உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஆட்கொல்லி புலி உயிரிழந்த நிலையில் மீட்பு

ஆட்கொல்லி புலி உயிரிழந்த நிலையில் மீட்பு

திருவனந்தபுரம்: வயநாட்டில் ஆட்கொல்லி புலியை இன்று (ஜன.,27) சுட்டுக்கொல்ல மாநில அரசு உத்தரவிட்டது. ஆனால் வனத்துறையினர் காட்டிற்குள் நுழைந்த போது புலி மர்மமான முறையில் உயிரிழந்து சடலமாக கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கேரள மாநிலம், வயநாடு மாவட்டம் மானந்தவாடியை சேர்ந்த ராதா என்பவர் காபி தோட்டத்தில் வேலை செய்து கொண்டு இருந்த போது புலி தாக்கியதில் உயிரிழந்தார். அந்த புலியை உயிருடனோ அல்லது சுட்டுப்பிடிக்கவோ நடவடிக்கை எடுக்க மாநில அரசு உத்தரவிட்டது. பஞ்சரக்கொல்லியில் தலைமை வன கால்நடை அதிகாரி டாக்டர் அருண் சக்கரியா தலைமையிலான குழுவினர் முகாமிட்டுள்ளனர். பஞ்சரக்கொல்லியில் புலி நடமாடுவதை கண்காணித்த ​​சிறப்பு மீட்பு குழு அதிகாரி ஜெயசூர்யா, அதன் மீது மயக்க மருந்து ஊசியை செலுத்தினார். அவர் புலி தாக்கியதில் பலத்த காயமுற்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.இதையடுத்து அந்த புலியை இன்று (ஜன.,27) சுட்டுக்கொல்ல மாநில அரசு உத்தரவிட்டது. மானந்தவாடியில், இன்று முதல் 2 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. அப்பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டது. கால்நடை டாக்டர் அருண் சக்கரியா தலைமையிலான 30 பேர் கொண்ட சிறப்புக் குழுவினர் இன்று வனத்துக்குள் செல்ல முடிவு செ ய்து இருந்தனர். அதன் படி இன்று காலை புலியை சுடுவதற்காக வனத்துறையினர் துப்பாக்கி உடன் காட்டிற்குள் நுழைந்தனர். அப்போது ஒரு அதிர்ச்சியை சம்பவம் காத்திருந்தது. வனத்துறை அதிகாரிகள் சற்றும் எதிர்பார்க்காத வகையில், ஆட்கொல்லி புலி மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்துள்ளது. பின்னர் புலியின் சடலத்தை மீட்ட வனத்துறையினர் உயிரிழப்புக்கான காரணத்தை தீவிரமாக விசாரித்து வருகின்றனர். ஆட்கொல்லி புலியை சுட்டுக் கொல்வதற்கு மாநில அரசு முதல்முறையாக உத்தரவிட்டிருந்த நிலையில், புலியின் மர்ம மரணம் வனத்துறையினரை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

என்றும் இந்தியன்
ஜன 27, 2025 17:18

திராவிட மாடல் விளக்கம் இப்படி இருக்கும் "பெண்ணை கொன்றதால் தான் புலி இறந்து விட்டது"


M. PALANIAPPAN
ஜன 27, 2025 12:57

பாவம் புலி


Suresh V
ஜன 27, 2025 11:14

காடுகளின் நடுவே ரிசார்ட், காபி தோட்டங்களை கட்டி கொண்டு, புலி தாக்குகிறது என்று அதன் மீது பலி போடுவது .. மனிதன் தான் பெரிய மிருகம். இதற்கெல்லாம் கட்டாயம் இயற்கை பதில் சொல்லும்.


Pats, Kongunadu, Bharat, Hindustan
ஜன 27, 2025 11:01

"இன்று காலை புலியை சுடுவதற்காக வனத்துறையினர் துப்பாக்கி உடன் காட்டிற்குள் நுழைந்தனர்" - புலி காட்டில் இல்லாமல் வேறு எங்கு இருக்கும்? மனிதர்கள் காட்டிற்கு சென்று புலிகளுக்கும், மற்ற விலங்குகளுக்கும் பிரச்சனையை உருவாக்குகிறார்கள். பின்னர் விலங்குகள் மீது பழியை போட்டு கொல்கிறார்கள். இது மனிதர்களுக்கு அசிங்கம்.


நக்கீரன் (நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே)
ஜன 27, 2025 09:40

ஆட்கொல்லி புலி என்று கூறாதீர்கள். ஆட்கொல்லி மனிதர்கள் என்று கூறுங்கள். புலியின் வசிப்பிடத்தில் போய் நீங்கள் ஆக்கிரமித்துக் கொண்டு பின் அது துன்புறுத்துகிறது என்று கூறுவது மனிதன் இன்னும் ஆறறிவை பெறவில்லை என்பதையே காட்டுகிறது. சுயநலமிக்க கொடூரமான மிருகங்கள் இந்த மனிதர்கள்.


லிங்கம்,கோவை
ஜன 27, 2025 09:32

புலிக்கு மயக்க ஊசி செலுத்திய போது அது அளவுக்கு அதிகமாக இருந்திருக்கலாம். அல்லது மாற்று ஊசியாக விஷ ஊசியை டாக்டர் போட்டிருக்கலாம். எது எப்படியோ புலி உயிரிழந்து விட்டது ...