உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 3வது நாளாக முடங்கியது பார்லி.,: இரு அவைகளும் ஒத்திவைப்பு

3வது நாளாக முடங்கியது பார்லி.,: இரு அவைகளும் ஒத்திவைப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டதால், இரு அவைகளும் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டன.பார்லிமென்டின் மழைக்கால கூட்டத் தொடர் நேற்று முன் தினம் (ஜூலை 21) தொடங்கியது. வரும் ஆகஸ்ட் 21ம் தேதி வரை கூட்டத்தொடர் நடைபெறுகிறது. கூட்டத்தொடரில் பல முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற, மத்தியில் ஆளும் பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு திட்டமிட்டுள்ளது.லோக்சபா, ராஜ்யசபாவில் நேற்றும் அலுவல்கள் நடக்கவில்லை. எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் அமளியில் இறங்கி ரகளையில் ஈடுபட்டதால், கேள்வி நேரம் மற்றும் ஜீரோ நேரம் உள்ளிட்ட அலுவல்கள் முற்றிலுமாக வீணாகின. பீஹாரில் தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளை நிறுத்தக்கோரி எதிர்க்கட்சிகள் நேற்று அமளியில் ஈடுபட்டு, சபைகளை முடக்கினர்.இந்நிலையில், இன்றும் (ஜூலை 23) லோக்சபா கூடியதும் எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.லோக்சபா சபாநாயகர் ஓம்பிர்லா பலமுறை எச்சரித்தும் எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவையை மதியம் 2 மணி வரை சபாநாயகர் ஓம்பிர்லா ஒத்திவைத்தார். அதேபோல், எதிர்க்கட்சிகள் அமளி காரணமாக ராஜ்யசபாவும் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. இதனால் 3வது நாளாக பார்லிமென்ட் முடங்கியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

Narayanan Muthu
ஜூலை 23, 2025 19:12

இதே பிஜேபி எதிர்கட்சியாக இருக்கும்போது ஏதோ அமலியே செய்யாதது போல் யோக்கியசிகாமணிகளாக இருந்தார்களா. இங்கு கருத்து பதிவிட்ட பிஜேபி சங்கிகளுக்கு செலெக்ட்டிவ் அம்னீசியா நோய் தாக்கம் அதிகம் போல்.


D Natarajan
ஜூலை 23, 2025 18:44

உடனே எதிர்க்கட்சி MP 20 பேரை இந்த தொடர் முடியும் வரை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் . இந்த அரசாங்கம் ஒரு முடிவெடுக்க முடியாத அரசு.


RAMESH
ஜூலை 23, 2025 15:30

எதிர்கட்சி அமளி கூச்சல் ரகளையில் ஈடுபடுவது...... பாஜக ஆட்சி ஊழல் அற்ற ஆட்சி என்று பொருள்....முடிந்தால் தவறுகளை சுட்டி காட்டட்டும்....கனி மொழி அவர்கள் நேற்று மாட்டிக் கொண்டது கேலி கூத்து


Sudha
ஜூலை 23, 2025 15:27

ஜனாதிபதி எப்படி செயல் பட வேண்டும் என்று விதித்த உச்ச நீதி மன்றங்கள், இவர்களையும் வழிக்கு கொண்டு வரட்டும்


Sudha
ஜூலை 23, 2025 15:25

இதையும் டிரம்ப் தீர்த்து வைப்பார் என நம்புவோம்


V.Mohan
ஜூலை 23, 2025 14:52

பார்லிமெண்டில் எதிர்க்கட்சிகள் புத்திசாலித்தனமாக ஒன்று சேர்ந்து சரியாக கூரான கேள்விகள் கேட்டு ஆளும் கட்சியை சங்கடப்படுத்த வேண்டும். அதை விட்டு பள்ளிப்படிப்பை பாதியில் விட்ட ராகுல் கான் காந்தியின் பேச்சைக் கேட்டுக்கொண்டு அமளியில் ஈடுபடும் செயல் அறிவார்ந்த செயலா என அனுபவமிக்க பாராளுமன்ற பல எதிர்கட்சி உறுப்பினர்கள் யோசிக்க வேண்டும்.


M Ramachandran
ஜூலை 23, 2025 13:55

ஜால்ராக்களை நம்பி கட்சியை நடத்தினால் அறஹாரா தான்


karthikeyan
ஜூலை 23, 2025 13:46

50 ஆயிரம் கோடி செலவு செய்து இந்த விளக்கெண்ணெய் மந்திரிகள் ஏதாவது உருப்படியா செய்கிறார்களா? இப்படி பட்ட ஜனநாயகம் தேவையா?


GMM
ஜூலை 23, 2025 13:40

பாராளுமன்றம் அரசு அலுவலகம் போல் ஆண்டு முழுவதும் செயல்படாது. பீஹாரில் தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளை நிறுத்த கூறுவது குற்றம். பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அமளி, முடக்கம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். தேர்தல் ஆணையம் அமளி உறுப்பினர் பதவி வாபஸ் பெற்று, அடுத்த குறைந்த வாக்கு பெற்ற உறுப்பினர் தேர்வு செய்ய வேண்டும். மசோதா பயன், பாதிப்பு மட்டும் தான் விவாதிக்க வேண்டும். விதண்டா வாதம் என்றால், மக்கள் வெறுப்படைந்து விடுவர்.


ஆறு
ஜூலை 23, 2025 13:27

இந்த பொறுப்பற்றவர்களை பணமும் மதுவும் வாங்கிக்கொண்டு ஓட்டு போட்டு மீண்டும் தேர்ந்தெடுக்கும் மூடர்கள் இருக்கும் வரை இது தொடரும்


சமீபத்திய செய்தி