உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ரூ.21 கோடி போதை மாத்திரை; உடலில் மறைத்து கடத்தியவர் கைது!

ரூ.21 கோடி போதை மாத்திரை; உடலில் மறைத்து கடத்தியவர் கைது!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: டில்லி விமான நிலையத்தில் 21 கோடி ரூபாய் மதிப்பிலான 1.383 கிலோ போதை கேப்சூல்களை கடத்தி வந்த நபர், சுங்கத்துறையினரிடம் பிடிபட்டார்.டில்லி இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு கடந்த டிச.11ம் தேதி அன்று, பிரேசில் நாட்டை சேர்ந்த லுாகாஸ் ஹெ ன்ரிக் டி ஒலிவோரா பிரிட்டோ, 28, என்ற பயணி விமானத்தில் வந்திறங்கினார். அவரது நடை, பாவனைகளில் வித்தியாசம் கண்டுபிடித்த சுங்கத்துறை அதிகாரிகள், சந்தேகத்தின் பேரில் சோதனை நடத்தினர்.அதிகாரிகளின் கிடுக்கிப்பிடி விசாரணையில், தான் போதை மருந்து கடத்தி வந்ததை அவர் ஒப்புக்கொண்டார். தான், போதை கேப்சூல்களை உட்கொண்டு விட்டதாகவும், வயிற்றுக்குள் கேப்சூல் இருப்பதாகவும் கூறினார்.இதையடுத்து அவரை சுங்கத்துறை அதிகாரிகள் மருத்துவமனையில் கொண்டு சென்று சேர்த்தனர். டாக்டர்கள் உதவியுடன் அவரது வயிற்றில் இருந்த 1.383 கிலோ எடை கொண்ட கோகைன் போதை மருந்து கைப்பற்றப்பட்டது. அவரது வயிற்றில் இருந்த 127 காப்சூல்களின் சர்வதேச மதிப்பு 21 கோடி ரூபாய். இதையடுத்து ஒலிவோரா பிரிட்டோ கைது செய்யப்பட்டார்.அவர், யாருக்காக இந்த போதை மருந்தை கடத்தி வந்தார், சர்வதேச கடத்தல் கும்பல் தலைவன் யார் என்பது பற்றி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

தர்மராஜ் தங்கரத்தினம்
டிச 24, 2024 12:25

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூா் வட்டம், ஜேடா்பாளையம் அருகே சோழசிராமணி பகுதியைச் சோ்ந்தவா் அமுதா. இவரது 13 வயது மகள் கடந்த அக்டோபா் மாதம் வீட்டில் இருந்து காணாமல் போனாா். அவரை கண்டுபிடித்து தரும்படி ஜேடா்பாளையம் காவல் நிலையத்தில் அமுதா புகாா் அளித்தாா். இந்த சம்பவம் குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனா். இந்த நிலையில் சிறுமி மீண்டும் வீட்டிற்கு திரும்பினாா். மேலும் அவருக்கு சமூக வலைதளம் மூலம் திருவண்ணா மலையைச் சோ்ந்த இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டதாகவும் , அவா் ஆசைவாா்த்தை கூறி பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தியதாகவும் சிறுமி ஜேடா்பாளையம் காவல் நிலைய போலீஸாரிடம் தெரிவித்தாா். அதன் அடிப்படையில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, சிறுமியை ஆசைவாா்த்தை கூறி பாலியல் துன்புறுத்தலுக்கு இருவா் உட்படுத்தியதாகவும், இருவா் அதற்கு உடந்தையாக இருந்ததாகவும் திருவண்ணாமலை பகுதியைச் சோ்ந்த 4 இளைஞா்களை போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா். கைது செய்யப்பட்டவா்கள் குறித்து முழுமையான விவரங்களை அளிக்க போலீஸாா் மறுத்து விட்டனா். ஒரு மார்க்கம் ன்னா பேரு போடமாட்டோம்ல ?? கொடுக்க மாட்டோம்ல ??


veeramani
டிச 24, 2024 09:46

போதைமருந்து கடுந்துயவர்கள் எவராரியினும்ம் மரண தண்டனை தான் சரியான தீர்வு அதுவும் உடனடியாக நிறைவேற்றப்படலாம்


Kasimani Baskaran
டிச 23, 2024 23:23

சந்தேகமில்லாமல் அயலக அணியாகத்தான் வாய்ப்பு இருக்கிறது


தர்மராஜ் தங்கரத்தினம்
டிச 24, 2024 12:22

அயலக அணியின் சிறுபான்மை பிரிவா இருந்தா பேரே போடமாட்டோம்ல ????


Bala
டிச 23, 2024 23:12

அவர் தமிழ்கத்தை சேர்ந்த ஒருவருக்காக இருக்குமோ என்று விசாரிக்க வேண்டும்.


முக்கிய வீடியோ