உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / புதிய ஜி.எஸ்.டி. விதிமுறைகள் நாளை முதல் அமல்

புதிய ஜி.எஸ்.டி. விதிமுறைகள் நாளை முதல் அமல்

புதுடில்லி : ''நாடு முழுதும் நாளை முதல், புதிய ஜி.எஸ்.டி. விதிமுறைகள் அமலுக்கு வருகின்றன. இதன் மூலம் மக்கள் கைகளில் 2 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு பணப் புழக்கம் ஏற்பட்டு, உள்நாட்டின் நுகர்வு அதிகரிக்கும். விலைவாசியும் கணிசமாக குறையும்,'' என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.வர்த்தகர்கள், ஏற்றுமதியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு ஏற்படும் சுமையை குறைக்கும் வகையில், நான்கு அடுக்குகளாக இருந்த ஜி.எஸ்.டி. எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி, இரண்டு அடுக்குகளாக எளிமைப்படுத்தப்பட்டது. 5, 12, 18 மற்றும் 28 சதவீதம் என நான்கு அடுக்குகளாக இருந்த ஜி.எஸ்.டி., இனி 5 மற்றும் 18 என இரு அடுக்குகளாக மாற்றப்பட்டது. புகையிலை உள்ளிட்ட ஆடம்பர பொருட்களுக்கான ஜி.எஸ்.டி. 40 சதவீதமாக உயர்த்தப்பட்டு உள்ளது. கோவில்பட்டியில் நேற்று நடந்த தமிழ்நாடு தீப்பெட்டி தொழில் நூற்றாண்டு விழாவில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், விழா மலரை வெளியிட்டார். அவர் பேசியதாவது: வரும், 2047க்குள் தென் மாவட்டங்கள் வளர்ச்சியடைந்த மாவட்டங்களாக மாறும். ஜி.எஸ்.டி. குறைப்பு என்பது வெறும் மாற்றம் அல்ல; புரட்சி. பிரதமர் மோடி வழங்கிய தீபாவளி பரிசை மக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். இதன் மூலம் 375 பொருட்கள் விலை குறையும். குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர், நடுத்தர குடும்பத்தினர், ஏழை, எளிய மக்கள் பெருமளவில் பயன் பெறவுள்ளனர். அரசுக்கு 2 லட்சம் கோடி வருவாய் குறையும். எனினும், உள்ளூர் நுகர்வு அதிகரிப்பு காரணமாக பொருளாதாரத்திற்கு கைகொடுக்கும். அத்தியாவசிய பொருட்களின் விலை குறையும். உதாரணத்திற்கு, அதிக அளவில் சோப் நுகர்வு இருந்தால், உற்பத்தியாளர் அதன் உற்பத்தியை அதிகரிக்க வேண்டி இருக்கும். இதற்காக அவர் வேலைக்கு கூடுதல் ஆட்களை நியமிக்க வேண்டும். நியமித்தால், அவர்களுக்கான வருவாய்க்காக வரி செலுத்த வேண்டும். அதன் மூலம், அரசுக்கு வருவாய் கிடைக்கும். இந்த நுகர்வு கலாசாரம் சங்கிலி போல தொடர்ந்து நடப்பது, பொருளாதாரத்திற்கு நல்லது. இவ்வாறு நிர்மலா சீதாராமன் பேசினார்.

எந்த பொருட்கள் விலை குறையும்?

உணவு மற்றும் மளிகையில் 99 சதவீத பொருட்கள், 12ல் இருந்து 5 சதவீத ஜி.எஸ்.டி.க்கு கொண்டு வரப்பட்டு உள்ளன. சோப், ஷாம்பு, பேபி டயப்பர், டூத் பேஸ்ட், ஷேவிங் லோஷன், ரேசர் விலை கணிசமாக குறையும். டயர் விலை 300 முதல் 2,000 ரூபாய் வரை குறைகிறது. டிராக்டர் 23,000 முதல் 63,000 வரை விலை குறையும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 23 )

Ran
செப் 22, 2025 09:28

எங்கள் பணத்தை எங்களுக்கே தீபாவளி பரிசா? இந்த விளம்பரத்தை நம்புபவர்கள் அடி முட்டாள்கள். ஏனென்றால் எலக்ஷன் மிக விரைவில் வரப்போகிறது.


Karuthu kirukkan
செப் 22, 2025 05:58

வரி குறைப்பு வரவேற்கத்தக்கது ஆனால் இந்த வரி குறைப்பை , கடை ,நிர்வன முதலாளிகள் உடனடியாக அமல் படுத்துவார்களா , அவர்கள் பழைய வரியை நுகர்வோர்களாகிய மக்களிடம் வசூலிப்பார்கள் ,ஊராட்சி, நகராட்சிகளில் இந்த வரி மாற்ற அறிவிப்பை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் ..இல்லையென்றால் மாற்றம் செய்து பயன் இல்லை.. வரிமாற்றம் மாற்றமில்லாமல் இருப்பது போல மத்தியரசின் மதிப்பு மக்களின் மனதில் இடம்பெறும்...2026 நோக்கி


Palanisamy Sekar
செப் 22, 2025 00:01

இன்னோர் செய்தியை சொல்ல மறந்துவிட்டேன். பால்பொருட்களுக்கு வெறும் 5 சதம்தான் வரி. முன்னர் இந்தமாதிரி 18 சதம் இப்போது குறைந்து வெண்ணை நெய் போன்ற பால்பொருட்கள் குறைவதால் பெண்களின் கவனம் மோடிஜியின் ஆட்சிக்கு வரவேற்ப்பினை கொடுப்பார்கள். மென்மேலும் வாக்கு சதம் கூடிக்கொண்டே செல்லும். ஆக மொத்தத்தில் எதிர்க்கட்சிகளுக்கு பால் ஊற்றுவது இந்த வரிவிதிப்பின் ஆகச்சிறந்த பலன் என்றே சொல்லலாம். குழந்தைகளும் நோயாளிகளும் இனி ஊட்டசத்துடன் மகிழ்வான வாழ்க்கையை வாழ முடியும். ஜிம் போவோருக்கும் வரி விகிதம் வெறும் 5 சதம் மட்டுமே. உடலுக்கும் உயிருக்கும் எதிரியான சாராயத்துக்கு பார்ட்டிலுக்கு பத்து ரூபாய் கொள்ளையடிக்கும் கும்பல்களுக்கு இந்த வரிக்குறைப்பு எரிச்சலையே கொடுக்கும். உயிர் காக்கும் மருந்துகளின் விலை குறைப்பை பாராட்ட வார்த்தைகளே இல்லை எனலாம்.


Bhakt
செப் 21, 2025 23:53

Please do a speedy ITR refund processing. Useless anti middle class govt and its IT dept using middle class data for its ITR AI ing,


Palanisamy Sekar
செப் 21, 2025 23:53

இந்திய பொருளாதார உயர்வின் தாக்கமே தற்போதைய GST வரிகளில் பெருத்த மாற்றத்தை கொண்டுவந்துள்ளது. உயிர் காக்கும் மருந்துகளில் பலவற்றிற்கு ZERO வரியை அறிவித்திருப்பது மகிழ்ச்சியான செய்தி. பால்பொருள்களுக்கு பலவற்றிற்கு வெறும் 5 சதம் மட்டுமே வரி. chena பனீர் போன்ற முன்னரே பாக்கட் செய்த பொருட்களுக்கும் வரி இல்லை. இது வடஇந்தியாவில் பலத்த வரவேற்ப்பினை பெரும். பாதாம் பிஸ்தா போன்ற உளர் பொருட்களுக்கு பன்னிரெண்டிலிருந்து 5 சதம் மட்டுமே வரி. இதனால் ஊட்டச்சத்து பல்கி பெருகும் வாய்ப்பு அதிகம். ஹேர் ஆயில், ஷாம்பு, ஷேவிங் கிரீம், பற்பசை குளிக்கும் சோப்பு, துணி சோப்பு போன்றவற்றிற்கு 18 லிருந்து வெறும் 5 சதம் மட்டுமே வரி. இதனால் கிட்டத்தட்ட நான்கு மடங்கு வரி குறைந்து மிக மலிவாக கிடைக்கும். இதனால் நடுத்தர மக்களின் சேமிப்பும் அதிகரிக்க வாய்ப்பு உண்டு. சமையலறைக்கு தேவைப்படுகின்ற பொருட்களுக்கும் இதே போன்று 28 லிருந்து வெறும் 18 ஆக குறைப்பு. மூன்று சக்கர வாகனங்களுக்கும், 32 இன்ச் தொலைக்காட்சி பெட்டிகளுக்கு 28 லிருந்து 18 ஆக குறைப்பு. சிரியவகை கார்களும் வெகுவாக விலை குறையும். காரணம் 28 லிருந்து 18 ஆக குறைந்திடும். வாஷிங் மெஷின் விலையும் AC விலையும் வெகுவாக குறைந்திடும். செல்வந்தர்கள் முதல் நடுத்தர மக்கள் உட்பட ஏழைகளுக்கும் இந்த வரி குறைப்பு மிகுந்த மகிழ்ச்சியை கொண்டுவரும். மோடிஜியின் புகழ் இன்னும் விண்ணை தாண்டி செல்லும். இதனால் காங்கிரஸ் உட்பட இண்டி கூட்டணி தலைகளுக்கு பெருத்த ஏமாற்றத்தை கொடுக்கும். அதனால் மனமுடைந்த அந்த தலைகள் இதுநாள் வரை ஏன் வரியை குறைக்கவில்லை என்று புலம்பி தீர்க்கும். காங்கிரஸ் ஆட்சியில் விட்டுச்சென்ற சவூதிக்கு மட்டுமே பல லட்சம் கோடி கடனை அடைக்கவே பல ஆண்டுகள் ஆயிற்று என்பதை அரசியல் அறிந்தோர் ஏற்றுக்கொள்வார்கள். இதுநாள் வரையில் பெட்ரோல் விலையில் சாதனையாக தொடர்ந்து நிலையான விலையை கட்டிக்காப்பதும் விலையேற்றம் இல்லாமல் கொடுப்பதும் பாஜகவின் சாதனை எனலாம். உலகெங்கும் அனுதினமும் விலைகளில் ஏற்றமே காணப்பட்டாலும் கூட இந்தியாவில் மட்டுமே விலை ஸ்டாண்டர்டு ஆக இருப்பது ஒவ்வோர் இந்தியனுக்கும் இதனையும் குறை சொல்வோர் ஒன்று இழந்தோராக இருக்கணும் இல்லையேல் தேசத்துக்கு எதிரான மனப்பக்குவம் கொண்டோராக இருக்க வேண்டும். எப்படியாயினும் இந்த வரிகுறைப்பால் மோடிஜியின் நிர்வாக திறமையை பாராட்டியே ஆகணும். சபாஷ் மோடிஜி


sankaranarayanan
செப் 21, 2025 19:42

திராவிட மாடல் அரசில் சாராயம் மப்பில் இருப்பவர்களுக்கு சாராயம் விலை இதனால் குறையுமா அல்லது அதிகரிக்குமா என்றே புரியவில்லை


Venugopal S
செப் 21, 2025 18:48

இதன் மூலம் மக்கள் வாழ்வாதாரம் பெருகும், வாங்கும் சக்தி அதிகரிக்கும், பொருளாதாரம் உயரும், விலைவாசி குறையும் என்றால் இத்தனை வருடங்களாக நாட்டின் மீதும் மக்கள் மீதும் அக்கறை இல்லாததால் தான் குறைக்காமல் இருந்ததா மத்திய பாஜக அரசு என்ற கேள்வி எழுகிறது!


RAAJ68
செப் 21, 2025 17:17

இவ்வளவு நாட்களாக கொள்ளையடித்ததை திருப்பிக் கொடுங்கள்.காபி சாப்பிட சென்றால் ஐந்து ரூபாய் டாக்ஸ் போடுறான் ஹோட்டல்ல.சாப்பிடுறவனுக்கு எதுக்கு டேக்ஸ்.விக்கிறவனுக்கு தான் போடணும். என்னமோ பெரிய சலுகை கொடுத்து விட்டாற் போல தம்பட்டம் அடித்துக் கொள்கிறீர்கள். பணம் மிச்சமாம். எல்லாவற்றையும் பிடுங்கி ஆயிற்று. கையில் ஒரு 500 ரூபாய் கூட கிடையாது. எங்கிருந்து பணம் வரும். ஹோட்டலில் சென்று சாப்பிடுபவர்களுக்கு வரியை அறவே ரத்து செய்யுங்கள்.


Loganathan Kuttuva
செப் 21, 2025 20:29

Small shops are exempted from GST.Their turnover is less than fifty lakhs per annum.


ஆரூர் ரங்
செப் 21, 2025 11:45

மேற்கு மற்றும் வட மாநிலங்களில் கடுமையான வெள்ள பாதிப்பு உள்ளதால் எண்ணெய் பருப்பு கோதுமை பொருட்கள் விலை ஏறலாம். இரண்டாம் போக பயிர் அறுவடையை பொருத்து விலை குறையலாம். ஆளும் கட்சிகாரர்கள் மிரட்டி வாங்கும் மாமூல் செலவுதான் விலைவாசி ஏற்றத்திற்கு முக்கிய காரணம்.


Perumal Pillai
செப் 21, 2025 09:58

பூந்தமல்லியில் ஒரு பிரசித்தமான சங்கீதம் போல இனிமையான சைவ ஓட்டலில் ரூபாய் 48 மதிப்பிலான ஒரு உளுந்து வடை விலை குறையுமா ?


புதிய வீடியோ