உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ராகுல் வயநாடு பயணம் ரத்து

ராகுல் வயநாடு பயணம் ரத்து

புதுடில்லி: தொடர் மழை மற்றும் மோசமான வானிலை காரணமாக, காங்., எம்.பி., ராகுல், தனது வயநாடு பயணத்தை ரத்து செய்துள்ளார்.தொடர் கனமழையால் கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் முண்டக்கை, மற்றும் சூரல்மலை ஆகிய இடங்களில் நேற்று அதிகாலை பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இரு சம்பவங்களில் இதுவரை 133 பேர் பலியாகியுள்ளனர். பலர் மண்ணில் புதையுண்டனர்.லோக்சபா எதிர்க்கட்சி தலைவரும், காங். எம்.பி.யுமான ராகுல் இன்று (ஜூலை 31) வயநாடு செல்ல உள்ளாக தெரிவிக்கப்பட்டது. நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடும் அவர், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரையும் சந்தித்து ஆறுதல் கூற உள்ளார் எனவும் கூறப்பட்டது.இந்நிலையில், ராகுல், தனது வயநாடு பயணத்தை ரத்து செய்துள்ளார். தொடர் மழை மற்றும் மோசமான வானிலை காரணமாக, விமானம் தரையிறங்குவதில் சிக்கல் உள்ளதால், பயணம் ரத்து செய்துள்ளதாக அவர் கூறியுள்ளார். நிலைமையை தொடர்ந்து கவனித்து வருவதாகவும், விரைவில் வயநாடு வருகை தருவதாக ராகுல் உறுதி அளித்திருக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 25 )

nsathasivan
ஜூலை 31, 2024 19:55

இதே சம்பவம் பிஜேபி ஆட்சி செய்யும் மாநிலங்களில் நடந்திருந்தால் குடும்பம் சகிதமாக ஓடிப்போய் எல்லாவற்றிற்கும் காரணம் மோடி அரசு தான் என ஒரு நீண்ட அறிக்கை விட்டிருப்பாய்.ஐந்து வருடங்கள் எம்பி யாக இருந்து என்ன கிழித்தாய்?


Mettai* Tamil
ஜூலை 31, 2024 13:22

அந்த பக்கம் போயிராதிங்க. பணம், மைனாரிட்டி என்று சொல்லி, ஒட்டு போடும் போது சரிகட்டிறலாம் .


RAMAKRISHNAN NATESAN
ஜூலை 31, 2024 12:32

மீட்புப்படை கூட போயி சாகசம் செஞ்சிருக்கலாமே ???? ஓ, எப்படியும் ஒட்டு போடுற கும்பலுதானே அதுங்க ....


Anand
ஜூலை 31, 2024 12:18

நிலச்சரிவு ஏற்படும் முன்னரே அங்கு சென்றிருக்கவேண்டும்.


Ijinn Issac
ஜூலை 31, 2024 12:18

Stupid thinking ....


hari
ஜூலை 31, 2024 14:33

central given. warning 7 days before for heavy rainfall and risk of landslide...


Ramesh Sargam
ஜூலை 31, 2024 12:10

இதே தேர்தல் நேரமாக இருந்திருந்தால், அப்பொழுதும் இதேபோன்று பாதிப்பு ஏட்பட்டிருந்தால், இதே ராகுல் தேர்தல் பிரச்சாரம் செய்ய போகாமல் இருந்திருப்பாரா? பாதிப்பு ஏட்பட்டிருக்கும் இந்த நேரத்தில் சென்று மக்களுக்கு ஆதரவாக ஒரு தலைவன் இருக்கவேண்டும். எல்லாம் முடிந்து, சகஜநிலை ஏட்பட்ட பிறகு, அங்கு சென்று ஒரு குடிசையில் அமர்ந்து சிற்றுண்டி சாப்பிடுவதும், டீ குடிப்பதும் எப்படி நியாயமாகும்?


Lesly Loyans
ஜூலை 31, 2024 11:46

ஓட்டு போட்டு ஜனநாயக கடமையை நிறைவேற்றிய வயநாடு மக்களுக்கு இவரின் பரிசு


rsudarsan lic
ஜூலை 31, 2024 11:18

He can compare this cancellation with PMs non- visit to Manipur, where situation is controlled by external forces, favoured by opposition parties


vikram
ஜூலை 31, 2024 11:16

நீ வந்தா என்ன வராட்டி என்ன அதான் ராஜினாமா பண்ணிட்டியே


rsudarsan lic
ஜூலை 31, 2024 11:16

Atleast he can land in Kerala or send a message to the Indian soldiers working hard on rescue operations. Mere pappu


மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ