உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பஹல்காம் தாக்குதல் : சவுதி பயணம் ரத்து: நாடு திரும்புகிறார் மோடி

பஹல்காம் தாக்குதல் : சவுதி பயணம் ரத்து: நாடு திரும்புகிறார் மோடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஜெட்டா: காஷ்மீர் மாநிலம் பஹல்காம் பகுதியில் நடைபெற்ற தாக்குதல் சம்பவம் எதிரொலியாக , அரசு முறைப்பயணமாக சவுதி அரேபியா சென்றுள்ள பிரதமர் மோடி திடீரென பயணத்தை ரத்து செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜம்மு - காஷ்மீரின் பஹல்காம் மாவட்டத்தில் உள்ள பைசரன் பள்ளத்தாக்கில், இயற்கையை ரசிக்க சுற்றுலா பயணியர் மீது ராணுவ சீருடையில் வந்த பயங்கரவாதிகள், அப்பாவி மக்களை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். இந்த தாக்குதலில் இரண்டு வெளிநாட்டினர் உட்பட, 27 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவத்திற்கு அமெரிக்கா, ரஷ்யா கண்டனம் தெரிவித்துள்ளது.இந்நிலையில் அரசு முறைப்பயணமாக சவுதி அரேபியா சென்றுள்ள பிரதமர் மோடி காஷ்மீர் தாக்குதல் சம்பவம் எதிரொலியாக, பயணத்தை பாதியில் ரத்து செய்துள்ளதாகவும், இன்று இரவே நாடு திரும்ப திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இதையடுத்து நாளை காலை இந்தியா வந்திறங்குகிறார். தொடர்ந்து பாதுகாப்பு தொடர்பான் மத்திய அமைச்சரவை கூட்டத்தை கூட்டி ஆலோசனை நடத்த உள்ளார். இக்கூட்டத்தில் உள்நாட்டு பாதுகாப்பு உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது தொடர்பான ஆலோசனை நடத்த உள்ளார். இதற்கிடையே தாக்குதல் சம்பவம் குறித்த புதிய வீடியோ இரவு வெளியாகியுள்ளது.

அதிபர் டிரம்ப் மோடி உடன் தொலைபேசியில் உரையாடல்

இதனிடையே அமெரிக்க அதிபர் பஹல்கா்ம் சம்பவம் குறித்து எக்ஸ் வலைதள பக்கத்தில் தனது கண்டத்தை பதிவு செய்திருந்தார். தொடர்ந்து பிரதமர் மோடி உடன் தொலைபேசியிலும் தொடர்பு கொண்டு சம்பவம் குறித்து விசாரித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

பிரேம்ஜி
ஏப் 23, 2025 07:21

உள்ளூரில் இருந்தால் மட்டும் என்ன செய்திருப்பார்? வழக்கமான கடும் நடவடிக்கை என்று வாய் வடை சுடல்தான்! வலியும் இழப்பும் சாதாரண மக்களுக்குத் தானே! தனக்கு வராது!


Ranga Ramanathan
ஏப் 23, 2025 05:15

பாபரின் வாரிசுகள் பாதுகாப்பாக இருக்கிறார்கள்.


naranam
ஏப் 23, 2025 04:18

பழிக்குப் பழி பதிலுக்கு பதில்...இஸ்லாமியத் தீவிரவாதிகள் பாகிஸ்தானில் எங்கு பதுங்கி இருந்தாலும் சரி. அவர்களைக் கொன்று குவிக்க வேண்டும்.


Sakshi
ஏப் 23, 2025 06:21

Edhu பாக்கிஸ்தான் எப்படி சொல்றிங்க? என் இந்தியன் முஸ்லீம் தீவரவடியா irukkakoodhu..


Kasimani Baskaran
ஏப் 23, 2025 03:51

பாகிஸ்தானிடம் இருக்கும் ஒரே தொழில் தீவிரவாதம் மட்டுமே..


Bhakt
ஏப் 23, 2025 01:58

பிகிஸ்தான் ஒழிந்தால் தான் இங்கிருப்பவர்கள் திருந்துவார்கள்


ஈசன்
ஏப் 23, 2025 00:37

கிழக்கில் இந்த மூர்கர்கள் எல்லை தாண்டி வந்து நம் அப்பாவி கிராம மக்களை தாக்குகின்றனர். மேற்கில் மூர்க தீவிரவாதிகள் சுற்றுலா பயணிகளை சுட்டு தள்ளுகிறார்கள். மத்திய அரசு உச்சநீதிமன்றதிற்கு பயந்து எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கிறதா? நாடு எங்கே செல்கிறது என்றே தெரியவில்லை.


Barakat Ali
ஏப் 22, 2025 23:37

சொந்த நாட்டு மக்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்துவிட்டு அரசுமுறைப் பயணம் போயிருக்கலாம் .... உளவுத்துறை, உள்துறையின் தோல்வி ....


Aladi Suga
ஏப் 23, 2025 04:58

What your Congress government done on that period? Lot of terrorism, which was controlled by Modi government now and after the new ruler Omar Abdullah came and where he went? He simply claim the Delhi government that Airport was not maintained properly after the flight he travelled was diverted to Jaipur due to weather conditions.


புதிய வீடியோ