உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இண்டியா கூட்டணி போராட்டம்; புறக்கணித்தது சமாஜ்வாதி!

இண்டியா கூட்டணி போராட்டம்; புறக்கணித்தது சமாஜ்வாதி!

புதுடில்லி: பார்லிமென்ட் வளாகத்தில், இன்றும் (டிச.,05) இண்டியா கூட்டணிக் கட்சியை சேர்ந்த எம்.பி.,க்கள் போராட்டம் நடத்தினர்.பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 25ம் தேதி துவங்கியது. கூட்டம் துவங்கி முதல் நாளில் இருந்து, எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று (டிச.,05) காலை 11 மணிக்கு இரு அவைகளும் கூடின. லோக்சபாவில் எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர். சபாநாயகர் ஓம் பிர்லா அமைதி காக்கும் படி, பலமுறை எச்சரித்தார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=97qwpocr&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0எதிர்க்கட்சிகள் எம்.பி.,க்கள் துளி அளவும் கூட கண்டுகொள்ளாமல், தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். இதனால், அவையை மதியம் 2 மணி வரை ஒத்திவைத்து ஓம் பிர்லா உத்தரவிட்டார். அதேநேரத்தில், எதிர்க்கட்சிகள் அமளி காரணமாக, ராஜ்யசபா மதியம் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.இதற்கிடையே, பார்லிமென்ட் வளாகத்தில், காங்கிரஸ் எம்.பி.,யும், எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் மற்றும் இண்டியா கூட்டணிக் கட்சியை சேர்ந்த எம்.பி.,க்கள் போராட்டம் நடத்தினர். அதானி விவகாரத்தில் பார்லி., கூட்டுக்குழு விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டத்தில், சமாஜ்வாதி, திரிணமுல் காங்கிரஸ் கட்சி எம்.பி.,க்கள் பங்கேற்கவில்லை.

ராகுல் பேட்டி

நிருபர்கள் சந்திப்பில், ராகுல் கூறியதாவது: பிரதமர் மோடியும், தொழிலதிபர் அதானியும் இரு வேறு நபர்கள் அல்ல; ஒன்று தான். அதானியை பிரதமர் மோடி விசாரணைக்கு உட்படுத்த மாட்டார். அதானியை விசாரணைக்கு உட்படுத்துவது மோடி தன்னைத் தானே விசாரிப்பதை போன்றது, என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 21 )

Rangs
டிச 07, 2024 02:08

The Adani Group has invested over AU$5 billion in Australia since 2010. இது Parliament of Australia என்கிற Australia Government website ல் உள்ளது. 2013 ல் SBI, அதானிக்கு ஆஸ்திரேலியாவில் முதலீடு செய்ய, அளவுக்கு அதிகமாக 90,000 கோடி கடன் கொடுத்ததாக குற்றம் சாட்டப்ப pattathu.


J.V. Iyer
டிச 05, 2024 17:30

போர்கிஸ்தான் பயங்கரவாதியும் பாப்பு ராகுல் வின்சியும் ஒன்று. ஜார்ஜ் சோரேஸ்சும் ராவுல் வின்ஸியும் ஒன்று.


Suppan
டிச 05, 2024 16:36

அதானியும் 1985 லிருந்து அதாவது காங்கிரஸ் காலத்திலிருந்து வளர்ந்தவர்தான். காங்கிரஸ் கட்சியின் மேற்கு வாங்கத்தலைவர் ஆதிர் ரஞ்சன் ஒரு பெட்டியில் கூறியது "மூட்டை கிடைக்கும் வரை கூவுவோம் கிடைத்தவுடன் வாயை மூடிக்கொள்வோம்" . மூட்டை கிடைக்காததால் கூவுகிறார்கள் போலிருக்கிறது .


SANKAR
டிச 05, 2024 19:32

Adani was 20 in 85 ..no business nothing.. even in 2014 he was not in top 50..then....


Kavi
டிச 05, 2024 15:20

ஆமாம் உண்மை தான் முதலில் செய்யவேண்டும் இந்த கொசுவை முதலில் விரட்டி அடிக்கவேண்டும் இந்தியாவை விட்டு அப்ப தான் இந்தியா விடியும்


GMM
டிச 05, 2024 14:32

இண்டிய புள்ளி கூட்டணியில் நேரு குடும்பம் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. தற்போதய போராட்டத்தில் சமாஜ்வாதி தலைமை தாங்க சொல்லலாம். உலகெங்கும் நீதிமன்றம் ஒரே நேர்கோட்டில் உள்ளது. அமெரிக்கா ஒரு மன்றம் அதானி மீது குற்றச்சாட்டும் போது, லஞ்சம் பெற்று பயனடைந்தவரை குற்றச்சாட்டில் சேர்க்க வேண்டாமா?


SUBBU,
டிச 05, 2024 13:02

ஹரியானா தேர்தல் பாஜக கொண்டு வந்த அக்னிவீர் திட்டத்தை பற்றிய காங்கிரஸ் கட்சியின் பொய் பிரச்சாரத்தை அழித்து விட்டது. மகாராஷ்டிரா தேர்தல் மத்திய பாஜக அரசு அரசியலமைப்பு சட்டத்தையே மாற்றப் போகிறது என்ற காங்கிரஸின் பொய் பிரச்சாரத்தை முறியடித்து விட்டது. அடுத்து ஹிமாச்சல பிரதேசம் மற்றும் கர்நாடகாவில் நடக்கும் காங்கிரஸ் அரசுகள் இலவசங்களை திரும்பப் பெறுவதன் மூலம் ராகுல் காந்தியின் KHATAKHAT இலவச திட்டம் பல்லிளித்து விட்டது. கட்ட கடைசியில் காங்கிரஸூக்கு கையில் இருக்கும் ஒரே ஆயுதம் இந்த அதானி பிரச்சினை மட்டும்தான் அதை வைத்து தினமும் பாராளுமன்றத்தை நடக்க விடாமல் முடக்கி வருகிறார்கள். மேலும் INDI கூட்டணியில் இருப்பவர்களே ராகுல்காந்தியின் இந்த தர்ணாவில் கலந்து கொள்ளவில்லை. எனவே பாவம் இவர்களுக்கு இந்த அதானி பிரச்சனை எத்தனை நாள் கை கொடுக்கும் என்று தெரியவில்லை அதுவரை வேறு ஏதாவது பிரச்சனை வராமலா போய் விடும் அல்லது அவர்களுக்குதான் தங்கள் எஜமானர் George Soros உத்தரவின் படி வேறு பிரச்சனைகளை உருவாக்கத் தெரியாதா?


Sudha
டிச 05, 2024 12:34

வரம்பு மீறுகிறார் ராகுல். வரலாற்றில் முதல் முறையாக தகுதி நீக்கம் செய்யப்பட்ட எதிர்கட்சி தலைவர் எனும் பெருமையைப் பெறப்போகிறார்


Anantharaman Srinivasan
டிச 05, 2024 12:32

அதானி மோசடி கூட்டு வியாபாரம் உண்மை தான். காங்.. ஆட்சி காலத்தில் பல கோடிக்கு வரி ஏய்ப்பு செய்த மோசடி மன்னன் திருபாய் அம்பானியை வளர விட்டது ராகுலுக்கு மறந்து போச்சு.


Sudha
டிச 05, 2024 12:31

27 கட்சிகள் 2ம் 7ம் கூட்டினால் 9, அம்புட்டுதான்


sankar
டிச 05, 2024 12:24

"பிரதமர் மோடியும், தொழிலதிபர் அதானியும் இரு வேறு நபர்கள் அல்ல"- எவ்ளோவாட்டி ஒரே பொய்யாய் திரும்ப திரும்ப சொல்லுவ - உன் ஆட்களே உன்னை நம்பவில்லை