உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / புதிய அணை தேவையில்லை; புத்திமதி சொல்கிறார் மெட்ரோமேன்; பெரியாறு விவகாரத்தில் டுவிஸ்ட்

புதிய அணை தேவையில்லை; புத்திமதி சொல்கிறார் மெட்ரோமேன்; பெரியாறு விவகாரத்தில் டுவிஸ்ட்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருவனந்தபுரம்: 'முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்டத் தேவையில்லை. பழைய அணையை முறையாக பராமரித்தால் அடுத்த 50 ஆண்டுக்கு பாதுகாப்பானதாக இருக்கும்' என மெட்ரோ மேன் ஸ்ரீதரன் தெரிவித்தார்.தமிழக - கேரள எல்லையில் அமைந்துள்ள முல்லை பெரியாறு அணை பலவீனமாக உள்ளதாக கேரள அரசு தொடர்ந்து புகார் கூறி வருகிறது. தமிழகம் அதை மறுத்து அணை பாதுகாப்பாக உள்ளதாக கூறுகிறது. நிபுணர்களின் ஆய்விலும் அணை பாதுகாப்பாக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனினும், இந்த அணை உடையும் அபாயத்தில் உள்ளது என்றும், அப்படி உடைந்தால், இடுக்கி மாவட்டத்தில் உள்ள மூன்று அணைகள் பாதிக்கப்படும் என்றும் கூறிய கேரள அரசு, புதிய அணை கட்டுவதே இதற்கு தீர்வு என தெரிவித்திருந்தது.இதுகுறித்து, 92 வயதான பொறியாளர் ஸ்ரீதரன் (டில்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷனின் முன்னாள் நிர்வாக இயக்குனர், டில்லி மெட்ரோவின் கட்டுமானத்திற்கு தலைமை தாங்கிய பெருமைக்குரியவர். மெட்ரோமேன் என அழைக்கப்படுபவர்) கூறியதாவது: முல்லை பெரியாறு அணை நீர்த்தேக்கத்தில் இருந்து சுரங்கப்பாதை அமைத்தால் தமிழகத்திற்கு தேவையான தண்ணீர் வழங்கிட விட முடியும். அதை செய்தாலே போதும். புதிய அணை அவசியமில்லை. நான்கு அல்லது 5 சிறு தடுப்பணைகளை கட்டுவதன் மூலம் நீரோட்டத்தை திசை மாற்றி விடலாம்; அதன் மூலம் அணை நீர் மட்டம் பாதுகாப்பான அளவில் பராமரிக்கவும் முடியும்.

அதிக செலவுகள்

இப்படி செய்து விட்டால், முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்டத் தேவை இருக்காது. பழைய அணையை முறையாக பராமரித்தாலே அடுத்த 50 ஆண்டுக்கு பாதுகாப்பனதாக இருக்கும். ஒவ்வொரு 120 மீட்டருக்கும் பாதுகாப்பு தூண்கள் அமைத்தும் சிறிய வாய்க்கால்களை கட்டமைத்தும் பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கலாம். புதிய அணையை கட்டுவதற்கு அதிக செலவு ஆகும். குறைந்தபட்சம் 12 முதல் 15 ஆண்டு அணையை கட்டி முடிக்க தேவைப்படும். அதற்கு பதிலாக இந்த நடைமுறைகளை பின்பற்றலாம்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Diraviam s
ஆக 29, 2024 10:33

very good suggestion. He is the man behind Rameswaran bridge successful repair after it was damaged.


veeramani
ஆக 29, 2024 08:50

மெட்ரோமான் கூறியிருப்பது சரியான முடிவுதான் போன மாதம் பெரியாரி ஏறி சென்று வந்தேன் அணையில் நுறு முதல் நூற்று ஐ ந்து அடிவரை நீரை சேமித்து மாலியில் ஒரு துளை யிட்டு பைப்பை ஆளின் மூலம் லோர்க்காம் கொண்டுவரலாம் பின்னர் முல்லையாற்றில் வைகை அனைவரை இந்த ஈர் செல்லும். இதனால் பென்னிகுயிக் கட்டின பெரியார் ஆணை பாதுகாப்பாக இருக்கும்


இறைவி
ஆக 29, 2024 08:33

ரிடயர்மெண்ட்டுக்குப் பிறகு அனுபவம் பெற்றவர்கள் தங்கள் கருத்தை சொல்லக் கூடாதா? வெற்றிகரமான நீண்ட பொறியியல் அறிவு உள்ளவர்கள் தங்கள் அனுபவ அறிவு தங்களுடன் மறைந்து விடாமல் இருக்க இம்மாதிரி அனுபவ பகிர்வு என்பது எதிர்கால சந்ததியினருக்கு முக முக்கியம். கொஞ்சம் கூர்ந்து சிந்தித்தால் ஆதி காலம் தொட்டு நமது சமுதாயம் அனுபவ அறிவையே கொண்டாடியிருக்கிறது. ஏட்டறிவு என்பது இரண்டாம் பக்ஷம்தான். சமத்துவ கல்வியில் தேர்வு எழுதாமல் படித்த தமிழனுக்கு இது புரியாது. இன்னுமொரு முக்கிய விஷயம். ஶ்ரீதரன் ஒரு மலையாளி. ஆனால் அவர் சொல்லிய விஷயம் தமிழ் நாட்டிற்கு சாதகமானது.


Dharmavaan
ஆக 29, 2024 08:52

மேன்மையானவர்கள் இந்த எல்லை பேதம் பார்ப்பதில்லை ..அவர்க்கு இந்திய நாடு தான் எல்லை


பாமரன்
ஆக 29, 2024 07:57

இவர் சொன்னது லாஜிக்காகவும் தமிழ் நாட்டுக்கு சாதகமாகவும் இருப்பதால் பகபகபகன்னு பாஞ்சு வந்து திட்ட போகும் பகோடாஸ் கவனத்திற்கு... இவர் சென்ற பாராளுமன்ற தேர்தலில் நம்ம கம்பெனி சார்பாக நின்று பல்ப் வாங்கியவர்... பார்த்து திட்டுங்கோள்...


தம்பையா
ஆக 29, 2024 07:43

ரிடையரானப்புறம் எல்லோரும் எல்லா சப்ஜெக்டலயும்.கருத்து சொல்லுவாங்க.


Ramesh
ஆக 29, 2024 08:01

இப்ப நீங்க சொல்வது போல் தானே


Srinivasan K
ஆக 29, 2024 08:30

what is wrong with this message after retirement, he established metro in many cities including New Delhi. kerala government is approaching the issue with political motive


Anand
ஆக 29, 2024 10:48

ஆனால் இவர் தன்னோட சப்ஜெக்ட் பற்றி தான் சொல்கிறார், இவர் செயல்படுத்திய கொங்கன் ரயில்வே திட்டம் மிகவும் சிறப்பானது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை