உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காஷ்மீரில் கண்காணிப்பை தீவிரப்படுத்த உத்தரவு

காஷ்மீரில் கண்காணிப்பை தீவிரப்படுத்த உத்தரவு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி:ஜம்மு - காஷ்மீரில், பனிப்பொழிவை பயன்படுத்தி எல்லையில் பயங்கரவாதிகள் ஊடுருவக்கூடும் என்பதால், கண்காணிப்பை தீவிரப்படுத்தும்படி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உத்தரவிட்டுள்ளார். ஜம்மு - காஷ்மீர் பாதுகாப்பு நிலவரம் தொடர்பாக டில்லியில் நேற்று, பா.ஜ., மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா தலைமையில் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில், ஜம்மு - காஷ்மீர் துணைநிலை கவர்னர் மனோஜ் சின்ஹா, மத்திய உள்துறை செயலர் கோவிந்த் மோகன், ராணுவ தளபதி உபேந்திர திவேதி உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது, ஜம்மு - காஷ்மீரில் பனிப்பொழிவை பயன்படுத்தி எல்லையில் பயங்கரவாதிகள் ஊடுருவக்கூடும் என்பதால், கண்காணிப்பை தீவிரப்படுத்தும்படி பாதுகாப்பு படையினருக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா உத்தரவிட்டார். மேலும், பயங்கரவாதத்தை முழுமையாக ஒழிக்க அனைத்து பாதுகாப்பு படையினரும் விழிப்புடன் இருந்து, ஒருங்கிணைந்து செயல்படவும் அவர் அறிவுறுத்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ