உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நியூட்டன் கண்டுபிடிப்புக்கு முன்னரே வேதங்களில் புவியீர்ப்பு விசை பற்றிய குறிப்புகள் : ராஜஸ்தான் கவர்னர் பேச்சு

நியூட்டன் கண்டுபிடிப்புக்கு முன்னரே வேதங்களில் புவியீர்ப்பு விசை பற்றிய குறிப்புகள் : ராஜஸ்தான் கவர்னர் பேச்சு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஜெய்ப்பூர்: '' விஞ்ஞானி ஐசக் நியூட்டன் புவியீர்ப்பு விசையை கண்டறிவதற்கு முன்னரே, நமது வேதங்களில் அது குறித்து குறிப்பிடப்பட்டு உள்ளது,'' என ராஜஸ்தான் கவர்னர் ஹரிபாகு கிஷன்ராவ் பக்டே கூறியுள்ளார்.ஜெய்ப்பூரில் உள்ள இந்திரா காந்தி தேசிய திறந்த வெளி பல்கலையின் பிராந்திய மையத்தில் நடந்த பட்டமளிப்பு விழாவில் அவர் பேசியதாவது: அறிவு பாரம்பரியத்தில் உலகில் சிறந்த நாடாக இந்தியா விளங்கியது. ஒட்டு மொத்த உலகிற்கும் தசம அமைப்பை இந்தியா தான் அளித்தது. புவியீர்ப்பு விசை குறித்த ஆய்வை ஐசக் நியூட்டன் உலகிற்கு தாமதமாகத் தான் சொன்னார். ஆனால், இந்தியாவில் இது வேத புத்தகங்களில் நீண்ட காலத்திற்கு முன்பே கூறப்பட்டு விட்டது.மின்சாரம், விமானங்கள் குறித்து ரிக் வேதம் உள்ளிட்ட நமது வரலாற்று புத்தகங்களில் குறிப்புகள் உள்ளன. மஹரிஷி பரத்வாஜர் புத்தகத்தில் விமானம் குறித்த குறிப்புகள் இடம்பெற்றுள்ளது. 50 ஆண்டுகளுக்கு இது குறித்து நாசா கடிதம் வாயிலாக விளக்கம் கேட்டது.ஆங்கிலேயர் ஆட்சியின் போது, இந்தியர்களின் அறிவை கட்டுப்படுத்த முயற்சி நடந்தது. எனவே, இந்திய மாணவர்களின் அறிவுசார் திறனை அதிகரிப்பதும், அவர்களை இந்திய அறிவுடன் இணைப்பதும் முக்கியம். நாலந்தா மற்றும் தக்சிலா பல்கலை பற்றி அனைவரும் தெரிந்து இருப்பார்கள். உலகம் முழுவதிலும் இருந்து ஏராளமான மாணவர்கள் வந்துஇங்கு படித்தனர். அப்போது சமஸ்கிருதம் மட்டுமே இருந்தது. வேறு எந்த மொழியும் இல்லை. கில்ஜி ஆட்சியின் போது, நாலந்தா பல்கலை அழிக்கப்பட்டது. தற்போது புதிய நம்பிக்கையுடன் நாலந்தா பல்கலை மீண்டும் அமைக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 23 )

sasikumar
மார் 07, 2025 18:52

ஐயா, தஞ்சாவூர் பிரகதீசுவரர் ஆலயம் புவியீர்ப்பு விசையினால் கட்டப்பட்டது


JAYACHANDRAN RAMAKRISHNAN
மார் 07, 2025 09:46

ஹிந்தி வந்தால் தமிழ் அழிந்து போகும் என்ற மூட நம்பிக்கை உள்ளவர்களுக்கு இது செய்திகள் ஆச்சரியமாகத்தான் இருக்கும்.


अपावी
மார் 07, 2025 09:38

அப்போ எதுக்கு ஐ.ஐ.டி, என்.ஐ.டி எல்லாம்? எல்லோரையும் வேத பாடசாலைகளில் சேர்த்துடலாம். வேதத்தில் இல்லாதது ஒண்ணும் இல்லை.


தமிழன்
மார் 06, 2025 22:12

இப்படி ஏதாவது உளறவில்லை என்றால்தான் ஆச்சர்யமே


Kasimani Baskaran
மார் 06, 2025 21:52

வேதங்களில், உபநிஷத்துக்களில் இல்லாத விஞ்ஞானம் இதுவரை கிடையாது, இன்னும் வரப்போவது கிடையாது. ஆனால் பல ஆய்வு நூல்கள் மாக்ஸ் முல்லர் காலத்துக்கு முன்னரே திருடப்பட்டு விட்டன. வெள்ளைக்காரர்கள் நிறைய திருடி பிரிட்டிஷ் ஆவணக் காப்பகங்களில் வைக்கப்பட்டது. கிரகங்களின் நிலை இன்னும் கூட இந்திய முறைப்படி துல்லியமாக கணிக்கப்படுகிறது. காலக்கோட்பாடுகள் போன்றவை வெகுவாக விளக்கப்பட்டுள்ளது. சிக்கலான டிஎஸ்பி தொழில் நுணுக்கத்தில் கூட வேத கணிதம் உபயோகப்படுத்தப்படுகிறது.


அப்பாவி
மார் 07, 2025 11:11

என்னாது? வேதங்களை எல்காம் திருடிக்குட்டு போயிட்டாங்கள்ச? இப்போ இங்கே இருக்கறதெல்லாம் வேதம் இல்லியா? அதைப் படிச்சுட்டுதான் அமிச்சர் இப்பிடி உளறுறாரா?


Desabakthan
மார் 06, 2025 21:34

இது உண்மை என்றால் வேதங்களில் இன்னும் பல அறிவியல் கருத்துக்கள் இருக்கின்றன என்றே எடுத்துக்கொள்ளலாம். அப்படியானால் வேதங்களை தீவிரமாக ஆராய்ந்து புது அறிவியல் விதிகளை அறிவிக்கலாமே? நான் வேத சாஸ்திரங்களின் எதிரி இல்லை. அதே சமயம் இத்தகைய மேம்போக்கான கருத்துக்கள் எந்த பயனையும் தர போவதில்லை


TRE
மார் 06, 2025 20:29

பிஜேபியில எல்லாருமே பைத்திய காரண இருக்கார்கள்


பரஞ்சோதி,நாமக்கல்
மார் 07, 2025 06:36

அறிவாலயத்துல அடைப்பு எடுக்கிற புள்ளைக்கு எம்புட்டு அறிவு பாருங்கள்.


kailash
மார் 06, 2025 20:13

ரிக், யஜூர் சாம வேதங்கள் வாழ்க்கை நெறி முறைகளை தெரிவிக்கிறது. சுருக்கமாக சொன்னால் இக்கால சட்டங்கள் போல். அதர்வண வேதம் மந்திர தந்திர மந்திரிகங்கள் கொண்டவை. இந்த வேதத்தில் உள்ள சில மந்திரங்களை முறையாக உபயோகித்தால், கூடு விட்டு கூடு பாயும் சக்தியையும் பெறலாம். இதில் உள்ள ஒரு பகுதி ஆயுர்வேதம் மருத்துவ கலை பற்றியது. சாம வேதத்தில் உள்ளது கந்தர்வவேதம் நாட்டிய கலை, சப்த ஸ்வரங்கள் பற்றியது. ரிக் வேதத்தின் ஒரு பிரிவு தனுர் வேதம், சண்டை கலை பற்றியது. இவ்வாறு சொல்லி கொண்டே போகலாம். அறிவியல், கணிதம், தாதுகள் உலோகங்கள், அணு ஆயுத பற்றிய அனைத்தும் மேலே சொன்ன நான்கு வேதத்தினுள் அடங்கும். சந்தேகம் இருந்தால் கூகிள் செய்து பாருங்கள்.


அப்பாவி
மார் 06, 2025 20:12

மனிதனின் அறிவு வளர வளரத்தான் விஞ்ஞானம் வளர்கிறது. அடுத்தவனைக் கண்டு பொறாமைப் படாமல், புதிய விஞ்ஞான அறிவை நாம் கண்டு பிடிக்கணும். பிரிட்டிஷ்காரன் டயத்தில்தான் சி.வி.ராமனும், போசும் நோபல் பரிசு பெற்றனர். ராமானுஜம் இங்கிலாந்து போய் புகழ் பெற்றார். அரசியல் டுபாக்கூர்களை நம்பாதீர்கள்.


தர்மராஜ் தங்கரத்தினம்
மார் 06, 2025 19:47

இதை இவர் கூறும் முன்பே நானும் படித்திருக்கிறேன் ..... ஒரு எளிய உதாரணம், இன்றும் கூட விஞ்ஞானிகளால் சூரிய, சந்திர கிரகங்களின் சரியான நேரத்தை ஒரு வாரம் முன்புதான் கணிக்க முடிகிறது ... பஞ்சாங்கங்களில் அவை பல மாதங்களுக்கு முன்பே கணித்து, அச்சில் வந்துவிடுகின்றன .... பஞ்சாங்கம் தயாரிப்பவர்கள் பலர் பிராம்மணர்கள் கூட இல்லை .... கிரகண நேரங்களில் நம்மில் பலர் உணவுப் பண்டங்களில் தர்ப்பைப் புல் போட்டு வைக்கிறோம் .... அதற்கும் விஞ்ஞான ரீதியான விளக்கம் உண்டு .... நமது கண்டுபிடிப்புக்கள் அல்லது ஆய்வுகள் தொடரா வண்ணம் இயற்கைக் சீற்றம், விண்கல் தாக்குதல் நிகழ்ந்திருக்கலாம் என்கிறார்கள் ....


आपपावी அப்பாவி
மார் 06, 2025 20:41

விஞ்ஞானிகள் இன்னும் ஆயிரம் வருஷத்துக்கு கிரக நிலவரம் போட்டு வெச்சிருக்காங்க. பில்லியன் கணக்கில் நட்சத்திரங்களை கேட்டலாக் போட்டு வெச்சிருக்காங்க.


தர்மராஜ் தங்கரத்தினம்
மார் 06, 2025 23:51

அப்பாவி.. இருக்கலாம்.. விஞ்ஞானத்தையும் மீறியவை இயற்கை நிகழ்வுகள்.. ஈர்ப்பு விசை குறைவதால் பல துணைக்கோள்கள், பிரதான கோள்களை விட்டு சிறிது சிறிதாக விளங்குவதாகவும், நட்சத்திரங்களின் ஆயுளை சரியாகக் கணிக்க முடியாது என்றும் அவர்களே சொல்கிறார்கள்.. நான் சிறுவயதில் பார்த்த பவுர்ணமி முழுநிலவின் அளவு இப்போது இல்லையென உணர்கிறேன் ....


சமீபத்திய செய்தி