உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நாக்பூர் கலவர குற்றவாளி வீட்டை ஜே.சி.பி., வைத்து இடித்த அதிகாரிகள்

நாக்பூர் கலவர குற்றவாளி வீட்டை ஜே.சி.பி., வைத்து இடித்த அதிகாரிகள்

நாக்பூர்: நாக்பூர் வன்முறை வழக்கின் முக்கிய குற்றவாளியின் இரண்டு மாடி வீடு, ஜே.சி.பி., வைத்து நேற்று இடிக்கப்பட்டது. மஹாராஷ்டிராவில் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தலைமையில் பா.ஜ., சிவசேனா, தேசிய வாத காங்., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்குள்ள சத்ரபதி சம்பாஜி நகரில் மொகலாய மன்னர் அவுரங்கசீப் கல்லறை உள்ளது.

போராட்டம்

தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் இருக்கும் அவுரங்கசீப் கல்லறையை அகற்றும்படி, மஹாராஷ்டிராவில் ஹிந்து அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். நாக்பூரில் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் நடத்திய போராட்டத்தின்போது, முஸ்லிம்களின் புனித நுால் எரிக்கப்பட்டதாக வதந்தி பரவியதையடுத்து, கடந்த 17ம் தேதி நாக்பூரில் பயங்கர கலவரம் வெடித்தது. பைக், கார் உள்ளிட்ட வாகனங்கள் எரிக்கப்பட்டன. மூன்று துணை கமிஷனர்கள் உட்பட 33 போலீசார் காயமடைந்தனர்.வன்முறைக்கு காரணமான, முக்கிய குற்றவாளியான சிறுபான்மையினர் ஜனநாயக கட்சி தலைவர் பாஹிம் கான் மற்றும் 100-க்கும் மேற்பட்டவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். இதையடுத்து, கலவரத்தில் சேதமான சொத்துக்களுக்கான நஷ்டஈடுத் தொகை, வன்முறையாளர்களிடம் இருந்து வசூலிக்கப்படும் என்றும், தவறினால், அவர்களின் சொத்துக்களை, விற்பனை செய்து பணம் வசூலிக்கப்படும் எனவும், முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் அறிவித்தார். இந்நிலையில், யசோதரா நகரின் சஞ்சய் பாக் காலனி பகுதியில் அமைந்துள்ள பாஹிம் கானின் இரண்டு மாடி வீடு நேற்று இடிக்கப்பட்டது. சில நாட்களுக்கு முன் நாக்பூர் மாநகராட்சியில் இருந்து நோட்டீஸ் அனுப்பிய நிலையில், நேற்று காலை ஜே.சி.பி., இயந்திரங்களை வைத்து, மாநகராட்சி அதிகாரிகள் வீட்டை இடித்துத் தள்ளினர்.

போலீஸ் பாதுகாப்பு

அந்தப் பகுதி முழுதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. இதற்கிடையே, நாக்பூர் கலவரத்தில் கைதானவர்களின் வீடுகளை இடிப் பதற்கு, மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் அமர்வு நேற்று பிற்பகல் தடை விதித்தது. இந்த உத்தரவு வெளியாவதற்கு முன்பே பாஹிம் கானின் வீடு நேற்று காலை இடிக்கப்பட்டது.

நோட்டீஸ்

கடந்த மாதம் இந்தியா - -பாக்., கிரிக்கெட் போட்டியின்போது, இந்தியாவுக்கு எதிராக கோஷமிட்டதாக மஹாராஷ்டிராவின் சிந்துதுர்க் மாவட்டத்தின் மால்வனைச் சேர்ந்த கிட்டபுல்லா ஹமிதுல்லா கான், அவரது மனைவி, மகன் மீது வழக்கு பதிவானது. அதைத் தொடர்ந்து, விதிகளை மீறி, கட்டப்பட்டதாக, கடந்த பிப்., 24-ல் ஹமிதுல்லாவின் வீடு, கடை இடிக்கப்பட்டது.இது, வீடுகளை இடிப்பது தொடர்பாக, 2024ல் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிரானது என கூறி, நீதிமன்ற அவமதிப்பு வழக்கை ஹமிதுல்லா தொடர்ந்தார். இந்த வழக்கை நேற்று விசாரித்த உச்ச நீதிமன்றம், இது குறித்து பதிலளிக்கும்படி மஹாராஷ்டிரா உள்ளாட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Anantharaman
மார் 25, 2025 08:22

நீதிபதிகள் குருட்டுத் தனமாக முகபடாம் அணிந்த குதிரை போல உத்தரவிடுகிறார்கள் போலும். மக்களின் உணர்ச்சி சட்டத்தின் அறிவற்ற நியாயங்களை ஏற்பதில்லை என கோர்ட்டு உத்தரவின் எதிரணிக் கூறும். இனி நீதிபதிகள் வீடுகளும் இடிபடுமோ?


ramesh
மார் 25, 2025 05:30

இப்படி தான் இருக்க வேண்டும். தமிழகத்தில் சிவப்பு கம்பள வரவேற்பு அளித்திருப்பார்கள்.முக்கிய தலைவர்களுடன் அறுசுவை விருந்து உண்ண அழைத்து கவுரவிக்க பட்டிருப்பார் கள்


நிக்கோல்தாம்சன்
மார் 25, 2025 05:00

இது எல்லா இந்தியர்களுக்கும் பொருந்தி வரவேண்டும் , நாட்டிற்கு எதிராக செயல்படும் மக்களிடம் இந்த நிகழ்வு இப்படித்தான் அவர்களின் எதிர்காலம் என்று காட்டப்படவேண்டும் , நீதிபதி வர்மாவிற்கும் இது காட்டப்படுமா ?


Kasimani Baskaran
மார் 25, 2025 03:54

நோட்டீஸ் கொடுத்தும் ஆக்கிரமிப்பை அகற்ற என்ன அவசரம் என்று நீதிமன்றம் சொல்வது வெட்கக்கேடு.. பத்து ரூபாயை கடிந்து கொண்டு மந்திரியாக இருக்க விருப்பம் கேட்டது போல வீட்டை இடிக்கலாமா என்று கருத்து கேட்பார்கள்..


தமிழன்
மார் 25, 2025 03:13

புல்டோசர் உபியிலிருந்து மகாராஷ்டிரா வரை வந்துவிட்டது ஆன் தி வே டூ தமிழ்நாடு உஷார் மக்களே


Kumar Kumzi
மார் 25, 2025 06:00

தமிழன் பெயரில் அலறும் பங்களாதேஷ் கள்ளக்குடியேறி ரோஹிங்கியாவுக்கு இப்போதே வயிறு கலக்க ஆரம்பித்துவிட்டது ஹாஹாஹா


Kumar Kumzi
மார் 25, 2025 02:24

வாவ் சூப்பர் இடிப்பதோடு மட்டுமல்லாமல் கலவரங்களில் ஈடுபட்ட அணைத்து மூர்க்க காட்டுமிராண்டிகளையும் போக்கிஸ்தானுக்கு நாடு கடத்துங்கள்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை