வாசகர்கள் கருத்துகள் ( 2 )
சினிமா என்பது ஒரு கேளிக்கை. அதை மக்களுக்கு கட்டயமாக கிடைக்கவேண்டும் என்று அரசுகள் சொல்லமுடியாது. இன்றைய நிலையில் திரை அரங்கத்தில் வெளி வரும் ஒரு திரைப்படம் அடுத்த இரண்டு மணிநேரத்தில் இணையத்தளத்தில் திருட்டுத்தனமாக வெளியிடப்படுகிறது. இதனால் திரையரங்கிற்கு பெருமளவு நஷ்டம் ஏற்படுகிறது. மறுபுறம் திரையரங்கிற்கு விதிக்கப்படும் மாநில அரசின் கூடுதல் வரிகள், மிக பெரியளவில் உயர்ந்துள்ள மின்சார கட்டணம், டிஸ்ட்ரிபியூட்டர் மற்றும் தயாரிப்பாளர்கள் கொடுக்கும் 20 அல்லது அதிகபட்சம் 30 சதவிகித பங்கில் ஒரு திரையரங்கை நடத்துவதே பெரும்பாடு. ஊழியர்களின் சம்பளம் மற்றும் பராமரிப்பு செலவுகளும் அதிகம். ஆதலால் திரையரங்குகள் அவர்கள் கட்டணத்தை திரை அரங்கின் வசதிகளுக்கு ஏற்ப அவர்களே நிர்ணயிக்க உரிமை கொடுக்கவேண்டும். இன்றைய நிலையில் பல அரங்குகள் இடித்து ஷாப்பிங் மால், அடுக்கு மாடி குடியிருப்புகள், கலியாண மண்டபங்களாக மாறிவிட்டது . மற்றுமொரு தலைவலி OTT வெளியீடு.
சினிமா என்பது கர்நாடகாவில் பணச்சலவைக்கு பயன்படுத்தப்படவில்லை என்பது போல தெரிகிறது...