கண்ணியத்துடன் வாழ்கிறார்கள். ஆனால் பா.ஜ., ஆளும் மாநிலங்களில் பெங்காலிகள் தங்கள் நாட்டிலேயே ஊடுருவியவர்கள் போல நடத்தப்படுகிறார்கள். வங்க மொழி பேசுவது ஒருவரை வங்கதேசத்தைச் சேர்ந்தவராக ஆக்காது. எந்த மொழி பேசினாலும் அவர்களும் இந்தியாவின் குடிமக்களே.மேற்கு வங்கத்தில் பெங்காலிகளை ஒடுக்க முடியாமல் தோல்வியடைந்த பா.ஜ.,, இப்போது தங்கள் வங்காளவிரோத நடவடிக்கைகளை பிற மாநிலங்களில் செய்து வருகிறது. குஜராத், மகாராஷ்டிரா, ஒடிசா, மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் வங்கமொழி பேசும் மக்கள் இலக்காக்கப்பட்டு துன்புறுத்தப்படுகிறார்கள். இப்போது, இந்த வன்முறை டில்லியில் நடந்துள்ளது. வங்க மக்கள் தங்கள் நாட்டிலேயே அந்நியர்களாக நடத்தப்படும்போது நாங்கள் மவுனமாக இருக்க மாட்டோம். ஒடுக்கப்பட்ட ஒவ்வொரு குரலுடனும் மேற்கு வங்கம் ஒன்றாக நிற்கிறது, இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Iyer
ஜூலை 11, 2025 14:29

* அடுத்து மேற்கு வங்கத்தில் SIR நடக்கப்போகிறது. * மேற்குவங்கத்தில் சுமார் 1 கோடி கள்ள வோட்டார்கள் பதிவு செய்துள்ளனர். * SIR க்குப்பிறகு அந்த 1 கோடி கள்ளவோட்டர்களும் நீக்கப்படுவார்கள். * ஆகையால் மம்தா தோல்வி உறுதி. * இதனால்தான் பெங்காலி வெறியை கிளப்பி விடுகிறார்.


Ramesh Sargam
ஜூலை 11, 2025 12:29

பங்களாதேஷ் எதிர்ப்பு கொள்கை. பெங்காலி எதிர்ப்பு கொள்கை அல்ல.


sankaranarayanan
ஜூலை 11, 2025 10:35

மமதை பிடித்த மம்தாவுக்கு யார் யார் பெங்காலி பேசுகின்ற பங்களாதேசிகள், ரோஹிங்யாக்கள் எந்தெந்த மாநிலங்களில் இருக்கிறார்கள் என்றே தெரியாமல் குருடன் போக்கிற்கு பொதுவாக பெங்காலி என்று கூறக்கூடாது இதன் மூலமாக ஏகப்பட்ட ரோஹிங்யாக்கள் பெங்காலி பேசும் பெங்களாதேசிகள் இந்தியாவில் ஊடுருவல் செய்து நாட்டை நாசமாக்குகிறார்கள் முதலில் அவர்களை கண்டுபிடியுங்கள்


veeramani
ஜூலை 11, 2025 09:46

பெங்காலி பேசும் இந்திய வங்காள பெருமக்களை எவரும் துன்புறுத்தவில்லை. ஆனால் பெங்காலி பேசுகின்ற பங்களாதேசிகள், ரோஹிங்யாக்கள் இந்திய நாத்திற்கு தேவையில்லாதவர்கள் இந்திய ஒருமைப்பாட்டை அச்சுறுத்துபவர்கள். இவர்களை நிச்சயம் இந்திய எல்லைக்கு அப்பால் துரத்தப்படவேண்டும் . மம்தா இவர்களுக்கு வக்காலத்து வாங்கவேண்டாம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை