உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஆபரேஷன் சிந்தூர் தொடர்கிறது; இந்திய விமானப்படை திட்டவட்டம்

ஆபரேஷன் சிந்தூர் தொடர்கிறது; இந்திய விமானப்படை திட்டவட்டம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ''ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான செயல்பாடுகள் இன்னும் முடியவில்லை'' என இந்திய விமானப் படை தெரிவித்துள்ளது.பஹல்காமில் பயங்கரவாத தாக்குதல் நடத்திய பாகிஸ்தானுக்கு இந்தியா தக்க பதிலடி கொடுத்தது. 'ஆப்பரேஷன் சிந்துார்' என்ற பெயர் சூட்டி, நம் ராணுவம் நடத்தி தாக்குதலில், பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள ஒன்பது பயங்கரவாத தளங்கள் தரைமட்டம் ஆக்கப்பட்டன.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=a1ngxb5k&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்தியா- பாகிஸ்தான் இடையே கடந்த 4 நாட்களாக போர் பதற்றம் உச்சத்தில் இருந்தது. மோதல், மேலும் தீவிரமாகும் என்பதற்கான அறிகுறிகள் தென்பட்ட நிலையில், திடீரென இரு தரப்பும் சண்டையை நிறுத்திக்கொள்ள சம்மதித்தன. இந்நிலையில், ஆபரேஷன் சிந்தூர் தொடர்கிறது என இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.இது குறித்து இந்திய விமானப் படை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் விமானப் படைக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை துல்லியமாக வெற்றிகரமாக செய்துள்ளோம். விவேகமான முறையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான செயல்பாடுகள் இன்னும் முடியவில்லை. சரியான நேரத்தில் விரிவான விளக்கம் அளிக்கப்படும். சரிபார்க்கப்படாத தகவல்களை ஊகிப்பதையும், பரப்புவதையும் தவிர்க்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

கோகுல் மதுர
மே 12, 2025 01:15

என்னோட கோபம் தீரல. I am not happy. அவேன் சாகனும். எப்படி என் தாய்மார்களின் தாலி அறுக்க போச்சு. அவேன் உயிரோட நடமாட தகுதி இல்லை. அவன கொல்லுங்க. அப்ப தான் என்னோட கொப்பளிக்கும் கோபமும் அழுகையும் அடங்கும். பாரத் மாதாகி ஜெ.


துர்வேஷ் சகாதேவன்
மே 11, 2025 21:24

ஸ்டாலினின் பேரணி முடிவதற்கு முன்பாகவே போர் நிறுத்தம்.. தளபதியின் சாதனையில் இதுவும் ஒன்று.. கருணாஸ்


துர்வேஷ் சகாதேவன்
மே 11, 2025 21:02

ஊடகங்களின் போக்கு கவலை அளிக்ககூடியதாக இருக்கிறது. வாசிக்கவே சலிப்பாக இருக்கிறது. அங்கு இராணுவ வீரர்களின் துணிச்சலை, சிரமத்தை பற்றி எல்லாம் இவர்கள் கவலைப்படுவதே இல்லை,இங்குள்ள பெரும் ஆளும் அரசின் தலைவர்களை தூக்கி வைத்து துதி பாடியபடியே இருக்கிறார்கள். காஷ்மீரில் மற்றும் இதர மாங்கிலங்களில் வசிக்கும் எல்லையோரத்து மக்களின் இந்த சண்டையினால் ஏற்படும் இன்னலகளை பற்றி கூட பெரிய அளவில் செய்திகளை அளிக்க தயங்குகிறார்கள்.


துர்வேஷ் சகாதேவன்
மே 11, 2025 21:00

ஆளாளுக்கு ஒன்று சொன்னால் எப்படி? பிரதமர் ஒன்றும் நடக்காதது போல் இருக்கிறார்...டிரம்ப் போர் நிறுத்தம் அறிவிக்கிறார்..ஒன்றும் புரியவில்லை


chidhambaram
மே 11, 2025 20:10

அருமையான முடிவு ........பாகிஸ்தானை முடித்து விடுங்கள்


துர்வேஷ் சகாதேவன்
மே 11, 2025 20:58

இவ்வளவு வீரம் சீனா அருணாச்சலம் ஆக்கிரமிப்பை கண்டித்து ஒரு பேச்சு நம் பிரதமர் இடம் இருந்து காணோமே


என்றும் இந்தியன்
மே 11, 2025 18:03

இன்னும் தொடரட்டும் ஒரு மாதம் அப்போது தான் பாகிஸ்தான் இந்த அட்டூழியத்தை தொடராது


GMM
மே 11, 2025 15:12

பிஜேபி இலக்கு அடையும் முன் பிறழ்வு கூடாது. மத வெறியுடன் இந்து மதம் கேட்டு கொன்ற தீவிரவாதிகள் யார்? அவர்களை ஒப்படைக்க அமேரிக்கா, சீனா எடுக்கும் நடவடிக்கை என்ன? இந்தியா / ஐ நா. விடம் ஒப்படைக்க வேண்டும். அதன்பின் போர் நிறுத்தம். கொலிஜியம், விவசாய மசோதா, தவறான இட ஒதுக்கீடு முறை, பொது சிவில் சட்டம், மத சிறுபான்மை அந்தஸ்து, வக்ஃபு சட்டம் போன்றவை உள்நாட்டு குழப்பத்தை ஏற்படுத்தும். இதில் பிஜேபி முடிவு காண வேண்டும். முகம்மதிய, ஐரோப்பிய நாடுகள் வரலாறு பிறரை பிரித்து கொள்ளை, அடிமைப்படுத்தி சுகம் காணும் முறை. ஆப்பரேஷன் முழுமை பெற வேண்டும்.


Venkataraman
மே 11, 2025 14:28

இப்போது ஏன் போர் நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டார்கள் என்று தெரியவில்லை. அமெரிக்காவும், சீனாவும் அழுத்தம் கொடுத்தால் ஒப்புக் கொண்டார்களா? இந்தியா, பாகிஸ்தானுக்கு பெரிய அளவில் சேதத்தை விளைவித்து அதை தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்த நேரத்தில் பாகிஸ்தானின் ராணுவ அதிகாரியின் வேண்டுகோள் இணங்க போர் நிறுத்தம் செய்து விட்டது. இதனால் பாகிஸ்தானுக்கு தான் பயன் கிடைக்கும். இந்தியா தனக்கு கிடைத்த வெற்றி வாய்ப்பை இழந்து விட்டது. இதனால் மறுபடியும் பாகிஸ்தான் தன்னுடைய ஆயுதங்களை பல மடங்கு அதிகரித்து பயங்கரவாதத்திலும் போரிலும் ஈடுபடும். பாகிஸ்தானின் பேச்சை நம்பி போர் நிறுத்தம் செய்வது ...


Kasimani Baskaran
மே 11, 2025 13:57

முதல் நாளே பாகிஸ்தானின் வான் பாதுகாப்பு கவசத்தை உடைத்து விட்டார்கள். அது சீனாவின் ஆயுத விற்பனையில் பெரிய ஓட்டை விழும் அளவுக்கு ஆகிவிட்டது. S400 வேலை செய்யாது என்றார்கள் - ஆனால் இந்தியா அதையும் தனது சொந்த தயாரிப்பில் உருவான உபகரணங்களை வைத்து மாஸாக வந்த துருக்கி டிரவுன்களை ஒழித்துக்கட்டிவிட்டது. ஆகவே இந்தியா புதிய நாட்டாண்மை ஆகிவிடக்கூடாது என்ற நல்லெண்ணத்தில் இப்படி ஒரு விரைவான பஞ்சாயத்து நடந்துவிட்டது. ஒரு நாள் மட்டும் தாமதித்து இருந்தால் பாகிஸ்தான் தனது ஒரு லட்சம் சிப்பாய்களை காஸ்மீரில் வைத்து இழந்திருக்கும். இன்னும் வரும்...


veeramani hariharan
மே 11, 2025 20:14

Credit shld go to Mr.Manoj Parrikar for purchase of S-400 inspite of all opposition he convinced Mr.Modiji for purchasing the same from Russia.


K V Ramadoss
மே 11, 2025 13:41

தொடரட்டும் தொடரட்டும், நிறுத்த வேண்டாம் தொடரட்டும்..