உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / உயர்நீதிமன்றம் உத்தரவுக்கு எதிரான மனு: வாபஸ் பெற்றார் கெஜ்ரிவால்

உயர்நீதிமன்றம் உத்தரவுக்கு எதிரான மனு: வாபஸ் பெற்றார் கெஜ்ரிவால்

புதுடில்லி: உயர்நீதிமன்றம் உத்தரவுக்கு எதிராக தாக்கல் செய்த மனுவை டில்லி முதல்வர் கெஜ்ரிவால் திரும்பப் பெற்றார். மதுபான கொள்கை ஊழல் தொடர்பான பண மோசடி வழக்கில், டில்லி முதல்வரும், ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால், கடந்த மார்ச் 21ல் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார். லோக்சபா தேர்தலில் பிரசாரம் செய்வதற்காக, ஜூன் 1ம் தேதி வரை அவருக்கு இடைக்கால ஜாமின் வழங்கி, மே 10ல் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ஜூன் 2ல் திஹார் சிறையில் சரணடைந்தார்.ஜாமின் கோரி, டில்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில், கெஜ்ரிவால் தரப்பில் தாக்கல் செய்த மனுவை கடந்த 20ல் விசாரித்த நீதிமன்றம், அவருக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து, அமலாக்கத்துறை தாக்கல் செய்த மனுவை விசாரித்த டில்லி உயர் நீதிமன்ற நீதிபதி சுதிர் குமார் ஜெயின் தலைமையிலான விடுமுறை கால அமர்வு ஜூன் 21ம் தேதி ஜாமின் உத்தரவுக்கு தடை விதித்து.ஜாமின் உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் கெஜ்ரிவால் தரப்பில் அப்பீல் மனு செய்யப்பட்டது. இன்று(ஜூன் 26) உயர்நீதிமன்றம் உத்தரவுக்கு எதிராக தாக்கல் செய்த மனுவை டில்லி முதல்வர் கெஜ்ரிவால் திரும்பப் பெற்றார்.

கெஜ்ரிவாலுக்கு உடல் நலக்குறைவு

நீதிமன்றம் அழைத்து செல்லப்பட்ட டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. பின்னர் அவருக்கு உடனடியாக முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

Azar Mufeen
ஜூன் 26, 2024 16:33

இவர் போன்று அரசு பள்ளியை தரமாக வடிவமைத்தது யார், , நமது வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் யார்


Radhakrishnan Seetharaman
ஜூன் 26, 2024 20:07

கெஜ்ரிவால் நடத்திய தரமான அரசுப் பள்ளியில் படித்து வந்தவர் தான் இந்த அறிவாளி :)


Swaminathan L
ஜூன் 26, 2024 15:14

தேர்தலில் வெற்றி பெற்றால் ஜூன் 5ம் தேதியே விடுதலையாகி வெளி வருவேன் என்றார். சுக்ரோஸ் அதிகமுள்ள பழங்களாக வரவழைத்துச் சாப்பிட்டு டைப் 2 டயாபடிக் பிரச்சினைக்கு இன்சுலின் இன்ஜெக்ஷன் தர மறுக்கிறது சிறை நிர்வாகம் என்றார். பதினைந்து இருபது நாட்களில் ஆறு கிலோ எடை குறைந்து விட்டதாய் கூடுதல் அலப்பறை. சக அமைச்சர் ஆருஷியோ, கெஜ்ரிவால் மறுபடியும் சிறைக்குப் போனால் அங்கே கொல்லப்படலாம் என்று ஆரூடம் சொன்னார். இந்திய அரசியலில் மறைக்கப்பட்ட பின்புல உதவி பெறும் அரசியல்வாதி போல இருக்கிறது இவர் நடவடிக்கைகள்.


Indhuindian
ஜூன் 26, 2024 14:07

செந்தில் பாலாஜி - அரவிந்த் கெஜ்ரிவால் சபாஷ் சரியான போட்டி


vadivelu
ஜூன் 26, 2024 14:02

சில அலப்பறைகள் கெஜ்ரிவாலுக்கு பிணை கொடுத்ததும், மோடியை தூக்கி உள்ளே வையுங்கள் என்று உளறி திரிந்தனர்.


M S RAGHUNATHAN
ஜூன் 26, 2024 13:57

தேவை இல்லாமல். உச்ச நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்து நீதி மன்றத்தின் பொன்னான நேரத்தை வீணடித்த கெஜ்ரிவாலுக்கு கடும் அபராதம் விதிக்க வேண்டும்.


Balasubramanian
ஜூன் 26, 2024 13:40

உச்ச நீதிமன்றம் இவர் மனுவை நிராகரிக்கும் என்பது நாம் எதிர் பார்த்தது! இவர் வாபஸ் பெறுவார் என்பது நாம் எதிர் பாராது!


sugumar s
ஜூன் 26, 2024 13:35

When he came with Anna Hazare every body thought he will be a mr. clean. Now cleaning his image by involving in bribery matters. Delhi people should understand his current real image of getting into general politician mode and reject him in next election. AAP is not fit for fighting social causes and do welfare to people


Narayanan
ஜூன் 26, 2024 13:20

ஜாமின் கொடுத்து பாருங்கள் கேஜ்ரிவால் என்ன ஒரு திமிர் நடையில் போவார் என்று . நடிப்பு சக்கரவர்த்தி . அமெரிக்காவும் , ஜெர்மனியும் பாய்ந்து வந்தவுடன் தனக்கு உலக அளவில் தொடர்பு இருப்பதாகவும் தான் மிகப்பெரிய தலைவர் என்றும் சட்டத்தை துச்சமாக மதித்து மிதிக்கும் ஒரு முதல்வர் . நீதிமன்றம் இவர் விஷயத்தில் இன்னும் கண்டிப்புடன் இருக்கவேண்டும் .


Iniyan
ஜூன் 26, 2024 13:02

நல்லா நடிப்பார்


S.Bala
ஜூன் 26, 2024 12:42

சட்டங்களை மாற்றினால் தான் இவரை போன்றவர்கள் எளிதில் வெளியே வரமுடியாது. இப்பவே கோர்ட் அறையில் நடித்து கொண்டிருக்கிறார்.


மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி