உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஆபாச ரீல்ஸ் சகோதரிகளுக்கு ஆப்பு! ஊர் மக்கள் எதிர்ப்பால் கைதாகி விடுதலை

ஆபாச ரீல்ஸ் சகோதரிகளுக்கு ஆப்பு! ஊர் மக்கள் எதிர்ப்பால் கைதாகி விடுதலை

சம்பல்: பிரபலமாக வேண்டும் என்ற ஆசையில், முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் கிராமத்தில் ஆபாச, 'ரீல்ஸ் வீடியோ'க்களை பதிவிட்டு வந்த சகோதரியரை, போலீசார் கைது செய்து ஜாமினில் விடுவித்துள்ளனர்.உ.பி.,யின் சம்பல் மாவட்டத்தில் உள்ள சிறிய கிராமம் ஷாபாஸ்பூர் கலான். முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருக்கும் இந்த கிராமத்தில், தற்போதைய, '5ஜி' யுகத்திலும் பழமைவாதம் சற்று துாக்கலாகவே காணப்படுகிறது. இங்கு, மெஹருல்நிஷா, 21, மெஹக், 20, என்ற சகோதரியர் வசித்து வருகின்றனர்.இனிப்புகளின் மேல் தடவப்படும் வெள்ளி ஜரிகையை உருவாக்குவது தான் இவர்களது குடும்பத் தொழில். குடும்பத்தின் வறுமையை விரட்ட, வெள்ளி ஜரிகை வேலையை உதறிவிட்டு வெள்ளித் திரைக்குள் நுழைய வேண்டும் என ஆசைப்பட்டனர். ஆனால், ஊரில் பழமைவாதம் புரையோடி போயிருந்ததால், அந்த ஆசை நிறைவேறாது என புரிந்து கொண்டனர். அதற்கு மாற்றாக சமூக வலைதளம் வாயிலாக பிரபலமடைய நினைத்த சகோதரியருக்கு, 'இன்ஸ்டா இன்ப்ளூயன்சர்ஸ்' ஹீனா, ஜரர் ஆலம் இருவரும் உதவ முன்வந்தனர்.மொராதாபாத் அருகே உள்ள பாக்படாவில் அவர்கள் நடத்திய ஸ்டூடியோவுக்குள், பல கனவுகளுடன் காலடி எடுத்து வைத்தனர் சகோதரியர். 'இன்ஸ்டா'வில், 'ரீல்ஸ்' எனப்படும், குறும்படக் காட்சிகளை பதிவிடுவது பற்றி அவர்களிடம் கற்றுக் கொண்டவர்கள், தங்களுக்கென தனி ஐ.டி.,யை உருவாக்கி அதில், 'ரீல்ஸ்' வீடியோக்களை பதிவிட ஆரம்பித்தனர்.அதிக ரசிகர்களை ஈர்க்கும் நோக்கில், 'ரீல்ஸ்'களில் வன்சொற்களை பயன்படுத்துவது, ஆடை குறைப்பு காட்சிகள் ஆகியவற்றையும் அரங்கேற்றி இருந்தனர். இந்த முயற்சியால், 5 லட்சம் பேர் சகோதரியரை இன்ஸ்டாவில் பின்தொடர்ந்தனர்.அதே சமயம் முகம் சுளிக்க வைக்கும் ஆபாச 'ரீல்ஸ்'களை பார்த்த ஊர் மக்கள், சகோதரியரை கைது செய்யக்கோரி போலீசில் புகார் அளித்தனர்.அதன் அடிப்படையில் இரு சகோதரியரையும், அவர்களுக்கு உதவிய, 'இன்ஸ்டா இன்ப்ளூயன்சர்'களையும் கைது செய்த போலீசார், ஜாமினில் விடுவித்துள்ளனர். தற்போது, 'ரீல்ஸ்' வெளியிடுவதில் மெஹக்கும், மெஹருல்நிஷாவும் அடக்கி வாசித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Rajesh
ஜூலை 21, 2025 11:28

மற்றவரின் கஷ்டத்தை துடைக்க முன்வராத சமூகம்தான்,அவர்களின் வளர்ச்சி கண்ட உடன்,அதை உடைத்து எரிய வருவார்கள்


R K Raman
ஜூலை 21, 2025 09:48

அவர்கள் வறுமையை ஒழிக்க அந்த ஊர் என்ன செய்து?


Rajesh
ஜூலை 21, 2025 11:25

Unmai


Haja Kuthubdeen
ஜூலை 20, 2025 07:54

கண்ணியம்.. ஒழுக்கம்.. அடக்கம் அனைத்து பெண்களுக்குமே அழகு.. இதை கடைபிடிக்க வலியுறுத்தினால் பெண் உரிமை..பழமைவாதம் ..காட்டுமிராண்டிதனம் என்று சிலர் வரிந்து கட்டுவீர்கள்..கடந்து போவோம்.


Senthoora
ஜூலை 21, 2025 06:40

இதைவிட இப்போ சினிமாவில் குத்தாட்டம் படுஆபாசமா வருது, அதுக்குமட்டும் திரையரங்கில் பார்க்க அனுமதி இருக்கு.


Padmasridharan
ஜூலை 20, 2025 07:45

இந்த மாதிரி ரீல்ஸ்கள் முகம் சுளிக்க வைத்தால் ஏன் 5 லட்சம் பேர் இவருக்கு பின் இருக்கின்றனர்..


Sekar Chidambaram
ஜூலை 20, 2025 10:09

5இலட்சம் பேரையும் கைது செய்ய வேண்டும். குற்றத்திற்கு உடந்தையும் குற்றம் தானே..


subramanian
ஜூலை 20, 2025 00:56

பணம் அவளுடைய வெட்கத்தை விலை பேசி விட்டது.


சமீபத்திய செய்தி