உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வீல் சேர் பற்றாக்குறையால் 80 வயது பயணி பரிதாப பலி: மும்பை விமான நிலையத்தில் சோகம்!

வீல் சேர் பற்றாக்குறையால் 80 வயது பயணி பரிதாப பலி: மும்பை விமான நிலையத்தில் சோகம்!

மும்பை: அமெரிக்காவின் நியூயார்க்கில் இருந்து மும்பைக்கு ஏர் இந்தியா விமானத்தில் மனைவியுடன் பயணித்த 80 வயது முதியவர் ஒருவர் வீல் சேர் கிடைக்காததால் 1.5 கி.மீ., தூரம் நடந்து சென்றார். இதனால், மாரடைப்பு ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.இறந்தவர் இந்திய அமெரிக்கா வம்சாவளியைச் சேர்ந்தவர். அமெரிக்க பாஸ்போர்ட் வைத்துள்ளார். நியூயார்க்கில் இருந்து ஏர் இந்தியா விமானத்தில் மும்பைக்கு மனைவியுடன் வர டிக்கெட் முன்பதிவு செய்தார். அப்போதே, தங்களுக்கு வீல்சேர் தேவை எனக்குறிப்பிட்டு இருந்தார்.இதன்படி கடந்த திங்கட்கிழமை ( பிப்.,12) அன்று மும்பை வந்தடைந்தார். விமான நிலையத்தில் போதிய வீல் சேர் இல்லை என தெரிகிறது. அவரது மனைவிக்கு மட்டும் வீல் சேர் வசதி செய்யப்பட்டது. முதியவரை சிறிது நேரம் காத்திருக்கும்படி ஊழியர்கள் கூறினர். ஆனால், மனைவியை தனியாக அனுப்ப விரும்பாத அந்த நபர், நடந்தே வருவதாக கூறினார். மனைவி வீல் சேரில் செல்ல, அவர் சுமார் 1.5 கி.மீ., தூரம் மெதுவாக கூடவே நடந்தே சென்றுள்ளார். விமான நிலையத்தில் குடியேற்ற சோதனை மையம் அருகே வந்த போது, முதியவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். உடனடியாக அங்கிருந்த மருத்துவ மையத்திற்கு அழைத்து செல்லப்பட்டு பிறகு, நானாவதி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.இது தொடர்பாக விமான நிலைய வட்டாரங்கள் கூறுகையில், முதியவர் வந்த விமானத்தில் மொத்தம் 32 பேர் வீல் சேர் தேவை எனக்குறிப்பிட்டு இருந்தனர். ஆனால், 15 வீல் சேர்கள் மட்டுமே தயார் நிலையில் இருந்தன என தெரிவித்தன.ஏர் இந்தியா செய்தித் தொடர்பாளர் கூறுகையில், வீல் சேர்களின் தேவை அதிகமாக இருந்ததால், அந்த பயணியை சிறிது நேரம் காத்திருக்கும்படி தெரிவித்தோம். ஆனால், அவர் மனைவியுடன் நடந்தே வருவதாக தெரிவித்தார். அவர் உயிரிழந்தது துரதிர்ஷ்டவசமான சம்பவம். அவரின் குடும்பத்துடன் தொடர்பில் உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 21 )

D.Ambujavalli
பிப் 17, 2024 06:23

Naan Palamurai. Us. Hongkong senrirukkiren. Ore. Samayam. Pathu, irupathu wheel chair. Vendumenraal. Sarru kaaththirukka vendi ullathu.


Jagadeesan Vaidyanathan
பிப் 17, 2024 01:56

Last month my wife and I had similar experience in Chennai ( Madras) airport. We had made specific requests for wheel chair for our journey from Chennai to Boston via Frankfurt. After checking in at Lufthansa counter in Chennai , we were told " We have shortage of wheel chairs . Please wait here till they return from boarding gates." Even after half hour . nothing turned up and the staff was unhelpful. From the adjacent counter, some other Airliner staff offered to help and took us to the boarding gate after paying them. Things were much better and prompt in FRA and BOS airports. My complaint to Lufthansa customer care elicited a routine, non committal reply. Is this the way Airlines attend to the senior citizens, differently abled and invalids ?Really callous. There is an urgent need to improve the situation.


Loganathan Kuttuva
பிப் 16, 2024 19:40

Battery car is provided to carry more passengers in many international airports.


Balaji
பிப் 16, 2024 17:27

தடுப்பூசி போட்டதால் கொரோனா கட்டுப்படுத்தப்பட்டது என்பது போல இருக்கிறது இந்த கதையும்.. இருவருக்கும் வீல்சேர் தேவை என்பதை பூர்த்தி செய்தார்களா அல்லது ஒன்று மட்டும் கேட்டார்களா என்பது சரிபார்க்கப்பட்டதா இந்த கதை எழுதுவதற்கு முன்? இவர்கள் ஒரு டிக்கெட்டில் மட்டும் வீல்சேர் கேட்டிருந்தால் அப்போது என்ன செய்வது? இந்த கதையை திரும்பப்பெறுவீர்களா.. இதற்குள் ஒரு கூமுட்டை அதானியை இழுக்கிறது..


Sridhar G
பிப் 16, 2024 14:32

100% correct , wheel chairs are shortage in mumbai airport, while transist international - domestic or domestic - international have to await more than 30- 1 hr. or have to walk... two months back myself and my father age of 82 awaited more than 45 minuits for wheel chair, finally we decided to procedd to gate by walk. this issues to be reolved by airport authority . thanks


Ramu
பிப் 16, 2024 14:28

நாம் என்னதான் முன்னேறியிருந்தாலும், நமது நாட்டு ஏர்லைன் கம்பனிகள் இன்னும் மனித உயிர்க்கும், மூத்தோருக்கும், முடியாதோருக்கும் தேவையான அடிப்படை விஷயங்களில் கோட்டை விட்டு விடுகின்றனர். வீல் சேர் போன்ற சிறிய விஷயங்களை கூட கவனிக்காமல் இருந்திருக்கிறார்கள். இன்றிய காலகட்டத்தில் 10 முதல் 15 பேர் வரை பயணிக்கக்கூடிய பேட்டரி வண்டிகள் வந்துவிட்டன - இன்னும் வீல் சேர் அளவில் தான் பேசிக்கொண்டு இருக்கிறோம். 2016இல் எனது நண்பர், மற்றும் அவரது கர்பிணி மனைவி, பேட்டரி வண்டி அல்லது வீல் சேர் இல்லாத காரணத்தால், கிட்டத்தட்ட 2 கி.மீ டெல்லி ஏர்போர்ட்டில் ஒரு கேட்டில் இருந்து மற்றோரு கேட்டிற்கு நடந்து செல்ல நேரிட்டது.


rsudarsan lic
பிப் 16, 2024 14:23

With jetlag he should not have ventured. Henceforth this should become a lesson for all airport amenities.


Krishnamoorthy Nilakantan
பிப் 16, 2024 14:04

இது ஒரு வெட்கக்கேடான நிகழ்வு என்ன சொல்வது என்றே தெரியவில்லை


Kalyan Singapore
பிப் 16, 2024 13:59

வந்தவர் அமெரிக்காவிலிருந்து வந்தார். 1.5 கிலோமீட்டர் நடந்ததால் தான் மாரடைப்பு வந்தது என்று கூற முடியுமா? மாரடைப்பு எப்போது வேண்டுமானாலும் வரலாம். மேலும் நடந்தால் அதற்கான வாய்ப்பு குறைவு. அப்படியானால் அமெரிக்காவின் சுகாதாரத்துறை இந்தியாவை வீட மோசமா ? நேற்று ஒரு 25 வயது மாணவன் கனடாவில் மாரடைப்பால் இறந்து போகிறான். ஏர் இந்தியா சக்கர நாற்காலி தரமாட்டோம் என்று கூறவில்லை சற்று பொறுங்கள் என்று தான் கூறினார்கள். முதியவருக்கு முன்னமே இதயக்கோளாறு இருந்தால் அவர் தானே கவனமாக இருந்திருக்க வேண்டும்? அதற்கான மருந்துகளையும் கையில் வைத்திருக்க வேண்டும். மனைவியுடன் கடைசி வரை செல்ல எண்ணி பாவம் மனைவியை விட்டே சென்று விட்டார் . உடனே அடானியையும் மோதியையும் ஏர் இந்தியாவையும் போட்டிபோட்டுக்கொண்டு குறை கூற ஆரம்பித்து விடுவோமே ?


அப்புசாமி
பிப் 16, 2024 12:27

எல்லாத்துலேயும் பற்றாக்குறைதான். காசு மட்டும் உருவுவாங்க.


மேலும் செய்திகள்