லக்னோ சம்பவம் : விசாரணைக்கு உத்தரவு
லக்னோவில் : லக்னோ அருகே உள்ள கிராமத்தில் நேற்று அம்மை நோய் தடுப்பு மருந்து அளிக்கப்பட்ட 4 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உயிரிழந்த குழந்தைகளின் குடும்பத்திற்கு மத்திய பிரதேச அரசின் சார்பில் இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்த மத்திய பிரதேச சுகாதாரத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. உயிரிழந்த குழந்தைகள் அனைத்தும் 9 மாதத்திற்கு உட்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.