உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தேர்தலில் மேட்ச் பிக்சிங்கா: ராகுல் குற்றச்சாட்டுக்கு பா.ஜ., கண்டனம்

தேர்தலில் மேட்ச் பிக்சிங்கா: ராகுல் குற்றச்சாட்டுக்கு பா.ஜ., கண்டனம்

புதுடில்லி: மஹாராஷ்டிராவைத் தொடர்ந்து, பீஹாரிலும் பா.ஜ., 'மேட்ச் பிக்சிங்' செய்ய உள்ளதாக லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் குற்றம்சாட்டி உள்ளார். இதற்கு பா.ஜ., கண்டனம் தெரிவித்து உள்ளது.ராகுல் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: தேர்தலை திருடுவது எப்படி? ஜனநாயகத்தில் முறைகேடு செய்வதற்கான வரைபடமாக மஹாராஷ்டிரா சட்டசபை தேர்தல் அமைந்துள்ளது. நான் எழுதிய கட்டுரை ஒன்றில் இது விவரிக்கப்பட்டு உள்ளது.முதலில், 1.தேர்தல் கமிஷன் நியமனத்துக்கான குழுவை ஒழுங்குபடுத்துதல்2.போலியான வாக்காளர்களை பட்டியலில் இணைத்தல்3.ஓட்டு எண்ணிக்கையை அதிகரித்தல்4.எங்கு எல்லாம் பா.ஜ., வெற்றி பெற வேண்டுமோ அங்கு எல்லாம் போலி ஓட்டுகள் பதிவு செய்தல்5. ஆதாரங்களை மறைத்தல்.மஹாராஷ்டிராவில் பா.ஜ., ஏன் இவ்வளவு தீவிரமாக இருந்தது என்பதைப் புரிந்து கொள்வது கடினம் அல்ல. ஆனால், மோசடி என்பது மேட்ச் பிக்சிங்கை போன்றது. ஏமாற்றுபவர்கள் விளையாட்டை வெல்லக்கூடும். ஆனால், அமைப்புகளை சேதபடுத்துவதுடன், முடிவுகளின் மீதான பொது மக்களின் நம்பிக்கையை அழிக்கும். அனைத்து இந்தியர்களும் ஆதாரங்களை பார்க்க வேண்டும். தாங்களாக முடிவு செய்வதுடன், விடையை கேட்க வேண்டும். ஏனெனில், மஹாராஷ்டிராவில் நடந்த 'மேட்ச் பிக்சிங்' அடுத்த பீஹாரிலும், பா.ஜ., தோற்கும் இடங்களிலும் நடக்கும். தேர்தலில் 'மேட்ச்- பிக்சிங்' என்பது ஜனநாயகத்துக்கான விஷம் ஆகும். இவ்வாறு அந்த பதிவில் ராகுல் கூறியுள்ளார்.இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள பா.ஜ.,வின் துஹின் சின்ஹா கூறுகையில், நாட்டின் அமைப்புகளை அரக்கத்தனமாக சித்தரிக்கும் மோசமான செயலில் ராகுல் மீண்டும் ஈடுபட்டு உள்ளார். இந்த பிரச்னைகள் குறித்து தேர்தல் ஆணையம் தொடர்ந்து தெளிவாக விளக்கம் அளித்து உள்ளது. இவ்வாறு அந்தப் பதிவில் அவர் தெரிவித்து உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 24 )

பேசும் தமிழன்
ஜூன் 08, 2025 12:01

நல்ல மனநல மருத்துவரை அணுகி சிகிச்சை பெற்று கொள்வது நல்லது..... முற்றி விட்டது போல் தெரிகிறது..... அதனால் தான் வாய்க்கு வந்தபடி உளறி கொண்டு இருக்கிறார்.


பேசும் தமிழன்
ஜூன் 08, 2025 10:13

இத்தாலி பப்புவுக்கு இப்போதே பீகார் தேர்தல் முடிவு தெரிந்து விட்டது போல் தெரிகிறது.... அதனால் தான் தோல்விக்கு காரணம் தேடிக் கொண்டு இருக்கிறார்.... எப்படியும் பீகார் மக்கள் இவர்களது புள்ளி வைத்த இந்தி கூட்டணி ஆட்களை தேர்தலில் விரட்டி அடிக்கத் தான் போகிறார்கள்.... அதனால் முந்தி கொண்டு பொய்யான காரணத்தை சொல்ல ஆரம்பித்து விட்டான்.


Swami Nathan
ஜூன் 08, 2025 01:13

நமது நாட்டில் உள்ள அரசியல் இயக்கங்களிலேயே நான் இயல்பாக சார்வது எந்த இயக்கம் என்றால் அது ஆர் எஸ் எஸ் தான். அதாவது பொது பாஷையில் சொல்வது என்றால் நானும் ஒரு சங்கி தான். ஆனால் இங்கு ராகுல் காந்தி சொல்லுவது அனைத்தும் சரியே. அவர் கொடுத்த பட்டியலுக்கு மேலாக பல வழிமுறைகளில் தேர்தல் தில்லுமுல்லுகளை தற்போதைய ஆட்சியாளர்கள் அரங்கேற்றுகிறார்கள். இது நாட்டிற்கு நல்லதல்ல. ஆர் எஸ் எஸ் தலைமைப் பீடத்தில் உள்ளார்கள் நாட்டுப்பற்று அர்ப்பணிப்பு உணர்வு இவற்றுடன் கூடவே நியாயம் நேர்மை எளிமைப் பண்புள்ளவர்களை கொண்டு ஆட்சியில் மாற்றம் கொண்டு வர வேண்டும். எல்லோரும் கருத்துகள் சொல்கிறார்கள், நாமும் படித்து தெரிந்து கொள்கிறோம், நம்முடைய கருத்தை சொல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் சொல்லி இருக்கிறேன் தவிர மற்றபடி இங்கு ராகுல் காந்தியை நாடு கடத்த வேண்டும் சிறையில் தள்ள வேண்டும் ராகுல் காந்தி பொட்டை என்று கருத்துக் களமாடும் அதிமேதாவிகள் உள்ள இந்த தினமலர் வாசகர் பின்னூட்டப் பகுதியில் என்னுடைய கருத்து எடுபடாது என்று தெரிந்தே சொல்கிறேன். நன்றி.


Bhakt
ஜூன் 07, 2025 23:17

இவர் ஒரு சீன கைக்கூலி. எதுக்கு இன்னும் இதை மத்திய அரசு நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறது.


Anand
ஜூன் 07, 2025 22:39

இவர் முகமே இப்போது வெறி புடிச்ச மாதிரி இருக்குது சீக்கிரம் இவரை உள்ளே போடனும்


Iyer
ஜூன் 07, 2025 22:25

பிஹாரில் தோல்வி அடைய போகிறோம் என்று ஒப்புக்கொண்டு விட்டார்.


Nagarajan S
ஜூன் 07, 2025 20:31

தேர்தல் தோல்வி பயத்தில் ராகுல் காந்தியும் காங்கிரஸ் கட்சியும் ஒருபோதும் திருந்த மாட்டார்கள். வேண்டுமென்றே மத்திய அரசின் மீதும் தேர்தல் ஆணையத்தின் மீதும் பழி சொல்லிக்கொண்டே இருப்பார்கள். இவர்களால் கட்சியில் உள்ள குறைகளை நீக்க முடியவில்லை. ஆனால் பிஜேபி ஜெயிப்பதில் வயத்தெரிச்சலில் தேவையில்லாமல் புலம்பிக்கொண்டே இருப்பார்கள், தமிழக திமுக அரசை போல.


theruvasagan
ஜூன் 07, 2025 20:19

இனிமேலும் பலகாலம் இப்படித்தான் புலம்ப வேண்டியிருக்கும். காரணம் வயசு ஏற ஏற மூளை மழுங்கிக் கொண்டே போகிறது.


கல்யாணராமன்
ஜூன் 07, 2025 19:41

இவர் திருந்தவே மாட்டார். இவரை நாடு கடத்துவதே சிறந்தது.


கல்யாணராமன்
ஜூன் 07, 2025 19:39

ராகுல்காந்திக்கு ஒரு சில மாதமாவது சிறை தண்டனை கொடுத்தால்தான் திருந்துவார்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை