உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஏர்செல் - மேக்சிஸ் ஊழல் வழக்கில் புதிதாக சம்மன்

ஏர்செல் - மேக்சிஸ் ஊழல் வழக்கில் புதிதாக சம்மன்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி:'ஏர்செல் - மேக்சிஸ்' ஊழல் வழக்கில், மலேஷிய தொலைதொடர்பு நிறுவனமான மேக்சிஸ் மற்றும் அதன் முன்னாள் இயக்குநர் அகஸ்டஸ் ரால்புக்கு புதிதாக 'சம்மன்' அனுப்ப சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2006ம் ஆண்டு மத்திய நிதியமைச்சராக, காங்கிரசைச் சேர்ந்த சிதம்பரம் பதவி வகித்தபோது, ஏர்செல் நிறுவனத்தில் மலேஷியாவின் மேக்சிஸ் நிறுவனம், 3,560 கோடி ரூபாய்க்கு முதலீடு செய்ய, அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்தின் அனுமதி கோரியது. அப்போது சிதம்பரம் விதிகளுக்கு புறம்பாக அனுமதி வழங்கியதாகவும், இதன் மூலம் அவரது மகன் கார்த்தியின் நிறுவனம் பலன் அடைந்ததாகவும் புகார் எழுந்தது. இது தொடர்பாக சிதம்பரம், அவரது மகன் கார்த்தி உள்ளிட்டோருக்கு எதிராக சி.பி.ஐ., அமலாக்கத்துறை தனித்தனியே வழக்குப்பதிவு செய்தது. இவ்வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், சி.பி.ஐ., கோரியபடி, மலேஷியாவின் மேக்சிஸ் நிறுவனம் மற்றும் அதன் முன்னாள் இயக்குநர் அகஸ்டஸ் ரால்புக்கு சம்மன் அனுப்ப சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

joe
செப் 23, 2025 12:47

இதன் சொத்துக்கள் சீனாவிடம் அடகு வைத்துவிட்டது தி மு க .


ஆரூர் ரங்
செப் 22, 2025 11:47

முக்கிய கு‌ற்ற சாட்டப்பட்டவர்க‌ள் சிலர் மலேசியர்கள். ஆனால் அவர்களை விசாரிக்க அந்நாட்டு அரசு அனுமதி மறுக்கிறது என்கிறார்கள். அனந்தகிருஷ்ணன் இறந்தே விட்டார். வழக்கு சீக்கிரத்தில் முடிய வாய்ப்பில்லை.


KOVAIKARAN
செப் 22, 2025 09:51

இந்த வழக்கு 2010 லிருந்து நடந்து வருகிறது. இது முடிவுக்கு வர இன்னும் எத்தனை வருடங்கள் ஆகும்?


RAAJ68
செப் 22, 2025 08:00

இன்னும் குறைந்தது 50 ஆண்டுகள் இந்த வழக்கு நீட்டிக்கப்படும் சம்பந்தப்பட்டவர்கள் எல்லோரும் உயிருடன் இருக்க மாட்டார்கள். தூங்கும் நீதித்துறையை கேட்பதற்கு மத்திய அரசுக்கு திராணி இல்லை.


Thravisham
செப் 22, 2025 07:10

ஆஹா மறு மறுபடியும் சம்மனா? இந்த கொலிஜிய நீதி 2999 வரை சம்மன் கொடுத்துக்கொண்டே தூங்குமா?


Modisha
செப் 22, 2025 05:53

Our criminal justice tem is slow and politically slanted. This case and 2g are outstanding examples of lethargy and inaction in our courts. At this rate these cases will continue for another forty years.


D Natarajan
செப் 22, 2025 05:19

என்று முடியும் இந்த மேக்சிஸ் கேஸ். என்று முடியும் செட்டியாரின் எலெக்க்ஷன் கேஸ்.அறிவிலிகள் நிறைந்த நீதி துறை. உலகத்திலேயே மிக மோசமானது இந்தியாவின் நீதி துறை. பிஜேபி அரசு ஏதாவது செய்யுமா


தர்மராஜ் தங்கரத்தினம்
செப் 22, 2025 04:18

அந்த வழக்கு மட்டும் விரைவாகவும், நேர்மையாகவும் நடந்திருந்தால் கேடி சகோதரர்கள் எப்பொழுதோ உள்ளே இருந்திருப்பார்கள் ....


Kasimani Baskaran
செப் 22, 2025 03:53

என்னது... நிதித்துறையில் செட்டியாரின் பருப்பு வேகவில்லையா... சு சாமி தினமும் கீ கொடுத்தாலும் உச்சப்பஞ்சாயத்தார் ஒன்றும் செய்யாமல் விட்டபடியால் நீ[நி]தித்துறை என்ன லட்சணத்தில் இயங்குகிறது என்பது புரிந்திருக்கும்...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை