உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பி.எஸ்.எல்.வி.சி-60 ராக்கெட் டிச.,30ல் விண்ணில் பாய்கிறது; அறிவித்தது இஸ்ரோ

பி.எஸ்.எல்.வி.சி-60 ராக்கெட் டிச.,30ல் விண்ணில் பாய்கிறது; அறிவித்தது இஸ்ரோ

ஸ்ரீஹரிகோட்டா: பி.எஸ்.எல்.வி.சி-60 ராக்கெட் வரும் டிசம்பர் 30ம் தேதி விண்ணில் ஏவ இஸ்ரோ முடிவு செய்துள்ளது. எஸ்.டி.எக்ஸ்.1, எஸ்.டி.எக்ஸ்.2 என தலா 220 கிலோ எடை கொண்ட 2 சிறிய செயற்கைக்கோள்களைச் சுமந்து செல்கிறது.இரண்டு சிறிய விண்கலன்களை ஏவும் 'ஸ்பேடெக்ஸ்' திட்டத்துக்காக, பி.எஸ்.எல்.வி., சி 60 ராக்கெட், ஸ்ரீஹரிக்கோட்டா ஏவுதளத்தில் இருந்து ஏவ, இஸ்ரோ அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறது. நிலவை ஆய்வு செய்யவும், ஆய்வு மாதிரிகளுடன் பூமிக்கு திரும்ப வரவும்,விண்வெளி ஆய்வு நிலையம் அமைக்கவும், இந்த தொழில்நுட்ப பரிசோதனை அவசியம். தனித்தனியான இரு விண்கலன்களை, விண்வெளியில் சென்று இணையச் செய்வதற்காக இந்த சோதனை வெற்றி பெற்றால், இதை சாதித்த நான்காம் நாடு என்ற பெருமை இந்தியாவுக்கு கிடைக்கும்.இந்நிலையில், பி.எஸ்.எல்.வி.சி-60 ராக்கெட் வரும் டிசம்பர் 30ம் தேதி விண்ணில் ஏவ இஸ்ரோ முடிவு செய்துள்ளது. எஸ்.டி.எக்ஸ்.1, எஸ்.டி.எக்ஸ்.2 என தலா 220 கிலோ எடை கொண்ட 2 சிறிய செயற்கைக்கோள்களைச் சுமந்து செல்கிறது.ஒவ்வொன்றும் தலா 220 கிலோ எடை கொண்ட 2 சிறிய செயற்கைக்கோள்கள் பூமியில் இருந்து 470 கிலோ மீட்டர் உயரத்தில் உள்ள வெவ்வேறு சுற்றுப்பாதையில் நிலை நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.வரும் 2035ம் ஆண்டுக்குள் விண்வெளியில் இந்திய ஆய்வு மையத்தையும் நிறுவ திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான முன் தயாரிப்பு திட்டமாக ஸ்பேடெக்ஸ் திட்டத்தை வெற்றிகரமாக செய்து முடிக்க இஸ்ரோ விஞ்ஞானிகள் பணியாற்றி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

இறைவி
டிச 22, 2024 12:18

கஜகஸ்தான். இஸ்ரோ திருநெல்வேலிக்கு வந்தது கனிமொழியால் அல்ல. ராக்கெட் ஏவுதளம் ஶ்ரீஹரி கோட்டாவிற்கு பதிலாக திருநெல்வேலிக்குத்தான் வந்திருக்க வேண்டும். ஆனால் திருட்டு ரெயிலில் வந்தவரின் ஆட்சியில் இஸ்ரோ அதிகாரிகளிடமே பணம் கேட்டதால் இஸ்ரோ வந்த வழியே திரும்பி போனது. ராக்கெட் ஏவுதளம் பூமத்திய ரேகையை ஒட்டியிருந்தால் செலவு குறையும். அதனால் மோடி அரசு மீண்டும் திருநெல்வேலிக்கு கொடுத்துள்ளது. சரித்திரத்தை படிக்கவும்.


Ganapathy
டிச 22, 2024 11:44

கேரளா மருத்துவகழிவை இங்கு கொட்டுவதை தடுக்க வக்கில்லாம இதுல எதுக்கு வெட்டியாக பெருமை பேசணும் சம்பந்தமில்லாத விஷயத்துல?


கிஜன்
டிச 22, 2024 10:30

ஆனானப்பட்ட ஜப்பான் ...ஸ்பேஸ் -எக்ஸ் எல்லாம் திணறும்பொது .... இஸ்ரோ அசால்ட்டாக இப்படி டீல் செய்வது வியப்பைத்தருகிறது .. இதற்கு அடித்தளமிட்ட .... அமரர் .விக்ரம் சாராபாய் அவர்களுக்கும்.. கஸ்தூரி ரங்கன்.. அப்துல்கலாம் அவர்களுக்கும்... இதே இஸ்ரோவை தூத்துக்குடிக்கு கொண்டு வந்ததற்காக.. மாண்புமிகு பாரதபிரதமர் ....மற்றும் எம்.பி திருமதி கனிமொழி கருணாநிதி அவர்களுக்கும் நன்றி ....


raja
டிச 22, 2024 09:13

இந்த சாதனையும் இந்தியா செய்தால் ஏற்கனவே விண்வெளி வியாபாரத்தில் இந்தியாவிடம் தோற்று கொண்டு இருக்கும் வல்லரசு நாடுகள் ஏதாவது இந்தியாவில் பிரச்சனைகளை அயல் நாட்டு கைக்கூலிகள் ஆன பப்பு கெஜ்ரி திருட்டு திராவிடர்கள், மமதை காலிஸ்தான் காஷ்மீர் பயங்கரவாதிகள் போன்ற ஆட்களை கொண்டு விவசாயிகள் என்ற போர்வையில் போராடி கொண்டு இருக்கும் கைக்கூலிகள் போன்றோரை ஏவி விடுவார்களே... சாதனைகளை படைக்கும் மோடி அரசு மிகவும் விழிப்புடன் இனி இருக்க வேண்டும்...


sundarsvpr
டிச 22, 2024 09:09

பாரத தேசம் தற்போதைய பத்து ஆண்டுகளில் அரசியல் தொழில்நுட்பம் ஆன்மிகம் விளையாட்டு என்று பல துறைகளில் முன்னேறிவருகிறது. ஆனால் தமிழகத்தில் இந்த வளர்ச்சியை ஒரு சில பத்திரிகைகள் வெளிப்படுத்தவில்லை. இதற்கு காரணம் தமிழக தலைமை அமைச்சர் ஸ்டாலின் மத்திய அரசின் நல்ல திட்டங்களை அரசியல் நோக்கத்துடன் வெளிப்படுத்துவதில்லை. நடுநிலைமை என்று கருதப்பட்ட ஒரு ஆங்கில பத்திரிகை இதனை கைவிட்டது. காரணம் ஹிந்து இல்லாத ஒருவர் ஆதிக்கத்தில் உட்பட்டுள்ளது. பெயர் குறிப்பிடவேண்டிய அவசியம் இல்லை.


raja
டிச 22, 2024 10:39

அந்த ஆங்கில பத்திரிக்கை ஆசிரியர் இப்போ ஒன்கொள் கோவால் புற கொள்ளை கூட்ட குடும்பத்தின் சம்பந்தி ஆகிவிட்டார்... அதான்....


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை