உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பெங்களூரு அணி விற்பனைக்கு... 6 நிறுவனங்கள் போட்டா போட்டி

பெங்களூரு அணி விற்பனைக்கு... 6 நிறுவனங்கள் போட்டா போட்டி

பெங்களூரு: பெங்களூரு அணி விற்பனைக்கு வருகிறது. 17,859 கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த அணியை வாங்க ஆறு நிறுவனங்கள் போட்டியிடுகின்றன. பிரிமியர் கிரிக்கெட் தொடரில் முதல் முறையாக இந்த ஆண்டு பெங்களூரு அணி கோப்பை வென்றது. பின் பெங்களூருவில் நடந்த பாராட்டு விழா கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், பெங்களூரு அணியை நிர்வகிக்கும் 'டியாஜியோ குழுமம்' தன் அனைத்து பங்குகளையும் விற்க தயாராக உள்ளதாக, தகவல் வெளி வந்துள்ளது. ஆண்டுதோறும் அணிக்கான செலவுகள் அதிகரித்து வருகின்றன. ஆன்லைன் பந்தய விளையாட்டு செயலிகள் மீது சமீபத்தில் தடை விதிக்கப்பட்டதால், வருமானம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், அணியின் முழு பங்கையும் விற்க முடிவு செய்துள்ளது. டியாஜியோ பெங்களூரு அணியின் சந்தை மதிப்பு, 17,859 கோடி ரூபாய். இந்த பங்கை வாங்க டில்லி கேபிடல்சின் தற்போதைய இணை உரிமையாளரான பர்த் ஜிந்தால் (ஜே.எஸ்.டபிள்யூ., குழுமம்); அதானி குழுமம்; ஆதர் பூனம்வாலா (சீரம் இன்ஸ்டிடியூட்); புதுடில்லியை சேர்ந்த நிறுவனம், இரண்டு அமெரிக்க நிறுவனங்கள் முன்வந்துள்ளன. இதில், ஜிந்தால், அதானி குழுமம் இடையே கடும் போட்டி நிலவுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

V.Mohan
அக் 24, 2025 14:43

இது தாங்க கட்டுமர கும்பலின் ஸ்பெஷாலிட்டி யாரும் ஒரு கணமும் எதிர்பாராத சமயத்தில் சன் ரைசர்ஸ் அணி இவர்களால் வாங்கப்பட்டது. காவ்யா கலாநிதி மாறன் தலைவராக்கப்பட்டு அவருக்கு கிடைத்த நட்சத்திர அந்தஸ்து எல்லாரையும் திகைக்க வைத்தது. வேடிக்கை மட்டும் பாருங்க கட்டுமர குடும்ப உறுப்பினர் பெங்களூரு அணியை கண்டிப்பாக வாங்கப் போறாங்க சினிமா உலகில் அவர்களுக்கு உள்ள பவர் கிரிக்கெட்டை அவர்கள் காலடியில் விழ வைக்கும்.


Venugopal S
அக் 24, 2025 13:14

எப்படியும் கடைசியில் அதானிக்கு அடிமாட்டு விலையில் கொடுத்து விடுவார்கள்!


Kumar Kumzi
அக் 24, 2025 14:28

... கிட்ட இல்லாத ஊழல் பணமா


M. PALANIAPPAN, KERALA
அக் 24, 2025 12:05

கட்டுமர குடும்பம் வாங்கலாம் சன் ரைசஸ் உடன் பெங்களூரு சேரலாம்


திகழ்ஓவியன்
அக் 24, 2025 14:28

யாருக்கும் சான்ஸ் இல்லை


KOVAIKARAN
அக் 24, 2025 11:03

அமெரிக்க நிறுவனங்களின் உரிமையாளர்கள் இந்தியர்கள்தான். இவர்கள் ஏற்கனவே அமெரிக்காவில் பல அணிகளின் உரிமையாளர்களாக உள்ளனர். அமெரிக்காவிலும் IPL போன்று போட்டிகள் நடைபெறுகிறது என்று நீங்கள் அரியமாட்டீர்களா? அந்த அணிகளில், இந்தியாவின் கிரிக்கெட் வீரர்கள் தவிர அனைத்து கிரிக்கெட் விளையாடும் நாடுகளிலுள்ள வீரர்கள் பங்கேற்று வருகிறார்கள். முக்கியமான மேற்கிந்திய தீவிலுள்ள எல்லா வீரர்களும் விளையாடுகிறார்கள். கடந்த இரண்டு வருடங்களாக இந்தப்போட்டிகள் நடக்கும் நாள்களில் நேரலைகளில் காலையில் 5.00 மணியிலிருந்து நான் பர்த்து வருகிறேன். மேலும், நமது இந்தியர்கள், ஷாரூக்க்கான், அம்பானி மற்றும் பல அணி உரிமையாளர்கள், துபாய், மேற்கிந்திய தீவுகள், மற்றும் தென்னாபிரிக்கா போன்ற நாடுகளிலும் கிரிக்கெட் அணிகளை வாங்கி வெற்றிகரமாக நடத்தி வருகிறார்கள். எனவே அமெரிக்கர்கள் பெங்களூரு அணி வாங்குவதை வரவேற்கலாம். அது அவர்களுக்கு அமெரிக்காவில் கிரிக்கெட் விளையாட்டை வளர்ப்பதற்கு உதவியாக இருக்கும்.


Ravi Chandran .K, Pudukkottai
அக் 24, 2025 09:10

பாக்கி உள்ளூர் நிறுவனங்கள் சரி! அமெரிக்க நிறுவனங்கள் ஏன் இங்கு போட்டி போட வேண்டும்? நாம அமெரிக்கா போய் ஒரு கால்பந்து அணியை விலைக்கு வாங்க முடியுமா?


Ramesh Sargam
அக் 24, 2025 07:28

After the introduction of these IPL matches, cricket, once called gentlemen game, has now become money game.


Vasan
அக் 24, 2025 07:17

பெங்களூரு திராவிடத்தை சேர்ந்தது. எனவே திராவிட கட்சியே வாங்க வேண்டும். ஆனால் அவ்வளவு பணத்திற்கு எங்கே போவது?


தியாகு
அக் 24, 2025 07:50

ஹி...ஹி...ஹி... கட்டுமர திருட்டு திமுகவின் தலைமை குடும்பத்திற்கு இந்த பணமெல்லாம் பாக்கெட் மணி. போங்க அங்கிட்டு.


பேசும் தமிழன்
அக் 24, 2025 08:42

அட நீங்க வேற.... அவர்களிடம் இல்லாத பணமா.... உலக பணக்காரர்கள் பட்டியலில் இடம் பெற்று இருக்கிறார்கள்.


புதிய வீடியோ