உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தேஜ கூட்டணி சட்டசபை கட்சித் தலைவராக நிதிஷ் தேர்வு: இன்று 11.30 மணிக்கு முதல்வராக பதவியேற்பு

தேஜ கூட்டணி சட்டசபை கட்சித் தலைவராக நிதிஷ் தேர்வு: இன்று 11.30 மணிக்கு முதல்வராக பதவியேற்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பாட்னா: தேசிய ஜனநாயக கூட்டணியின் சட்டசபை கட்சித் தலைவராக நிதிஷ்குமார் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இன்று (நவ.20) அவர் பீஹாரின் முதல்வராக பதவியேற்கிறார்.பீஹாரில் சட்டசபை தேர்தலில் மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியை பிடித்துள்ளது. 10வது முறையாக நிதிஷ்குமார் நாளை முதல்வர் பதவியேற்கிறார். அதன் முன்னோட்டமாக, தேசிய ஜனநாயக கூட்டணியின் அனைத்து எம்எல்ஏக்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=kfvdegyp&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0சாம்ராட் சவுத்ரி, சிராக் பாஸ்வான், விஜய்குமார் சின்ஹா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவராக நிதிஷ்குமாரை, எம்எல்ஏக்கள் ஒருமனதாக தேர்ந்தெடுத்தனர். அவரின் பெயரை சாம்ராட் சவுத்ரி முன்மொழிய, அனைத்து எம்எல்ஏக்களும் ஆதரித்து வாக்களித்தனர்.இதையடுத்து, ஆட்சி அமைக்க உரிமை கோரும், கவர்னர் ஆரிப் முகமதுவை சந்திக்கும் நிதிஷ்குமார், அவரிடம் எம்எல்ஏக்கள் ஆதரவு கடிதத்தை அளிப்பார். தொடர்ந்து, இன்று (நவ.20) காந்தி மைதானத்தில் பதவியேற்பு விழா நடக்கிறது. இந்த விழாவில், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, கூட்டணி கட்சிகளின் தலைவர்கள், தொண்டர்கள் உள்பட பலர் கலந்து கொள்ள உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

RAMESH KUMAR R V
நவ 19, 2025 20:43

பீகார் மக்களுக்கு வாழ்த்துக்கள். நல்லாட்சியை ஒட்டு மூலம் நிரூபித்துவிட்டீர்கள்.


Barakat Ali
நவ 19, 2025 18:25

துணை முதல்வர்ங்கிற பதவி உண்டுங்களா ????


Raman
நவ 19, 2025 22:01

Yes. One BJP and one Paswan..


ஆரூர் ரங்
நவ 19, 2025 17:26

நிதிஷ்குமார் தன் திருப்திக்கு கொஞ்சநாள் நாற்காலியில் அமரட்டும். ஆனால் உடல்நிலை சீராக இருக்கும்போதே தகுதியான நல்ல உடல்நலமுள்ள தலைவரிடம் பொறுப்பை ஒப்படைக்க வேண்டும் அதுதான் மாநிலத்துக்கு நல்லது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை