உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மன்மோகன் சிங்கின் இறுதிச் சடங்கு இன்று காலை 11:45க்கு நடைபெறும்

மன்மோகன் சிங்கின் இறுதிச் சடங்கு இன்று காலை 11:45க்கு நடைபெறும்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் இறுதிச்சடங்கு, டில்லியில் உள்ள நிகாம்போத் காட் பகுதியில் இன்று காலை 11:45 மணிக்கு 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க, முழு அரசு மரியாதையுடன் நடைபெறும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.இந்த நிகழ்வில் ஜனாதிபதி திரவுபதி முர்மு, துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர், பிரதமர் மோடி, லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா, மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்பர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, மன்மோகன் சிங் ஆற்றிய சேவையை நினைவு கூர்ந்து, டில்லியில் அவருக்கு நினைவிடம் அமைக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு காங்., தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடிதம் எழுதியுள்ளார். எனினும், மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில், மறைந்த தலைவர்களுக்கு நினைவிடம் கட்ட டில்லியில் இடம் ஒதுக்கக்கூடாது என, 2013ல் சட்டம் இயற்றியது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

krishnamurthy
டிச 28, 2024 09:12

இழப்புதான். அனாலும் பிஜேபி தலைவர்களே அவரை இவ்வளவு புனிதராக கட்டவேண்டும்


Kasimani Baskaran
டிச 28, 2024 08:22

காங்கிரஸ் கோஷ்டியின் வேண்டுகோளுக்கு இறங்கித்தான் இடம் ஒதுக்கியதாக இருக்கவேண்டும் என்று தேவையில்லாமல் அரசியல் செய்வார்கள் என்று எதிர்பார்க்கலாம்.


sankaranarayanan
டிச 28, 2024 08:22

மன்மோகன் சிங் ஆற்றிய சேவையை நினைவு கூர்ந்து, டில்லியில் அவருக்கு நினைவிடம் அமைக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு காங்., தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடிதம் எழுதியுள்ளார். இது நடக்காத விஷயம் இப்படியே ஒவ்வொரு கட்சி அரசியல் தலைவருக்கும் யமுனைக்கரையில் நினைவிடம் கட்டிக்கொண்டே போனால் திராவிட கட்சிகளின் செயற்பாட்டை பின்பற்றி சென்றால் நதிகளின் கரைகள் சமுத்திரத்தின் கரைகள் புனித தன்மையை இழந்து சுடுகாடு தலமாகவே போயிடும் பிறகு நாடே சுடு காடாகிவிடும்


திகழ் ஓவியன், Ontario
டிச 28, 2024 08:18

2013 இல் சட்டம் இயற்றியது அவர்கள். இப்போது அதை பற்றி கொஞ்சம் கூட பொறுப்பு இல்லமால் இந்த கோரிக்கை. ஆனால் எப்போதும் கையில் அரசியல் அமைப்பு புத்தகம். நல்ல நாடகம். இவர்களே அரசியலை சாக்கடை ஆகியவர்கள் கயவர்கள்


Subramanian
டிச 28, 2024 08:08

ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி


A Viswanathan
டிச 28, 2024 09:56

அதற்கு எல்லாம் அரசு செவி சாய்க்க கூடாது.அப்படி என்றால் டெல்லி மொத்தம் நினைவு மண்டபமாக தான் இருக்கும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை