உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பார்வதியிடமிருந்து 14 வீட்டு மனைகளை திரும்ப பெற்றுக்கொள்ள ‛முடா சம்மதம்

பார்வதியிடமிருந்து 14 வீட்டு மனைகளை திரும்ப பெற்றுக்கொள்ள ‛முடா சம்மதம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பெங்களூரு: கர்நாடகா முதல்வர் சித்தராமையா மனைவிக்கு ஒதுக்கிய 14 வீட்டு மனைகளை திரும்ப பெற்று கொள்ள ‛முடா' சம்மதம் தெரிவித்துள்ளது.முடா வழக்கில் முதல்வர் சித்தராமையா மீது லோக் ஆயுக்தா போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அமலாக்கத் துறையும் வழக்குப் பதிவு செய்தது.இந்நிலையில் தனக்கு வழங்கிய 14 வீட்டு மனைகளையும் திரும்பப் பெற்றுக்கொள்ளுங்கள்' என, 'முடா'வுக்கு கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் மனைவி பார்வதி எழுதிய கடிதம் வெளியானது.முடாவுக்கு கடிதம் எழுதும்படி, மனைவி பார்வதிக்கு சித்தராமையா கூறி இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.இது குறித்து சித்தராமையா கூறியது, என மனைவி எடுத்த முடிவை நான் வரவேற்கிறேன். 14 வீட்டு மனைகளையும்‛முடா'விடம் திரும்ப ஒப்படைக்கிறோம் என்றார். இன்று 'முடா' வெளியிட்டுள்ள அறிவிப்பில், சித்தராமையா மனைவி பார்வதி தெரிவித்துள்ளபடி 14 வீட்டு மனைகளையும் திரும்ப பெற்றுக்கொள்ள முடா நிர்வாகம் சம்மதம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 31 )

siva
அக் 03, 2024 18:49

முன்பெல்லாம் அரசியலுக்கு வருபவர்கள் தம் சொத்து சுகத்தையிழந்து மக்கள் நலனில் அக்கறையுடன் செயற்படுவார்கள் ஆனால் இன்றைய நிலமை???


அண்ணாமலை ஜெயராமன்
அக் 03, 2024 00:16

திருடிய பொருளை திரும்ப கொடுக்கிறோம். மன்னித்து விடுங்கள்


Anu Sekhar
அக் 02, 2024 22:28

செந்தில் பாலாஜி வழக்கு உங்களுக்கு புரியவில்லை. சிறையில் இருந்துவிட்டு வாருங்கள். எப்படித்தான் இந்த மாதிரி ஊழல் பேர்வழிகளை ஒழிப்பது ?


S MURALIDARAN
அக் 02, 2024 20:56

திருப்பிக் கொடுத்து விட்டால் குற்றம் செய்யவில்லை என்று ஆகி விடுமா? நீதிமன்றங்கள் தவறான முன் உதாரணங்களை உருவாக்கி தண்டனை சட்டங்களை நீர்த்துப் போக விடக்கூடாது.


பேசும் தமிழன்
அக் 02, 2024 11:22

திருடி மாட்டிக்கொண்ட பின்பு ...திருடிய பொருளை திரும்ப கொடுத்து விட்டால் ....தவறு இல்லையா ....அதற்கு தண்டனை கிடையாதா ????


NAGARAJAN
அக் 02, 2024 08:00

அம்மையார் ஜெயலலிதா போல


Ethiraj
அக் 02, 2024 06:41

Officials who have alloted the plots to be dismissed immediately. After due process of law he must be jailed. Colluding with politicians and commiting illegal work must be taken seriously


நிக்கோல்தாம்சன்
அக் 02, 2024 06:10

அப்போ பார்வதி தவறு செய்துள்ளாள் , தவறு செய்தவர்களுக்கு தண்டனை என்பது இந்திய நீதிமன்றங்களின் கடமை அல்லவா , இப்போ நீதிமன்றங்கள் தானாக இந்த வழக்கினை தெரிவு செய்து பார்வதிக்கு தண்டனை கொடுக்குமா ?


J.V. Iyer
அக் 02, 2024 05:22

அப்புறம் என்ன? முதல்வர் சித்தராமையா புனிதமானவர் என்று போற்றப்படுவர், சிறையில் இருந்து வெளியே வந்து அமைச்சரான தியாகியைப்போல.


Raj S
அக் 02, 2024 00:19

நீதிமன்றங்களை இழுத்து மூடிவிடுவதே நல்லது... இந்த மாதிரி தகுதி இல்லாத மனிதர்கள் நீதி மன்றத்தை நடத்த விடறது மக்களுக்கு செய்யும் துரோகம்... ஊழல் செஞ்சேன்னு சொல்லி அத திருப்பி குடுத்தா தப்பு செய்யலையா... ஆனா எல்லா திருட்டு தனத்துக்கும் திருட்டு திராவிடன் முன்னோடி...


புதிய வீடியோ