உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கொலை வழக்கில் கைதான பேராசிரியை வேதியியல் அறிவால் வாதாடி அசத்தல்

கொலை வழக்கில் கைதான பேராசிரியை வேதியியல் அறிவால் வாதாடி அசத்தல்

போபால்: மத்திய பிரதேச உயர் நீதிமன்றத்தில், சமீபத்தில் கணவரை கொலை செய்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட பேராசிரியை மம்தா பதக், 60, வழக்கு விசாரணையின்போது தன் வேதியியல் புலமையை வைத்து வாதாடிய விதம், வழக்கறிஞர்களை ஆச்சரியப்படுத்தியது.மத்திய பிரதேச மாநிலம், சத்தார்பூரைச் சேர்ந்த வேதியியல் பேராசிரியை மம்தா பதக், 60. இவரது கணவர் நீரஜ் பதக் ஓய்வுபெற்ற அரசு மருத்துவர். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். தம்பதிக்கு இடையே அடிக்கடி தகராறு நடப்பது வழக்கம். கடந்த 2021ல் மம்தா, தன் மகனுடன் சொந்த ஊருக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய போது, கணவர் தீக்காயங்களுடன் இறந்து கிடந்ததாக போலீசுக்கு தெரிவித்தார். போலீசார் விசாரணை நடத்தினர்.

பெரிய தப்பு

அவர்கள் கூறுகையில், 'கணவர் நீரஜுக்கு மம்தா துாக்க மாத்திரை தந்து துாங்க வைத்து, அதன் பின் மின்சாரத்தை பாய்ச்சி கொலை செய்துள்ளார். இதுகுறித்து தன் வீட்டு கார் டிரைவரிடம், 'பெரிய தப்பு செய்துவிட்டேன்' என ஒப்புக்கொண்டும் உள்ளார். 'பிரேத பரிசோதனை அறிக்கையிலும் மின்சார பாய்ந்ததால் உடலில் தீக்காயம் ஏற்பட்டுள்ளது என கூறப்பட்டுள்ளது' என்றனர். இதை விசாரித்த சத்தார்பூர் செஷன்ஸ் நீதிமன்றம், மம்தா பதக்கை குற்றவாளி என அறிவித்து ஆயுள் தண்டனை விதித்தது. இதை எதிர்த்து அவர் மத்திய பிரதேச உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அந்த வழக்கின் விசாரணை சமீபத்தில் நடந்தது. அப்போது, வேதியியல் பேராசிரியையான மம்தா பதக், தன் தரப்பு வாதங்களை தானே முன் வைத்தார். மனித திசுவில் மின்சாரம் எவ்வாறு வினைபுரியும் என்பது போன்ற சிக்கலான வேதியியல் விளக்கங்களை வழங்கினார். மேலும், 'தீ விபத்தால் உடலில் காயம் ஏற்பட்டதா அல்லது மின்சாரம் பாய்ந்து தீக்காயம் ஏற்பட்டதா என்பதை வெறுமனே கண்ணால் பார்த்து கூறிவிட முடியாது.

துல்லியமான முடிவு

'பிரேத பரிசோதனையில், கண்ணால் பார்த்து தான் அறிக்கை அளித்துள்ளனர். காயமடைந்த திசுவை அமில அடிப்படையிலான ஆய்வக பிரிப்பு பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும். அப்போது தான் துல்லியமான முடிவுக்கு வர முடியும்' என்றார்.அவரது வாதங்களை கேட்டு வழக்கறிஞர்கள் ஆச்சரியமடைந்தனர். அவர் கூறியவற்றை குறிப்பெடுத்த நீதிபதிகள், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

Rathna
மே 30, 2025 16:28

கொலையும் செய்வாள் பத்தினி என்று சும்மாவா சொன்னார்கள். இது தவிர வேறு விதமான தொடர்புகள் வேறு இந்த மாதிரி கொலையில் கொண்டு விடுகிறது.


Kanns
மே 30, 2025 09:49

If Circumstantial& Other Evidences Prove Grave Conspiratorial/Real Crimes, there Must Not be Any Mercy/Bias towards Any Conspiring/Women Criminals. However if Husband Really Tortured Wife/Family some Relaxation Can be Given


theruvasagan
மே 30, 2025 09:00

விஞ்ஞான முறையில் ஊழல் செய்தவர்கள் தண்டனை பெறாமல் தப்பித்துக் கொள்ளுவது இந்த வழியில்தானோ. அகில உலகத்துக்கும் விஞ்ஞான ஊழலை கற்றுத்தரும் நிகர்நிலை பல்கலைக்கழகம் ஒன்றே ஒன்று மட்டும்தான். கடந்த அறுபது ஆண்டுகளாக சத்தமில்லாமல் இயங்கி பல சாதனைகளை படைத்துள்ளதை யாராலும் மறுக்க முடியாது. மறைக்கவும் முடியாது.


PR Makudeswaran
மே 30, 2025 10:33

சூப்பர் அடி


rama adhavan
மே 30, 2025 07:21

கொலையும் செய்து விட்டு வாதாடியும் வெல்வாள் பத்தினி. இது புது மொழி.


Perumal Pillai
மே 30, 2025 07:16

இதை நம்பாதவன் ரத்தம் கக்கி ...


N.Purushothaman
மே 30, 2025 06:39

இதில என்ன ஆச்சர்யம் இருக்குன்னு தெரியல ....வேதியியல் என்றாலே இரண்டு பொருட்களை கலந்து அதன் எதிர்வினை எப்படி இருக்கும் என்பதை அறிவதே ...பேராசிரியை என்பதால் அதை நீட்டி முழக்கி உள்ளார் ...தப்பு செய்தாரா இல்லையா ? அது தான் விஷயம் ....இப்படி குற்றம் எய்பவர்கள் எல்லாம் ஆழாக்கு அவர்கள் துறையில் இருக்குரிய நிபுணத்துவத்தை வைத்து வாதாட ஆரம்பித்தால் நிலைமை என்னவாகும் ?


RAMAKRISHNAN NATESAN
மே 30, 2025 05:42

ஒரு மகன் இருப்பதாகத் தகவல் ....... அவர் என்ன சொல்கிறார் ? அரசுத் தரப்புக்கு அவருடைய வாக்குமூலம் உபயோகமானதாக இருக்கும் .....


RAMAKRISHNAN NATESAN
மே 30, 2025 05:37

வேறு வேறு சப்ஜெக்ட்டுகளில் நிபுணத்துவம் பெற்ற ஒவ்வொருவரும் இது போல ஆரம்பிச்சுட்டா ?


Kothandaraman Ramanujam IITM
மே 31, 2025 07:09

அதுக்குத்தான் குறைந்தபட்சம் +2 அறிவியல் மற்றும் கணிதத்தை படித்தவர்கள்தான் ஜுட்ஜ்ஜகவோ , வக்கீலாகவோ வரணும் , இப்போதுதான் யுஜிசி கண்டபடி டிகிரி கொடுக்க ஆரம்பிச்சுட்டாங்க


RAMAKRISHNAN NATESAN
மே 30, 2025 05:35

இப்படி ஒவ்வொருத்தரும் ஆரம்பிச்சுட்டா ?


Indhuindian
மே 30, 2025 05:29

விஞ்ஞான ஊழல் மாதிரி இதுவும் ஒரு விதமான விஞ்ஞான வேலை போல இருக்கு


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை