உள்ளூர் செய்திகள்

தேசியம்

ரூ.3 லட்சம் கோடி இலக்கு!இந்த ஆண்டு, நம் ராணுவ தளவாட உற்பத்தி, 1.60 லட்சம் கோடி ரூபாயை தாண்டும் என எதிர்பார்க்கிறோம். 2029-ம் ஆண்டுக்குள், 3 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான ராணுவ உபகரணங்களை உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளோம். இந்த ராணுவத் திறன் போருக்காக அல்ல; தற்காப்புக்கானது.ராஜ்நாத் சிங்ராணுவ அமைச்சர், பா.ஜ.,சிறைக்கு செல்வர்!ஊழலை ஒழித்து, ஊழல் செய்தவர்களை சிறைக்கு அனுப்புவதில் பிரதமர் மோடியின் அரசு உறுதியாக உள்ளது. சோனியா குடும்பத்தினர் ஊழல் செய்து பணத்தைக் குவித்து வைத்திருந்தால் ஒவ்வொரு பைசாவும் அவர்களிடமிருந்து மீட்கப்படும். கவுரவ் பாட்டியாசெய்தித் தொடர்பாளர், பா.ஜ.,400 ரூபாய் கூலி!மஹாத்மா காந்தி ஊரக வேலைத் திட்டத்திற்கு மத்திய அரசு கடந்த 10 ஆண்டுகளாக மிகக் குறைந்த நிதியையே ஒதுக்குகிறது. மேலும், 7 கோடி பேரை திட்டத்தில் இருந்து நீக்கியுள்ளது. ஊரக வேலை உறுதித் திட்ட தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கு, 400 ரூபாய் கூலியும், ஆண்டுக்கு, 150 நாள் வேலையும் வழங்க வேண்டும். மல்லிகார்ஜுன கார்கேதலைவர், காங்கிரஸ்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

N DHANDAPANI
ஏப் 18, 2025 20:21

இம்மாதிரியான பேச்சுக்கள் காங்கிரஸ் தலைவர்கள் பேசி வருவது மிகவும் வருத்தம் அளிக்கக் கூடியது.ஏற்கனவே விவசாய தொழிலுக்கு ஆட்கள் குறைவாக இருக்கும் உண்மை அனைவருக்கும் தெரிந்திருக்கும் பொழுது 250 ரூ கூலி வாங்கும் மனிதர்களுக்கு 400 ரூ கொடுக்க வேண்டும் என்பதும் விவசாயம் அல்லாத வேலையை செய்ய வேண்டும் என்பதும் விவசாயிகள் வயிற்றில் அடிப்பதை தவிர வேறு என்ன...... ஒருபுறம் இதை செய்து கொண்டு விவசாயிகள் போர்வையில் போராடும் இடைத்தரகர்களுக்கு ஆதரவு அளிப்பும் என்ன ஒரு நாடகம் ......மிக மிக தவறான கொள்கைகளை இந்த கட்சி நடைமுறைப்படுத்தி வருகிறது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை