உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நீதித்துறையை அடிமையாக வைத்திருக்க விரும்பினர்: எமர்ஜென்சி பற்றி மன் கி பாத் உரையில் மோடி காட்டம்

நீதித்துறையை அடிமையாக வைத்திருக்க விரும்பினர்: எமர்ஜென்சி பற்றி மன் கி பாத் உரையில் மோடி காட்டம்

புதுடில்லி: ''நாட்டில் எமர்ஜென்சியை அமல் செய்தவர்கள், அரசியல் சட்டத்தை கொலை செய்தது மட்டுமின்றி, நீதித்துறையை அடிமையாக வைத்திருக்கவும் விரும்பினர்,'' என்று, 'மன் கி பாத்' உரையில் பிரதமர் மோடி பேசினார்.மன் கிபாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: அனைவருக்கும் சர்வதேச யோகா தினம் நினைவுகள் இருக்கும். இந்திய கடற்படையின் கப்பல்களிலும் பிரமாண்ட முறையில் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது. டில்லி யமுனை நதிக்கரையில் மக்கள் யோகா செய்தனர். ஜம்மு காஷ்மீரில் உலகின் மிக உயரமான ரயில் பாலமான செனாப் பாலத்தில் மக்கள் யோகா செய்தனர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=r03v2t13&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

யோகா

இமயமலையின் பனி சிகரங்களில் பாதுகாப்பு படையினர் யோகா பயிற்சி செய்தனர். அதிகாரம் அளிப்பதற்கான ஒரு வழி யோகா. புனித யாத்திரைகள் உடலை ஒழுங்குப்படுத்துவதற்கும், மனதை தூய்மைப் படுத்துவதற்கும், அன்பையும், சகோதரத்துவத்தை வளர்ப்பதற்கும் ஒரு சிறந்த வழியை உருவாக்கும். நாட்டில் எமர்ஜென்சியை அமல் செய்தவர்கள், அரசியல் சட்டத்தை கொலை செய்தது மட்டுமின்றி, நீதித்துறையை அடிமையாக வைத்திருக்கவும் விரும்பினர்.

எமர்ஜென்சி

எமர்ஜென்சியை துணிச்சலுடன் எதிர்த்து போராடியவர்களை எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும். அந்த நேரத்தில் மக்கள் பெரிதும் சித்ரவதை செய்யப்பட்டனர். இன்று நாட்டின் 95 கோடி பேர் ஏதேனும், ஒரு சமூக நலன் பாதுகாப்பு திட்டத்தால் பயன் அடைகின்றனர். உள்ளூர் பொருட்களுக்கு முக்கியத்துவம் தர வேண்டும். நமது அரசியல் அமைப்பு சட்டத்தை பாதுகாக்க நாம் விழிப்புடன் செயல்பட வேண்டும்.

வரலாற்று சாதனை

இந்த நேரத்தில் அனைவரது பார்வையும் சர்வதேச விண்வெளி நிலையத்தின் மீது உள்ளது. இந்தியா ஒரு புதிய வரலாற்று சாதனை படைத்துள்ளது. நேற்று இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷூ சுக்லா உடன் பேசினேன். இன்னும் சில நாட்கள் சுக்லா விண்வெளி நிலையத்தில் தங்கி ஆய்வு நடத்த இருக்கிறார். இந்த திட்டம் குறித்து அடுத்த மன் கி பாத் நிகழ்ச்சியில் விரிவாக பேசுவோம்.

முன் மாதிரி

மஹாராஷ்டிராவில் உள்ள ஒரு கிராமம் முன்மாதிரியாக அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் வசிக்கும் மக்கள் யாரும் குப்பைகளை சாலைகளில் வீசுவதில்லை. எந்த கழிவுநீரும் இயந்திரம் சுத்தகரிப்பு செய்யாமல் ஆற்றில் கலக்கப்படாது. இந்த கிராமத்தில் கடைபிடிக்கப்படும் முறைகள் மிகவும் பாராட்டத்தக்கது. இந்த கிராமம் சத்ரபதி சம்பாஜி நகர் மாவட்டத்தில் அமைந்துள்ளது.

சோளம் ரொட்டி

ஜூலை 1ம் தேதி நமது சுகாதாரத்தை பேணிக்காக்கும் டாக்டர்களையும், நமது பொருளாதாரத்திற்கு வலு சேர்க்கும் பட்டய கணக்காளர்களையும் நாம் கவுரவிக்க வேண்டியது மிகவும் அவசியம். கர்நாடகாவில் உள்ள கலபுர்கி பெண்கள் சாதனை படைத்துள்ளனர். அவர்கள் சோளம் ரொட்டியை ஒரு பிராண்டாக மாற்றியுள்ளனர். ஒவ்வொரு நாளும் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட ரொட்டிகள் தயாரிக்கப்படுகின்றன.

வளர்ச்சி

பெண்கள் தலைமையிலான வளர்ச்சி, இந்தியாவிற்கு ஒரு புதிய எதிர்காலத்தை உருவாக்கத் தயாராக உள்ளது. இந்தியாவில், சுகாதாரம் முதல் சமூகப் பாதுகாப்பு வரை, ஒவ்வொரு துறையிலும் நாடு முன்னேறி வருகிறது. வரும் காலங்கள் இன்னும் சிறப்பாக இருக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளன. இந்தியா ஒவ்வொரு துறையிலும் அதிகமாக வளர்ச்சியை உருவாக்கும். மக்களின் ஆதரவால், பெரிய நெருக்கடிகளை எதிர்கொள்ள முடியும்.

வெற்றி

டிராக்கோமா என்பது கண்களை பாதிக்கும் ஒரு தொற்று நோய். ஒரு காலத்தில் இந்த நோயால் இந்தியாவில் பல பகுதிகளில் வசித்த மக்கள் மிகவும் அவதி அடைந்தனர். இந்த முற்றிலுமாக அழிக்க தீர்மானித்தோம். தற்போது இந்தியாவை உலக சுகாதார நிறுவனம் டிராக்கோமா இல்லாத நாடாக அறிவித்துள்ளது. இது நமது சுகாதார ஊழியர்களுக்கு கிடைத்த வெற்றி. இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 31 )

ராஜா
ஜூலை 01, 2025 00:47

வெற்று ரீல் ஓட்டியே இன்னும் எத்தனை காலம் ஓட்டு வாங்களோ சாதிக்கவில்லை என்றாலும் பரவாயில்லை


VSMani
ஜூன் 30, 2025 14:12

நமது சுகாதாரத்தை பேணிக்காக்கும் டாக்டர்களையும், நமது பொருளாதாரத்திற்கு வலு சேர்க்கும் பட்டய கணக்காளர்களையும் நாம் கவுரவிக்க வேண்டியது மிகவும் அவசியம் என்று சொல்லும் பிரதமர் மருத்துவக் கல்விக்கு சலுகை வழங்கலாமே. மருத்துவக் கல்வி படிக்க பல லட்சங்கள், கோடிகள் ரூபாய் பணம் தேவைப்படுகிறதே


Kulandai kannan
ஜூன் 30, 2025 08:30

ஜுன் 25 வரும்போதெல்லாம் பாஜக விடம் அடிவாங்கப் போவதை நினைத்து காங்கிரஸ் கதி கலங்குவது கண் கூடு. காங்கிற்கு நேரு, இந்திரா கழுத்தில் கட்டப்பட்ட பாறாங்கல் என்றால், திமுகவுக்கு கட்டு மரம். அவ்வளவு அராஜகம், நிர்வாகச் சீர்கேடு.


vivek
ஜூன் 29, 2025 22:09

சிகண்டி...பசங்க


சிகண்டி ரங் aka ஆரியா ப்பசங்க
ஜூன் 29, 2025 22:52

ரொம்போ எரியுதா??


சிகண்டி ரங் aka ஆரியா ப்பசங்க
ஜூன் 29, 2025 23:09

செய்வினை நிச்சயம் திரும்ப வரும்


சிகண்டி ரங் aka ஆரியா ப்பசங்க
ஜூன் 29, 2025 17:16

தலைமை நீதிபதிக்கு அடுத்த நிலையில் இருந்த முதல் மூன்று சீனியர் நீதிபதிகள் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தி ஒன்றிய அரசின் நீதிமன்ற வழக்கு மேலாண்மையில் அத்துமீறி தலையீடுவது குறித்து நாட்டு மக்களுக்கு தெரிவித்ததும் மோடி ராஜாங்கத்தின் போது தான் ....இதெயெல்லாம் செய்துவிட்டு நீதித்துறையை அடிமைத்தனத்தை பேசுவது எல்லாம் சாஃஷாத் ராமபிரான் பார்த்துக்கொண்டே தான் இருக்கிறார் ....


சிகண்டி ரங் aka ஆரியா ப்பசங்க
ஜூன் 29, 2025 17:11

பஷராத் அலி கான் மற்றும் முஹம்மத் மன்சூர் இருவரையும் அவர்கள் பணியாற்றிய உயர்நீதிமன்றங்களில் இருந்து வேறு மாநில உயர் நீதிமன்றங்களுக்கு உச்சநீதிமன்ற வழிமுறைக்கு மாறாக வேறு மாநில நீதிமன்றங்களுக்கு ட்ரான்ஸபெர் செய்த அநியாயத்தை கூசாமல் செய்த அரசு தான் இந்த மோடி அரசு .... இவர்கள் இப்படி பேசுவது விந்தையிலும் விந்தை ...


சிகண்டி ரங் aka ஆரியா ப்பசங்க
ஜூன் 29, 2025 17:07

K.M. ஜோசப் , பஷராத் அலி கான் , முஹம்மத் மன்சூர் , ஜெயந்த் படேல் , அகில் குரேஷி மற்றும் ராமேந்திர ஜெயின் ஆகியோரை உச்சநீதிமன்ற நீதிபதிகளாக கொலீஜியம் பரிந்துரைத்தபோது மோடி அரசு என்ன என்ன தகிடுதத்தங்களை செய்து அவர்கள் நீதிபதிகள் ஆக நியமனம் பெறவிடாமல் / காலதாமதம் செய்தது என்பது சமீப வரலாறு .... பரிந்துரைத்த சமயத்திலேயே ஜோசப் நியமனம் பெற்றிருந்தால் ஜோசப் தலைமை நீதிபதியாக ஒய்வு பெற்றிருப்பார் .... இதெல்லாம் செய்துவிட்டு இப்படி எல்லாம் பேச மனசாட்சியை கழட்டி வைத்துவிட்டு பேசினால் மட்டுமே சாத்தியம் ....


சிகண்டி ரங் aka ஆரியா ப்பசங்க
ஜூன் 29, 2025 16:40

நீதித்துறையை மோடியின் அடிமைத்துறையாக மாற்ற தானே NJAC கொண்டுவந்தார் உச்சநீதிமன்றம் சாதுர்யமாக அதை முறியடித்தது ... இருந்தும் நீதிபதிகள் நியமனத்தில் மோடி அரசு உச்சநீதிமன்றத்துக்கு தண்ணி காட்டியது ... நீதிபதிகளை நியமிக்காமல் காலம் தாழ்த்தியது ....டி எஸ் தாகூர் தலைமை நீதிபயாக இருக்கும் வரை மோடி அரசால் நீதிபதிகள் நியமனத்தில் இஷ்டத்துக்கு விளையாடமுடியாத இல்லை இருந்தது ... இல்லையெனில் இந்நேரம் நாடு என்ன கதியாகி இருக்குமோ தெரியாது ...இதெல்லாம் மோடி செய்துவிட்டு இப்படி எல்லாம் பேசுவது கடைந்தெடுத்த அயோக்கியத்தனம் ...ஆனால் அவருக்கு பின்னர் வந்த தலைமை நீதிபதிகள் அதே நேர்மையை கடைபிடிக்காததனால் உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் மோடி அரசின் முத்திரை RSS முத்திரை இப்போது பளிச்சென தெரிய ஆரம்பித்துவிட்டது .... இன்னும் 4 ஆண்டுகளுக்கு பிறகு தலைமைக்கு வரும் நீதிபதிகள் எல்லோரும் அந்த முத்திரையோடு தான் அந்த பதவியில் உட்காருவார்கள் ...அதை நினைத்தாலே பகீரென ஆகுது ....


சிகண்டி ரங் aka ஆரியா ப்பசங்க
ஜூன் 29, 2025 16:27

கோபால் சுப்பிரமணியத்தை உச்சநீதிமன்ற நீதிபதியாக விடாமல் தடுக்க மோடி சர்க்கார் என்னவிதமான அதிகார துஷ்ப்ரயோகம் செய்தது என்பது சமீப நிகழ்வு. இவரெல்லாம் நீதித்துறையின் அடிமைத்தனத்தை பற்றி பேசுகிறார் ... கலிகாலம் .... இந்த கோபால் சுப்பிரமணியம் தான் ஷொராபுதீன் ஷேக் போலி என்கவுண்டர் வழக்கை நேர்மையாக நடத்தியவர் ....சாத்தான் வேதம் ஓதுவது எல்லாம் ரொம்போ ஓவர் ...


சிகண்டி ரங் aka ஆரியா ப்பசங்க
ஜூன் 29, 2025 16:21

நீதிமன்றங்களும் தேர்தல் கமிஷனும் பத்திரைகைகளும் ஆளும் தரப்புக்கு சாதகமா ஒருதலைப்பட்சமாக செயல்படுவது எமெர்ஜென்சியை விட அபாயம் நிறைந்தது என்பது மக்களுக்கு புரிந்து தானே இருக்கு ???


சமீபத்திய செய்தி