உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / குளிர்கால கூட்டத்தொடர் கடைசி நாள்; எதிர்க்கட்சிகள் கூச்சல், குழப்பம்; பார்லி., காலவரையின்றி ஒத்திவைப்பு

குளிர்கால கூட்டத்தொடர் கடைசி நாள்; எதிர்க்கட்சிகள் கூச்சல், குழப்பம்; பார்லி., காலவரையின்றி ஒத்திவைப்பு

புதுடில்லி: குளிர்கால கூட்டத்தொடரில் கடைசி நாளான இன்றும் (டிச.,20) எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுப்பட்டனர். பார்லி., இரு அவைகளும் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டன.பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 25ம் தேதி துவங்கியது. கூட்டம் துவங்கிய முதல் நாளில் இருந்து, எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் இரு அவைகளும் செயல்படாமல் முடங்கி வந்தன. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=8fqhd5b8&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிலையில், கடைசி நாளான இன்றும் (டிச.,20) எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுப்பட்டனர். பா.ஜ., எம்.பி.,க்களை தள்ளிவிட்ட ராகுலை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என ஆளும் கட்சி எம்.பி.,க்களும், அமித் ஷா மன்னிப்பு கேட்க வேண்டும் என இண்டியா கூட்டணி எம்.பி.,க்களும் அமளியில் ஈடுபட்டனர்.இதனால் லோக்சபா, ராஜ்யசபா ஆகிய இருஅவைகளிலும் கூச்சல், குழப்பம் நிலவியது. லோக்சபாவை காலவரையின்றி சபாநாயகர் ஓம்பிர்லா ஒத்திவைத்தார். ராஜ்யசபாவிலும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால், காலவரையின்றி அவை தலைவர் ஜகதீப் தன்கர் ஒத்திவைத்தார். முன்னதாக பார்லிமென்ட் வளாகத்தில் பா.ஜ., எம்.பி.,க்களும், இண்டியா கூட்டணி எம்.பி.,க்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பார்லி., வளாகத்தில் பதற்றமான சூழல் நிலவியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

AMLA ASOKAN
டிச 20, 2024 23:51

இன்று தான் அதானி ஐயா நிம்மதியாக குறட்டை விட்டு தூங்கி கொண்டு இருக்கிறார் . தொந்தரவு செய்யாதீர்கள் .


T.sthivinayagam
டிச 20, 2024 21:35

அப்பாடா என்று இருக்கும் அதானி ஐயாவுக்கு


Sudha
டிச 20, 2024 19:51

அடுத்த கூச்சல் எப்போது?


AMLA ASOKAN
டிச 20, 2024 19:02

ஒரு 100 ருபாய் லஞ்சமாக வாங்கியவன் மீது சட்டம் பாயும்.ஆனால் பல லட்சம் கோடிகள் லஞ்ச பணத்தில் புரளும் அதானி குறித்து விவாதம் நடத்த மத்திய அரசு மறுக்கிறது.ஒரே நாடு ஒரேதேர்தல் என்ற எதிர்கட்சிகளனைத்தும் எதிர்க்கும் தேவையற்ற மசோதாவை கொண்டு வந்து அதானி விவகாரத்தை திசை மாற்றி அமளியை விரும்பியது ஆளும் கட்சி . அது நிறைவேறிவிட்டது . இனி அடுத்த கூட்டத்தொடரில் கொண்டு வர வேண்டிய அமளி துமளி மசோதாவை தயார் செய்ய வேண்டியது தான் . ருபாய் 1000 கோடியில் கட்டப்பட்ட பாராளுமன்றம் வெறும் ஆடம்பர காட்சிப் பொருள் தான். மக்களுக்கான விவாதம் நடைபெறப்போவதில்லை.


என்றும் இந்தியன்
டிச 20, 2024 16:57

இவர்கள் இந்திய குடியுரிமையை உடனே 9 வருடம் நிறுத்தவேண்டும்


kalyanasundaram
டிச 20, 2024 16:49

DISMISS ALL THESE IDIOTIC THIRD RATE SORRY NTH RATE POLITICIANS AND BRING MILITARY RULES OR A MOST ROUTHLESS DICTATOR WHO SHOULD PUNISH THESE IDIOTS


Sidharth
டிச 20, 2024 19:17

GO TO A DICTATOR COUNTRY LIKE NORTH KOREA BOSS,THIS IS INDIA


Dharmavaan
டிச 20, 2024 14:55

இந்த அவலத்தை யாரிடம் எடுத்து செல்வது கோர்ட் தலையிடுமா கேவலம் .ரவுடி பொறுக்கிகள் நடத்தை வரிப்பணத்தை வீணாக்குகிறது.


Srprd
டிச 20, 2024 14:18

We don't need general elections. Anyhow our MPs are not doing anything good for the people. Inflation is killing everyone and the Govt has done absolutely nothing to control it. Let's have President's rule for the next 20 years.


A.Gomathinayagam
டிச 20, 2024 14:13

ஆளும் கட்சியானது சிறிது விட்டுக்கொடுத்து தான் பாராளுமன்ற நடவடிக்கை உதவ வேண்டும் அவை தலைவர்களும் ஒரு தலை பட்சமாக நடந்து கொள்வதால் சுமூக மாக நடக்க வாய்ப்பில்லை ,மக்கள் வரி பணத்தை வீணடித்ததில் இருவருக்கும் பங்கு உண்டு ,ஆளும் கட்சி சிறிதாவது பொறுப்புடன் நடந்து கொண்டிருக்க வேண்டும்


Sidharth
டிச 20, 2024 13:56

பயந்து ஓடும் .......