உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பயணியர், சரக்குகள் இரண்டுக்கும் ஒரே ரயில்: டபுள் டெக்கர் தயாரிப்பில் ரயில்வே மும்முரம்

பயணியர், சரக்குகள் இரண்டுக்கும் ஒரே ரயில்: டபுள் டெக்கர் தயாரிப்பில் ரயில்வே மும்முரம்

புதுடில்லி: ஒரே நேரத்தில் பயணியர் மற்றும் சரக்குகளை ஏற்றிச் செல்லும் வகையிலான, 'டபுள் டெக்கர்' ரயில்களை அறிமுகம் செய்ய இந்திய ரயில்வே திட்டமிட்டுள்ளது. இதற்கான முதலாவது சில ரயில்களை சோதனை ஓட்டம் பார்க்க ரயில்வே தயாராகி வருவதாக, டில்லியில் ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.இந்த டபுள் டெக்கர் கார்கோ ரயிலின் முதல் அடுக்கில், 6 டன் வரை எடையுள்ள சரக்குகள் இடம்பெற அனுமதிக்கப்படும். மேல் அடுக்கில், ஒரு பெட்டிக்கு 46 பயணியர் அமரும் வகையில் வசதி இருக்கும். நாட்டிலேயே முதல்முறையாக, பயணியர் மற்றும் சரக்கு போக்குவரத்துக்கு ஒரே ரயிலாக இது இருக்கும். இதன் வாயிலாக, சரக்கு போக்குவரத்துக்கென தனி ரயில்களின் தேவை குறைவதுடன், பயணியரும் குறிப்பிட்ட ரயில் நிலையங்களுக்கு செல்ல கூடுதல் சேவை கிடைக்கும் என ரயில்வே கருதுகிறது.டபுள் டெக்கர் கார்கோ ரயில்கள் தயாரிப்பு வேகம் பெற்று வரும் நிலையில், விரைவில் சில ரயில்களை சோதனை ஓட்டம் நடத்திப் பார்க்க ரயில்வே தயாராகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், 'வந்தே கார்கோ' என்ற பெயரில், பிரத்யேகமாக சரக்கு போக்குவரத்துக்கென, அதிக சரக்குகளை சுமந்து, அதிவேகமாக செல்லக்கூடிய ரயில் பெட்டிகளும் தயாரிக்கப்பட உள்ளன. இந்த சரக்கு ரயில் மணிக்கு 160 கிலோ மீட்டர் வரை வேகமாக செல்லக்கூடியவை என்பதால், சரக்கு போக்குவரத்து விரைவாக நடைபெறும்.இந்த ரயில் பெட்டிகள், கபுர்தலாவில் உள்ள ரயில் பெட்டி தொழிற்சாலையில் டிசைன் செய்யப்பட்டுள்ள நிலையில், ரயில்வே உயரதிகாரிகளின் அனுமதி கிடைத்ததும், தயாரிப்பு பணிகள் துவங்கப்படவுள்ளன.

* 16 - 20 பெட்டிகள் கொண்ட ரயில்கள் இயக்கப்படும்* ரயில் பெட்டியின் மேல் அடுக்கில் 46 பேர் பயணிக்கலாம்* ரயிலில் ஒரு பெட்டி உணவகமாக செயல்படும்* ஒரு பெட்டி தயாரிக்க செலவு 5 கோடி ரூபாய்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

தமிழ்வேள்
நவ 08, 2024 13:57

இந்த வேலைக்கு பதில், மீண்டும் பழையபடி, பார்சல் பாஸஞ்சர்களை இயக்கலாம் அல்லவா? அனைத்து ஸ்டேஷன்களிலும் சரக்குகள் பதிவுசெய்து ஏற்றி இறக்க இயலும் ..பயணிகளுக்கும் பயன் ....இந்த சர்வீஸுக்கு ஏசி பெட்டிகள் தேவையற்றவை .....


JeevaKiran
நவ 08, 2024 10:05

இப்போது ஒரு பெட்டியில் 108 பேர் பயணம் செய்தே கூட்டம் அலைமோதுகிறது. இதில் 46 பேர் என்றால் ....


Kalyanaraman
நவ 08, 2024 07:49

பெரும்பாலான ஊழியர்கள் ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரம் மட்டுமே வேலை செய்யும் ரயில்வே துறையில் சீர்திருத்தங்கள் செய்து லாபகரமாக இயக்குவது என்பது மிகப்பெரிய அதிசயம் தான். அதை மோடி அரசு கடந்த பத்து வருடங்களாக தொடர்ந்து சாதனை செய்து கொண்டேயிருக்கிறது.


Mahendran Puru
நவ 08, 2024 11:23

நீங்கள் நன்றாகவே சிரிப்பு மூட்டுகிறீகள். மாதம் ஒரு விபத்து, அதில் சாவு காயம் பட்டோர் எண்ணிக்கை மட்டும் வெளியே வராது. வந்தே பாரத் கட்டணக் கொள்ளை ரயில், பாசஞ்சர் ரயில்களில் எக்ஸ்பிரஸ் கட்டணம் என்று மக்கள் விரோத மோடி அரசுக்கு ஜே போடுங்கள்.


பெரிய குத்தூசி
டிச 02, 2024 11:56

Mahendran Puru பாய் விவரம் எதுவும் தெரியாம மோடி யை எதிர்ப்பு நிலையை ரயில்வே மூலம் தீர்த்துக்கொள்கிறார். Mahendran Puru பாய் நம்ம இந்தியன் ரயில்வேய பாகிஸ்தான் கிட்ட குடுத்து ரன் பண்ணலாமா பாய்.


சாண்டில்யன்
நவ 08, 2024 07:39

மொத்த சரக்கு போக்குவரத்தில் ரயில்வேயின் பங்கை 60 சதவிகிதமாக உயர்த்த நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். அதனால் நுகர்வோர் பொருள் விலைவாசி கணிசமாக குறையும் உதாரணமாக தற்போது திருவனந்தபுரத்திலிருந்து இரண்டு பார்சல் பெட்டிகள் தினமும் சென்னை வருகின்றன அதுபோல திண்டுக்கல் வழியாக வரும் ஒவ்வொரு ரயிலிலும் சென்னைக்கு நாற்பது டன் மலர்கள் பழங்கள் காய்கறிகளைக் கொண்டு வந்தால் அவற்றின் விலைவாசி சுமார் முப்பது சதம் குறையும்


Sathyanarayanan Sathyasekaren
நவ 08, 2024 07:25

அருமையான முயற்சி. இதேபோல் சாதாரண பயணிகள் வண்டிகளை ஷெட்டில் நிறுத்தி வைப்பதற்கு பதிலாக தொடர்ந்து இயக்கலாம்.


தமிழ்வேள்
நவ 08, 2024 14:00

எந்த வண்டியையும் வெறுமனே ஷெட் இல் நிறுத்துவது இல்லை .. ஒரு ஐசிஎப் கோச் 2000 கிமீக்கு ஒருமுறை, எல் எச் பி கோச் 3000 கி மீக்கு ஒரு முறை முதல்நிலை பராமரிப்பு செய்யப்படவேண்டம்.. அதற்கு சுமார் 7 மணிநேரம் வரை ஆகும்... இந்த பராமரிப்பு பிட் லைன்களின் அவைலபிலிட்டி, அதற்கான ஊழியர் அவர்களின் HOYAR ஆகியன வும் இதனை தீர்மானிக்கும் காரணிகள் ...


தமிழ்வேள்
நவ 08, 2024 15:39

HOER- Hours of Employment and Rest - என்று வாசிக்கவும் ....தவறாக பதிவாகிவிட்டது ....


சமீபத்திய செய்தி