உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மக்கள் தொகை 146 கோடி ; வருமான வரி செலுத்துவதோ 3 கோடி பேர் மட்டுமே: கருத்து சொல்லுங்க வாசகர்களே!

மக்கள் தொகை 146 கோடி ; வருமான வரி செலுத்துவதோ 3 கோடி பேர் மட்டுமே: கருத்து சொல்லுங்க வாசகர்களே!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: மொத்த மக்கள் தொகையான 146 கோடி பேரில் 3 கோடி பேர் மட்டுமே வருமான வரி செலுத்துகின்றனர் என்ற விபரம் வெளியாகி உள்ளது. இது குறித்து வாசகர்கள் தங்களது கருத்துக்களை, வாசகர்கள் கருத்துப் பகுதியில் பதிவு செய்யலாம்.இந்தியாவில் தனி நபர், தொழிலதிபர்கள் மற்றும் நிறுவனங்கள் தங்களின் வருமானங்களுக்கு ஏற்ப வரி செலுத்த வேண்டியது கட்டாயம். தற்போது, ரூ.12 லட்சம் வரை வருமானம் ஈட்டுபவர்களுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. நிறுவனங்கள் மற்றும் தனி நபர்கள் செலுத்தும் வரி தான் அரசின் பல்வேறு நலத்திட்டங்களுக்கு ஆகும் செலவில் முக்கிய அம்சமாக உள்ளது.ஒவ்வொரு ஆண்டும் வருமான வரி தாக்கல் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. 146 கோடி மக்கள் தொகையில் இந்த ஆண்டு 9.19 கோடி பேர் மட்டுமே வருமான வரி கணக்கை தாக்கல் செய்துள்ளனர். இருப்பினும், இது கடந்த ஆண்டை காட்டிலும்( 8.52 கோடி பேர்) அதிகம் ஆகும். இந்தாண்டு கணக்கு தாக்கல் செய்தவர்கள் எண்ணிக்கையில் மஹாராஷ்டிரா முதலிடத்திலும், உ.பி., இரண்டாம் இடத்திலும் குஜராத் 3 ம் இடத்திலும், ராஜஸ்தான் 4வது இடத்திலும், தமிழகம் 5வது இடத்திலும் உள்ளன.இந்நிலையில், இந்தியாவில் வருமான வரி செலுத்துவோர் எண்ணிக்கை பற்றிய புள்ளி விவரம் வெளியாகி உள்ளன.அதன்படி,இந்தியாவின் மக்கள் தொகை -146 கோடி பேர்பான் கார்டு வைத்து உள்ளவர்கள் - 78 கோடி பேர்ஆதாருடன் பான் கார்டை இணைத்தவர்கள் - 60 கோடி பேர்தற்போது வருமான வரி விதிப்புக்குரியவர்கள் -13 கோடி பேர்வருமான வரி கணக்கு தாக்கல் செய்தவர்கள் - 9 கோடி பேர்பூஜ்ஜியம் வரி தாக்கல் செய்தவர்கள் - 6 கோடி பேர் வருமான வரி செலுத்துவோர் எண்ணிக்கை - 3 கோடி மட்டுமே.

இது பற்றிய உங்கள் கருத்துகளை கமென்டில் பதிவு செய்யுங்கள் வாசகர்களே.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 93 )

sangarapandi
அக் 18, 2025 07:15

மக்கள் தொகை 146 கோடி, வருமான வரி செலுத்துவதோ 3 கோடி பேர் மட்டுமே என்ற நிலையில் வருமான வரி செலுத்துபவர்களில் தற்போது பலர் தொழில் செய்ய முடியாமல் உள்ளனர் . அதனால் வருமான வரி செலுத்துபவர்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் மாதாந்திர சிறப்பு ஊதியமாக வாழ்நாள் முடியும் வரை அவர்கள் செலுத்திய வரித் தொகையின் அடிப்படையில் சிறப்பு ஊதியம் வழங்குவதற்கு அவசர சட்டம் இயற்றி வழங்க வேண்டும் .அதன் மூலம் வருமான வரி செலுத்துவர் களின் எண்ணிக்கை உயரும், நன்றி என்றும் உங்கள் எஸ். சங்கரபாண்டி


Mr Krish Tamilnadu
அக் 16, 2025 23:02

வருமான உச்சவரம்பு விட அதிகமாக சம்பாதிப்பவர்கள் வரி செலுத்துகிறார்கள். மற்றவர்கள் ஜி.எஸ்.டி. மூலமே தனது வருமானத்தை வரியாக செலுத்துகிறார்கள். ஜி.எஸ்.டி வரி விதிப்பை இன்னும் நெறி படுத்தினால் ஜி.எஸ்.டி வரி ஏய்ப்பு நடந்தால், அது தடுக்க படும். ஆதாருக்கு இணையான டம்மி நம்பர் ஒன்று உருவாக்க பட வேண்டும். ஜி.எஸ்.டி பில் போட்டு பணம் வசூலிப்பவர்கள் அந்த வாடிக்கையாளர் டம்மி இணை ஆதார் எண்ணை பதிவிட்டு அந்த பில் பதிய வேண்டும். இந்த நடைமுறையில் அவர்களுக்கு செலுத்தப்பட்ட ஜி.எஸ்.டி. அவர்கள் அலைபேசி எண்ணுக்கு அனுப்ப பட வேண்டும். இதில் அவர்களுக்கு எத்தனை ஜி.எஸ்.டி பில்லுக்கு பணம் செலுத்தினார்கள். அந்த ஜி.எஸ்.டி அரசுக்கு சென்று விட்டாதா என தெரிய வரும். ஆதார் எண்ணும் அதன் தரவுகளும் பாதுகாப்பாக இருக்கும். ஒவ்வொருவரும் ஜி.ஏஸ்.டியாக செலுத்தும் விவரம் தெரிய வரும். இந்தியாவுக்கு நமது பங்களிப்பு என பெருமை கொள்வார்கள்.


shakti
அக் 15, 2025 14:14

இதில் பாகிஸ்தான் பிரிக்க வாக்களித்துவிட்டு அங்கே செல்லாமல் இங்கேயே தங்கிவிட்ட தனியார் அமைப்பினர் எவ்வளவு ???


Paramasivam Ravindran
அக் 15, 2025 12:04

நான் சம்பளம் வாங்குவதால் முப்பது வருடமாக வருமானவரி கட்டி வருகிறேன். அதன் காரணமாக எனக்கு எந்த சலுகையும் அரசாங்கம் தருவதில்லை மற்றும் அரசாங்க இலவச திட்டங்களும் கிடைப்பதில்லை. ஆனால் என்னைவிட அதிகம் வருமானம் பார்க்கும் பால்காரர், பொட்டிக்கடைக்காரர், மட்டன், சிக்கன் விற்பவர் எல்லாம் வரி காட்டுவதில்லை. வீடு வரி, தண்ணி வரி, எல்லாம் என்னை போன்ற மக்கள் கட்டுவார்கள். ஆனால், எங்களின் வரியை, வரி கட்டாத மக்களுக்கு இலவசமாக கொடுத்து ஓட்டு கேட்பார்கள்.


Ramanujam Veraswamy
அக் 15, 2025 02:42

Iincome tax can be withdrawn and Consumption tax can be introduced- in order to bring all under tax net work and also reduce corruption.


Ramanujam Veraswamy
அக் 15, 2025 02:39

The data brings out the efficiency of intelligent wing of IT dept - yet another corrupt wing. Most of the income of political leaders go undetected and not taxed in the namoʻe of agricultural income. Exemtion of Agricultural income from IT may be withdrawn and initially be subjected to minimum tax of 5 to 10%,with no exemption.


Som
அக் 07, 2025 19:05

We are a parallel economy, most of the money goes in to it. There are many thousand, 10 rupee Balajis. If strict action taken against the corrupt officials and politicians, The income tax collection and number of people paying will increase. Debar them from running in election. If criminal or corruption case against thme is not complete in 5 years, they should not hold office for next 5 years. Benefit of doubt should have a price of 5 years. That help youngsters get a chance.


M.Sam
அக் 05, 2025 17:15

வரி செலுத்துவது என்பது தொழில் செய்பவர்கள், அரசு வேலையில் அதிக சம்பளம் உள்ளவர்கள் , தனியார் நிர்வாகத்தில் ஹிக்க சம்பளம் வாங்குவார்கள் என்ற பிரிவினர்கள் வரி காட்டுகிறார்கள் .காரணம் ஆளும் அரசுகளின் தவறான பொருளாதார கொள்கை இந்தியாவில் தனி நபர் வருமானம் சீனாவை விட குறைவு சீனா தொழில் வளம் மிக நாடு. அங்கே அனைவருக்கும் தொழில் உள்ளது .இங்கே அப்படியா குல கல்வி முறையில் நீ விவசாயி மகன் தானே நீ அதை மட்டும் செய். நீ சவரம் செய்யும் தொழில் தானே செய்கிறாய், நீ மண்பாண்டம் செய்யும் தொழில் தானே செய்கிறாய். அதையே தொடரு என்று மக்களை அடக்கி ஒடுக்கி வைத்து உள்ளது. அனைவருக்கும் செல்வ வளம் பெறுக திட்டம் கொண்டு வாருங்கள் திறமையை வளர்க்கும் கல்வி தேவை.குலக்கல்வி தேவை இல்லை


சிட்டுக்குருவி
செப் 28, 2025 05:57

வரி விலக்குக்கு உட்பட்ட வருமானம் உள்ளவர்கள் மட்டுமே வரி பிடித்ததிற்கு விலக்கு அளிக்கவேண்டும் .அதற்குமேல் உள்ளவர்களுக்கு கட்டாயமாக குறைந்த அளவேனும் வரிபிடிதம் செய்து, வரிக்கணக்கு தாக்கல் செயும்போது வரிக்குமேல் உள்ளதை திருப்பி கொடுக்கும் முறையை அமல் படுத்தவேண்டும் .தற்பொதுள்ள வரிவிலக்கு பாருங்கள் 15G/H போன்ற பல பாரங்களை மக்கள் தவறாக பயன்படுத்தி விலக்கு பெரும் நிலைமை மாற்றவேண்டும். ஏன் என்றால் இந்த படிவங்களின் உண்மைத்தன்மையை யாரும் கண்டறியமுடியாது .நிதி நிறுவனங்கள் மேலும் வங்கிகள் அவர்களுக்கும் வருமானவரி சட்டங்கள் தெரிவதில்லை. யார் வேண்டுமானாலும் 15H/15G கொடுக்கலாம் என்று அறிவுறுத்துகின்றார்கள். அடுத்தது இன்னும் கருப்பு பணம் ஒழிந்தபாடில்லை. மக்களிடையே அதிக மதிப்புகள் ரூபாய் நோட்டுக்களை புழக்கத்தில் விடக்கூடாது. உதாரணத்திற்கு 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் கட்டுப்படுத்த வேண்டும் .இனிமேல் அச்சிடுவதை நிறுத்தவேண்டும் .வியாபாரிகள் ,கம்பெனி நடுத்துபவர்கள் எல்லாம் வங்கியிலிருந்து பெருந்தொகை வாங்குவதை கட்டுப்படுத்த வேண்டும் .வருமானவரி செலுத்துவதினால் சில நேரங்களில் மக்களுக்கு சில அனுகூலங்கள் இருப்பதை மக்களுக்கு தெளிவுபடுத்தவேண்டும் .வருமானவரி கணக்கு தாக்கல் செயபவர்களுக்கு சில சிறிய சலுகைகளை கண்டறிந்து அறிவிக்கவேண்டும் .


ஜெய்ஹிந்த்புரம்
செப் 28, 2025 08:42

தம்பி, 2000 ஓவா நோட்டு எங்கே இருக்கு?


Dilip Kumar
செப் 27, 2025 23:29

Check who are all eligible to pay tax who are all not eligible to pay tax Check monthly income and expenses of family Check loan Check Government officer and other higher officer who is earning more


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை