உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / எளிதாகும் ரயில் பயணம்; பயணிகள் பட்டியல் வெளியீட்டில் புதிய நடைமுறை

எளிதாகும் ரயில் பயணம்; பயணிகள் பட்டியல் வெளியீட்டில் புதிய நடைமுறை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ரயில் புறப்படும் 24 மணி நேரத்திற்கு முன்னதாக உறுதிப்படுத்தப்பட்ட பயணிகள் பட்டியலை வெளியிடும் புதிய திட்டத்தை ரயில்வே நிர்வாகம் சோதனை அடிப்படையில் தொடங்கி உள்ளது.நாடு முழுவதும் தினமும் லட்சக்கணக்கானோர் ரயில்களில் பயணித்து வருகின்றனர். எளிய கட்டணம், அதிக சவுகரியம் ஆகிய காரணங்களினால் நாள்தோறும் அதில் பயணிப்போரின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது.இந் நிலையில் பயணிகளின் வசதிக்காக ஒரு திட்டத்தை செயல்படுத்த ரயில்வே நிர்வாகம் முன் வந்துள்ளது.அதாவது, உறுதிப்படுத்தப்பட்ட பயணிகள் பட்டியலை அவர்கள் ரயில் புறப்படுவதற்கு 24 மணி நேரம் முன்னரே தெரிந்து கொள்ளும் வகையில் புதிய நடவடிக்கைளை முன் எடுத்துள்ளது.முதல்கட்டமாக ஜூன் 6ம் தேதி முதல் சோதனை அடிப்படையில் இந்த திட்டத்தை ரயில்வே நிர்வாகம் தொடங்கி உள்ளது. மேற்கு ரயில்வே மண்டலத்தில் பிகானோர் பகுதியில் இந்த திட்டம் ஆரம்ப கட்டமாக அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.அதன்படி ரயில் புறப்படும் 24 மணி நேரம் முன்பாக உறுதிப்படுத்தப்பட்ட பயணிகள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் பயணிகள் தங்கள் பயணத்தில் ஏதேனும் மாற்றம், மீண்டும் பயண தேதியை திட்டமிட ஏதுவாக அமைகிறது. இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் கூறி உள்ளதாவது: பயணிகளின் ரயில் பயணத்தை எளிதாக்குவது இதன் நோக்கமாகும். இந்த திட்டம் பற்றி அவர்களின் கருத்துகள் முழுவதுமாக அறியப்பட்டு அது தொடர்பான அறிக்கை ரயில்வே நிர்வாகத்திடம் பரிந்துரை அறிக்கை சமர்ப்பிக்கப்படும். அதன் பின்னர் இது குறித்து உரிய நடைமுறைகள் எடுக்கப்பட்டு விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.தற்போதுள்ள ரயில்வே நடைமுறைகளின்படி, பயணிகளின் அட்டவணை ரயில் புறப்படும் 4 மணிநேரம் முன்பதாக தயாரிக்கப்படும். இது போன்ற புதிய செயல்திட்டம் மூலம் பயணிகள் தங்கள் பயணத்தை எளிதாக திட்டமிடமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

SANKARA
ஜூன் 11, 2025 19:38

What is the use in releasing the list 24 hours in advance, as everybody is checking the status online. We come to know only the coach number for RAC status tickets once the list released before 4 hours. Only Forcing wait listed passengers to go for tatkal with higher rate.


chandrasekar
ஜூன் 11, 2025 15:30

மிகவும் நல்ல விஷயம். டிக்கெட் கிடைத்துவிட்டால் பிரச்னை இல்லை. கிடைக்காவிட்டால் அடுத்த நடவடிக்கை பற்றி யோசிக்கலாம். பஸ் அல்லது காரில் முன்கூட்டியே புறப்பட்டுவிட முடியும். இதை நாடு முழுதும் அமல்படுத்த வேண்டும். அப்படியே இந்த தத்கல் புக்கிங்கின்போது முதல் 4 நிமிடங்கள் ஹேங் ஆவதற்கும், அது முடிந்தபின் வெயிட்டிங் லிஸ்ட் என காட்டுவதற்கும் முற்றுப்புள்ளி வைத்தால் சிறப்பு.


RAVINDRAN.G
ஜூன் 11, 2025 14:11

இதெல்லாம் டிக்கெட் எடுக்கிறவனுக்குத்தான் கஷ்டம். டிக்கெட் எடுக்காதவனுக்கு டிரைனே சொந்தம். கூட்டமாக முன்பதிவு பெட்டியில் ஏசி பேட்டி உட்பட ஏறுவார்கள். டீ டீ ஆர் ஆல் ஒன்னும் செய்யமுடியாது.


Tiruchanur
ஜூன் 11, 2025 14:02

நல்ல செய்தி. ஒருநாள் முன்னரே டிக்கெட் கன்ஃபர்ம் ஆகிவிட்டால் நிம்மதி பெருமூச்சு விடலாம்


KavikumarRam
ஜூன் 11, 2025 13:38

முதலில் ரயில்வே நிர்வாகம் வெயிட்டிங் லிஸ்ட் டிக்கெட் கேன்சல் ஆகும்போது அதில் பிடித்தம் பிடிக்கும் தொகையை நிறுத்த வேண்டும்.


Prabasankar
ஜூன் 11, 2025 13:13

ரயில்வே துறை அதிவேக வளர்ச்சியை நோக்கி செல்வது சந்தோசம் இருப்பினும் முன்பதிவு நடைமுறை ப்ரோக்கர்களின் ஆதிக்கம் குறைந்த பாடு இல்லை . பல நடைமுறை சிக்கல்களை களைய வேண்டும் அதற்கு அதிகாரிகளின் நேரிடை தலையீட்டை குறைக்க வேண்டும். நவீன தொழில் நுட்பத்தை பயன் படுத்தவேண்டும்


Ramesh Sargam
ஜூன் 11, 2025 12:03

தட்கல் திட்டம் வந்தபோது நல்லாத்தான் இருந்தது. இப்ப... ஏண்டாப்பா அந்த திட்டம் என்று ஆகிவிட்டது. ஏன் என்றால் அதில் ஒரு சாமானிய பயணியால் டிக்கெட் புக் செய்யவே முடியாது. தட்கல் மூலம் டிக்கெட் புக் செய்ய அந்த திருட்டு ஏஜென்சிகளால்தான் முடியும். சாமானியர்களால் முடியவே முடியாது.


rajasekaran
ஜூன் 11, 2025 12:53

அந்த திருட்டு ஏஜெண்சி கிட்டே நீ ஒரு திருடன் என் போற .


நிவேதா
ஜூன் 11, 2025 11:22

முதலில் தனியார் app மூலம் டிக்கெட் முன் பதிவை நிறுத்துங்கள். அவர்கள் Confirmed Ticket failing which 3 times refund என்ற முறையில் டிக்கெட் பதிவு செய்து refund இழப்பை தவிர்க்க அந்த தனியார் நிறுவனங்கள் போலி காரணங்களை கூறி எமெர்ஜென்சி quota டிக்கெட்களை கபளீகரம் செய்கிறார்கள்.


Anantharaman Srinivasan
ஜூன் 11, 2025 11:08

Reserve செய்த அனைவருக்கும் ஏமாற்றமில்லாமல் அவரவர்கள் விருப்பப்படி Seat அல்லது Berth கிடைக்க வேண்டும். NO WAITING LIST. அந்த அளவுக்கு ரயில்வேயில் முன்னேற்றம் வர வேண்டும். அதைத்தான் மக்கள் எதிர்பார்க்கின்றனர்.


அப்பாவி
ஜூன் 11, 2025 11:06

அத்து மீறி ரிசர்வேஷன் இல்லாமல் ரிசர்வ் பெட்டிகளில் பயணம் செய்பவர்கள் மீது ஒரு நடவடிக்கையும் எடுக்க மாட்டார்கள்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை