உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தோழி துபாய்க்கே போய்விட்டாள்; நாங்கள் இன்னும் வீடு சேரவில்லை

தோழி துபாய்க்கே போய்விட்டாள்; நாங்கள் இன்னும் வீடு சேரவில்லை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பெங்களூரு: பெங்களூரு போக்குவரத்து நெரிசல் தொடர்பாக சமூக வலைதளத்தில் இளம் பெண்கள் குமுறலுடன் பதிவிட்டுள்ளது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.கர்நாடக தலைநகர் பெங்களூரில் போக்குவரத்து நெரிசல் என்பது சர்வ சாதாரணம். ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு விரைவாக செல்ல வேண்டும் என்பதை நினைத்து கூட பார்க்க முடியாது.இந்நிலையில், பெங்களூரு போக்குவரத்து நெரிசலில் அன்றாடம் பொதுமக்கள் எப்படி சிக்கி திணறி வருகின்றனர் என்பதை சமூக வலைதள பிரபலங்களான பிரியங்கா மற்றும் இந்திராணி என்ற இளம் பெண்கள், பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளனர்.'எங்கள் தோழியை பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் இறக்கிவிட்டு, வீடு திரும்பினோம். விமானத்தில் சென்ற தோழி, மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சின் துபாயில் தரையிறங்கிவிட்டார். ஆனால், நாங்கள் இன்னும் டிராபிக்கில் சிக்கி விழி பிதுங்கி நிற்கிறோம்' என, குறிப்பிட்டு உள்ளனர்.அவர்கள் வெளியிட்டுள்ள இந்த வீடியோ பதிவு நகைச்சுவையாக இருந்தாலும், சிந்திக்கவும் வைத்திருக்கிறது. அவரைப் போலவே தாங்களும் இதுபோன்ற அனுபவத்தை சந்தித்ததாக பலரும் பதிவிட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Padmasridharan
ஜூலை 22, 2025 08:44

அறிவுக்களஞ்சியங்களே..அது ஆகாசம் sky இது நடைப்பாதை roadஎன்று படித்தவர்களுக்கு நன்றாக தெரியும். இது ஒரு வீடியோ வைரல், இதெற்கென்று ஒரு செய்தியா.


Srprd
ஜூலை 21, 2025 12:16

The IT companies, real estate companies and pol. have joint responsibility for the deterioration.


Natteem
ஜூலை 21, 2025 09:57

late news, has been on FB few weeks back


நிக்கோல்தாம்சன்
ஜூலை 21, 2025 06:18

உங்களின் அவஸ்தை காங்கிரசின் ஊழலுக்கு ஒரு எடுத்துக்காட்டு


chandran
ஜூலை 21, 2025 12:32

பிஜேபி ஆட்சிக்கு வந்தால் பெங்களூரு டிராபிக் சரியா ஆயிடுமா? சும்மா அரசியல் பேசாதீங்க சார்.


அப்பாவி
ஜூலை 21, 2025 05:05

வீட்டை துபாய்க்கு மாத்திப்பாருங்க.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை