உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சூரிய காற்றின் எலக்ட்ரான் நிலை: ஆதித்யா எல்-1 கண்டுபிடிப்பு!

சூரிய காற்றின் எலக்ட்ரான் நிலை: ஆதித்யா எல்-1 கண்டுபிடிப்பு!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: சூரியனை ஆய்வு செய்ய அனுப்பப்பட்ட ஆதித்யா எல்-1 விண்கலம், சூரிய காற்றின் எலக்ட்ரான்கள் நிலையை கண்டறிந்துள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.சூரியனை ஆய்வு செய்வதற்காக 'ஆதித்யா எல் 1' என்ற விண்கலத்தை கடந்த செப்டம்பர் மாதம் இஸ்ரோ விண்ணில் செலுத்தியது. இந்த ஆதித்யா எல் 1 விண்கலம் சூரியனின் வெப்பம், காந்த துகள்கள் வெளியேற்றம், விண்வெளியின் காலநிலை, விண்வெளியில் உள்ள துகள்கள் ஆகியவை குறித்தும், சூரியினில் ஏற்படும் காந்த புயல்கள் குறித்தும் ஆய்வு செய்யும். சூரியனுக்கு மிக அருகில் உள்ள, 'எல் 1' எனப்படும், லெக்ராஞ்சியன் புள்ளியில் தற்போது நிலை நிறுத்தப்பட்டுள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=cffk78t2&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0தற்போது ஆதித்யா எல்-1 சூரிய காற்றின் எலக்ட்ரான்கள் நிலையை கண்டறிந்துள்ளது. விண்கலத்தில் பொருத்தப்பட்டுள்ள பாப்பா (PAPA) என்னும் கருவி பிப். 10, 11 ஆகிய தேதிகளில் எலக்ட்ரான் நிலையை கண்டறிந்ததாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. சூரிய காற்றின் எலக்ட்ரான் மற்றும் அயனிகளை தொடர்ந்து ஆதித்யா எல்1 கண்காணித்து வருவதாகவும், விண்வெளி வானிலை நிலைகளை கண்காணிப்பதில் பாப்பா கருவி தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

தாமரை மலர்கிறது
பிப் 23, 2024 20:55

மத்தியஅரசு தாராளமாக இஸ்ரோவிற்கு நிதி ஒதுக்கியதன் விளைவாக, இஸ்ரோ மற்றொரு சாதனை படைத்துள்ளது. இந்தியாவின் அறிவியல் சாதனையை உலகிற்கு மோடி அரசு வெளிச்சம் போட்டுக்காட்டுகிறது.


Nachiar
பிப் 23, 2024 18:17

இஸ்ரோ மட்டுமல்ல நானும் கூட பாரத்தினருடன் இணைந்து நன்றியையும் பெருமையையும் தெரிவித்திக்கொள்கிறன். இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு நடந்த துன்பங்களையும் அதர்ட்க்கு காரணமான அரசையும் அரசியல் வாதிகள் வெளிநாட்டு தலையிடுகளையும் இந்த சமயத்தில் மறக்காமல் இருக்க முடியவில்லை. இந்த விஞ்ஞானிகளுக்கு சகல ஆதரவையும் பாதுகாப்பையும் ஊக்கத்தையும் தரும் மோடி சர்க்காருக்கு நன்றி. விஞ்ஞானத்தையும் ஆன்மிகத்தையும் நாடு பொருளாதாரத்தையும் பாதுகாப்பையும் பாரம்பரிய கலாசாரத்தையும் ஒருங்கிணைய போற்றி பேணி வரும் மோடி சர்க்காருக்கு நன்றி வணக்கம். வாழ்க பாரதம்.


மேலும் செய்திகள்