உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இந்திய மண்ணில் அதுக்கு வாய்ப்பே இல்லை; வங்கதேசத்திற்கு மத்திய அரசு பதில்

இந்திய மண்ணில் அதுக்கு வாய்ப்பே இல்லை; வங்கதேசத்திற்கு மத்திய அரசு பதில்

புதுடில்லி: இந்திய மண்ணில் பிற நாட்டின் அரசியல் செயல்பாடுகளை அனுமதிக்க மாட்டோம் என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்திய நகரங்களில் வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசினாவின் அவாமி லீக் கட்சி அலுவலகங்கள் செயல்படுவதாக வங்கதேச அரசு குற்றம்சாட்டியுள்ளது. இதன் காரணமாக, இருநாடுகளுக்கு இடையேயான உறவுகள் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், வங்கதேச அரசின் இந்த குற்றச்சாட்டுக்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் மறுப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாக ரன்தீர் ஜெய்ஸ்வால் கூறியதாவது; இந்தியாவில் எந்த நகரங்களிலும் வங்கதேசத்தின் அவாமி லீக் கட்சி உறுப்பினர்களின் செயல்பாடுகள் ஏதுமில்லை. இந்திய மண்ணில் பிற நாட்டின் அரசியல் செயல்பாடுகளை அனுமதிக்க மாட்டோம்.மக்களின் விருப்பத்தையும் ஆணையையும் உறுதி செய்வதற்காக, வங்கதேசத்தில் சுதந்திரமான, நியாயமான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய தேர்தல்கள் விரைவில் நடத்தப்படும் என்ற தனது எதிர்பார்ப்பை இந்தியா மீண்டும் வலியுறுத்துகிறது, எனக் கூறினார். வங்கதேசத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் போது, ஷேக் ஹசினா, அங்கிருந்து தப்பி இந்தியாவில் தஞ்சம் புகுந்தது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

ManiMurugan Murugan
ஆக 22, 2025 00:01

ManiMurugan Murugan பாகிஸ்தானால் வஞ்சிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டவர்களை காத்து இடம் கொடுத்து நாடாக்கிய பாரதத்தை அதே பாகிஸ்தான் பேச்சைக் கேட்டு பிரச்சனை யை கிளப்பும் பங்களாதேஷத்திற்கு முன்னேறும் எண்ணம் இல்லை ப் போல பாகிஸ்தான் போல கொத்தடிமையாகத் தான் இருக்க தலையெழுத்துப் போல மக்கள் தான் உணர வேண்டும்


என்றும் இந்தியன்
ஆக 21, 2025 16:55

5.2 கோடி பங்களாதேசிகள் முஸ்லிம்கள் இந்திய நாட்டில் ஆதார் கார்டுடன் இருக்கின்றார்கள். அவர்கள் முஸ்லிம்கள் என்றால் அவர்களை இந்தியாவை விட்டு உடனே வெளியேற்ற வேண்டும். இதற்காக எடுத்த நடவடிக்கை என்ன சொல்லுங்கள் வெளியுறவுத்துறை அமைச்சகமே. அதுவும் மேற்கு வங்காளத்தில் 1.2 கோடி பங்களா தேசிகள் இருக்கின்றார்கள். ஆனால் இன்டர்நெட்டில் உள்ளது இப்படி Heres a breakdown of the varying estimates Bangladeshis: 2001 Census: 3,100,000 to 3,700,000 2009 Estimate: 15 million Indian Government 2007: Up to 12 million illegal Bangladeshis Indian Government 2016: Approximately 20 million illegal immigrants


M Ramachandran
ஆக 21, 2025 11:43

இனி வங்க தேசத்தில் பாகிஸ்தான் மற்றும் அமெரிக்காவின் பின்புலம் சேதமடையும். நாம் இனி மேல் தான் மிக கவனமாக இருக்க வேண்டும். சாகுல் யாருக்கு தெரிவிக்காமல் அயல்நாட்டு பயணத்தை கண்காணிக்க வேண்டும். நம் தேச விரோத செயல்களை உடனடியாக நிறுத்த செய்ய வேண்டும். அப்படி அரசுக்கு தெரிவிக்காமல் சென்றால் அதே அமெரிக்க பாணியில் தீவிரவாதிகள் அடையாளம் தெரியாத நபர்களால் காணாமல் போவது போல் காணாமல் போய் விடுவார்கள் என்ற பயம் ஏர் படுத்த வேண்டும்.


Kanns
ஆக 21, 2025 10:58

India Must Partition Seceeded AfPakBangla thoroughly by Any Means


S Ramkumar
ஆக 21, 2025 10:54

அந்த வங்க தேச அரசிடம் இந்தியாவில் இருக்கும் பங்களாதேஷிகளை என்ன செய்யவேண்டும் என்று கேளுங்கள் .


Anand
ஆக 21, 2025 10:35

யூனுசின் ஆட்டம் நாளுக்கு நாள் அதிமாகிக்கொண்டே போகிறது, இதற்கு விரைவில் மர்ம நபர்களால் முடிவு கட்டப்படும் என தோன்றுகிறது.


Iyer
ஆக 21, 2025 10:10

ஷேக் ஹசீனாவை பங்களாதேஷின் PM நாற்காலியில் அமர்த்திவிட்டுத்தான் மோதி ஓய்வெடுப்பார்