உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மக்கள் தொகை 146 கோடி ; வருமான வரி செலுத்துவதோ 3 கோடி பேர் மட்டுமே: கருத்து சொல்லுங்க வாசகர்களே!

மக்கள் தொகை 146 கோடி ; வருமான வரி செலுத்துவதோ 3 கோடி பேர் மட்டுமே: கருத்து சொல்லுங்க வாசகர்களே!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: மொத்த மக்கள் தொகையான 146 கோடி பேரில் 3 கோடி பேர் மட்டுமே வருமான வரி செலுத்துகின்றனர் என்ற விபரம் வெளியாகி உள்ளது. இது குறித்து வாசகர்கள் தங்களது கருத்துக்களை, வாசகர்கள் கருத்துப் பகுதியில் பதிவு செய்யலாம்.இந்தியாவில் தனி நபர், தொழிலதிபர்கள் மற்றும் நிறுவனங்கள் தங்களின் வருமானங்களுக்கு ஏற்ப வரி செலுத்த வேண்டியது கட்டாயம். தற்போது, ரூ.12 லட்சம் வரை வருமானம் ஈட்டுபவர்களுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. நிறுவனங்கள் மற்றும் தனி நபர்கள் செலுத்தும் வரி தான் அரசின் பல்வேறு நலத்திட்டங்களுக்கு ஆகும் செலவில் முக்கிய அம்சமாக உள்ளது.ஒவ்வொரு ஆண்டும் வருமான வரி தாக்கல் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. 146 கோடி மக்கள் தொகையில் இந்த ஆண்டு 9.19 கோடி பேர் மட்டுமே வருமான வரி கணக்கை தாக்கல் செய்துள்ளனர். இருப்பினும், இது கடந்த ஆண்டை காட்டிலும்( 8.52 கோடி பேர்) அதிகம் ஆகும். இந்தாண்டு கணக்கு தாக்கல் செய்தவர்கள் எண்ணிக்கையில் மஹாராஷ்டிரா முதலிடத்திலும், உ.பி., இரண்டாம் இடத்திலும் குஜராத் 3 ம் இடத்திலும், ராஜஸ்தான் 4வது இடத்திலும், தமிழகம் 5வது இடத்திலும் உள்ளன.இந்நிலையில், இந்தியாவில் வருமான வரி செலுத்துவோர் எண்ணிக்கை பற்றிய புள்ளி விவரம் வெளியாகி உள்ளன.அதன்படி,இந்தியாவின் மக்கள் தொகை -146 கோடி பேர்பான் கார்டு வைத்து உள்ளவர்கள் - 78 கோடி பேர்ஆதாருடன் பான் கார்டை இணைத்தவர்கள் - 60 கோடி பேர்தற்போது வருமான வரி விதிப்புக்குரியவர்கள் -13 கோடி பேர்வருமான வரி கணக்கு தாக்கல் செய்தவர்கள் - 9 கோடி பேர்பூஜ்ஜியம் வரி தாக்கல் செய்தவர்கள் - 6 கோடி பேர் வருமான வரி செலுத்துவோர் எண்ணிக்கை - 3 கோடி மட்டுமே.

இது பற்றிய உங்கள் கருத்துகளை கமென்டில் பதிவு செய்யுங்கள் வாசகர்களே.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 85 )

சிட்டுக்குருவி
செப் 28, 2025 05:57

வரி விலக்குக்கு உட்பட்ட வருமானம் உள்ளவர்கள் மட்டுமே வரி பிடித்ததிற்கு விலக்கு அளிக்கவேண்டும் .அதற்குமேல் உள்ளவர்களுக்கு கட்டாயமாக குறைந்த அளவேனும் வரிபிடிதம் செய்து, வரிக்கணக்கு தாக்கல் செயும்போது வரிக்குமேல் உள்ளதை திருப்பி கொடுக்கும் முறையை அமல் படுத்தவேண்டும் .தற்பொதுள்ள வரிவிலக்கு பாருங்கள் 15G/H போன்ற பல பாரங்களை மக்கள் தவறாக பயன்படுத்தி விலக்கு பெரும் நிலைமை மாற்றவேண்டும். ஏன் என்றால் இந்த படிவங்களின் உண்மைத்தன்மையை யாரும் கண்டறியமுடியாது .நிதி நிறுவனங்கள் மேலும் வங்கிகள் அவர்களுக்கும் வருமானவரி சட்டங்கள் தெரிவதில்லை. யார் வேண்டுமானாலும் 15H/15G கொடுக்கலாம் என்று அறிவுறுத்துகின்றார்கள். அடுத்தது இன்னும் கருப்பு பணம் ஒழிந்தபாடில்லை. மக்களிடையே அதிக மதிப்புகள் ரூபாய் நோட்டுக்களை புழக்கத்தில் விடக்கூடாது. உதாரணத்திற்கு 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் கட்டுப்படுத்த வேண்டும் .இனிமேல் அச்சிடுவதை நிறுத்தவேண்டும் .வியாபாரிகள் ,கம்பெனி நடுத்துபவர்கள் எல்லாம் வங்கியிலிருந்து பெருந்தொகை வாங்குவதை கட்டுப்படுத்த வேண்டும் .வருமானவரி செலுத்துவதினால் சில நேரங்களில் மக்களுக்கு சில அனுகூலங்கள் இருப்பதை மக்களுக்கு தெளிவுபடுத்தவேண்டும் .வருமானவரி கணக்கு தாக்கல் செயபவர்களுக்கு சில சிறிய சலுகைகளை கண்டறிந்து அறிவிக்கவேண்டும் .


ஜெய்ஹிந்த்புரம்
செப் 28, 2025 08:42

தம்பி, 2000 ஓவா நோட்டு எங்கே இருக்கு?


Dilip Kumar
செப் 27, 2025 23:29

Check who are all eligible to pay tax who are all not eligible to pay tax Check monthly income and expenses of family Check loan Check Government officer and other higher officer who is earning more


ஜெய்ஹிந்த்புரம்
செப் 27, 2025 22:35

வரி போட்டு தாக்கும் அமெரிக்காவிடமிருந்து சில லட்சம் கோடி செலவில் வீணாக தளவாடங்களை வாங்கவும், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு 12 லட்சம் கோடி வரிச்சலுகை வழங்கவும் நம்முடைய வரிப்பணம் வீணாகிறது


K V Ramadoss
செப் 27, 2025 18:12

தோல்வி இந்திய குடிமகனுடையது. மொத்த மக்கள் தொகையில் 2% மக்கள் மட்டுமே வருமான வரி கட்டுகிறார்கள் என்றால், மக்கள் பெருமளவில் அரசாங்கத்தை ஏமாற்றுகிறார்கள் என்றுதான் அர்த்தம். இவர்கள் அறவே தேசப்பற்று இல்லாதவர்கள். இவர்கள் அரசாங்கத்தை குறை சொல்ல உரிமை அற்றவர்கள்


Dilip Kumar
செப் 27, 2025 23:31

1 to 15 age of people not earning


Suresh
செப் 27, 2025 16:54

இது முன்னாள் இந்நாள் மத்திய அரசின் தோல்வியே. மாதாந்திர சம்பளம் வாங்குவோர் மட்டுமே வருமான வரி கட்டுகின்றனர். மத்திய அரசு 30 லட்சம் கீழ் வருட வருமானம் வாங்குவோருக்கு வருமான வரி விதிக்கக்கூடாது.


V GOPALAN
செப் 27, 2025 12:54

பேமிலியின் வருமானம் மற்றும் வரி காட்டும் விவரங்கள் கிடைக்குமா . அம்பானி அதானி யின் விவரம் கம்ப்யூட்டரில் உள்ளது என்பதை நினைவில் கொள்ளவும்


Saravana
செப் 27, 2025 12:48

இது அடுத்த வருடம் 73 இலட்சம் 0 . 5 ℅ தான் அடுத்த வருடம் இன்வெஸ்ட் இன் பார்ம்லந்து வாட்டவேர் அண்ட் டான்டீ பெ tax 0.5 ℅ யோசியுங்கள் உங்கள் உடல் நலத்தை கெடுத்து கொள்ளாதீர்கள் 0 . 5 ℅ tax return கிடைக்காது நமக்கு சோசியல் செக்யூரிட்டி security கிடையாது கோவிந்தா கோவிந்தா


R SRINIVASAN
செப் 27, 2025 08:24

உங்களுக்கு அடிப்படை கணக்கே தெரியவில்லை. காங்கிரஸ் அரசாண்டபோது அரபு நாடுகளில் இருந்து கடனுக்கு எண்ணெய் வாங்கி அதற்கு வட்டியும் செலுத்தி வந்தார்கள் .ஒரு நாட்டின் கரன்சி மதிப்பு அந்த நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பை வைத்தும் தங்கத்தின் இருப்பை வைத்தும் கணக்கிடுவார்கள. கச்சா என்னை விலை குறையும்போது விலை அதிகமாகும்பொழுது விலையை எத்ரினால் மக்கள் கொதித்து விடுவார்கள்.


R SRINIVASAN
செப் 27, 2025 08:05

தனி மனித வருமானம் அதிகரிக்கும்போது விலைவாசி விண்ணை முட்டுகிறது. எவ்வளவு சேமித்தாலும் உயரும் விலைவாசியினால் இன்றய மக்கள் மிகவும் அவதிப்படுகிறார்கள். ஒரு குடும்பத்தில் LKG-IL இருந்து கல்லூரி படிப்பை முடிப்பதுர்குள் அந்த குடும்பம் பொருளாதாரத்தில் தத்தளிக்கிறது. அப்படியே அந்த குழந்தைகள் படித்து முடித்து வேலைக்கு செல்லும்போது அந்த குடும்பத்தை சேர்ந்த வயதானவர்களுக்கு மருத்துவச்செலவுகள் அதிகரிக்கின்றன. இதை விட கொடுமை என்னவென்றால் தீராத வ்யாதியுள்ளவர்கள் ஒரு குடும்பத்தில் இருந்தால் அவர்கள் படும் அவதிகள் சொல்லமுடியாத அளவில் இருக்கின்றன. இதற்கு தீர்வு காண வேண்டுமென்றால் தனி மனித வருமானத்தை மூன்று வகைகளாக பிரித்து கணக்கிடவேண்டும். 1. வறுமைக்கோட்டிற்கு கீழ் 2 .நடுத்தர வர்கம் 3. பெரும் பணக்காரர்கள். பெண்களுக்கு தாலிக்கு தங்கம் என்று முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கொண்டு வந்த திட்டத்தை இந்தியா முழுவதும் அமல் படுத்த வேண்டும். ஏழைக்குழந்தைகளுக்கு கட்டணமில்லா கல்வியை அமல் படுத்த நவோதய பள்ளிகளை இந்தியா முழுவதும் திறக்க வேண்டும் .இட ஒத்திக்கிட்டு முறையை ஒழித்து விட்டு திறமையின் அடிப்படையில் வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும்.


ஜெய்ஹிந்த்புரம்
செப் 27, 2025 00:08

இந்தியாவின் மொத்த சொத்து மதிப்பில் 15 சதவீதம் வெறும் 100 குடும்பங்களிடம் சிக்கி உள்ளது. 80% பொருளாதாரமும், சொத்தும் வெறும் 15% மக்களிடம் உள்ளது. இந்தியாவில் ஏழை பணக்காரன் பிளவு எவரெஸ்ட்டுக்கும், பசிபிக் கடலில் உள்ள Challenger Deep க்கும் உள்ள வித்தியாசமாக உள்ளது. தனி நபரின் ஆண்டு வருமானமும் அவர்கள் கட்டும் வரியையும் உண்மையாக கணக்கிட்டால் வாய்க்கும் வயிறுக்கும் என்று பிழைப்பு நடத்தும் ஏழை கட்டும் வரி, அவன் வருமானவரி கட்டவில்லையென்றாலும், சதவீத கணக்குப்படி அதிகம் இருக்கும். வரிச்சலுகைகள் உள்ள நாடுகளுக்கு தங்களின் கம்பெனி லாபத்தை கடத்தி, அதானியும் அம்பானியும் எத்தனை லட்சம் கோடிகளை ஏமாற்றுகிறார்கள் என்று தினமும் செய்திகளில் வந்து கொண்டு தான் உள்ளது. அப்படி ஏமாற்றிய பிறகும் அவர்களுக்கு கடந்த பத்தாண்டுகளில் தரப்பட்ட வரிச்சலுகை 12 லட்சம் கோடி. இந்த வருடம் ஜிஎஸ்டி வரிக் குறைப்பால் 140 கோடி மக்கள் சேமிக்கப் போவதாக நம்ம பிரதமர் சொல்லும் பணத்தில் சரி பாதி வெறும் 100 நிறுவனங்களுக்கு அள்ளிக் கொடுத்துள்ளார். அதை பற்றியும் நாம் பிரித்து மேயவேண்டாமா, பேசவேண்டாமா ?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை