உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ரூ.25 லட்சம் லஞ்சம்; வருமான வரித்துறை அதிகாரியை கைது செய்தது சி.பி.ஐ.,

ரூ.25 லட்சம் லஞ்சம்; வருமான வரித்துறை அதிகாரியை கைது செய்தது சி.பி.ஐ.,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: டில்லியில் ரூ.25 லட்சம் லஞ்சம் வாங்கிய வருமான வரித்துறையின் உயரதிகாரி உள்பட 2 பேரை சி.பி.ஐ., கைது செய்து விசாரித்து வருகிறது. டில்லியை அடுத்துள்ள வசந்த் கஞ்ச் என்ற பகுதியில் செயல்பட்டு வரும் வரி செலுத்துவோர் சேவைகள் இயக்ககத்தில் கூடுதல் இயக்குநராக பணியாற்றி வருபவர் ஐ.ஆர்.எஸ்., அதிகாரி அமித் குமார் சிங்கால்.இவர், தனிநபர் மீது வருமான வரித்துறை நடவடிக்கை எடுக்காமல் இருக்க ரூ.45 லட்சம் ரொக்கத்தை சம்பந்தப்பட்டவரிடம் அமித் குமார் லஞ்சமாக கேட்டுள்ளார். பணத்தை கொடுக்காவிட்டால், கடுமையானடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. லஞ்சத் தொகையின் முன்பணம் ரூ.25 லட்சத்தை,மொகாலியில் உள்ள அமித் குமாரின் உதவியாளரான ஹர்ஷ் கொட்டக் என்பவரிடம் கொடுக்கப்பட்டது. அப்போது, அங்கு மறைந்திருந்த சி.பி.ஐ., அதிகாரிகள் ஹர்ஷை கைது செய்ததுடன், பணத்தையும் பறிமுதல் செய்தனர். அதே சமயத்தில் டில்லியில் வைத்து வருமான வரித்துறை உயரதிகாரி அமித் குமாரையும் சி.பி.ஐ., அதிகாரிகளின் மற்றொரு குழுவினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Anantharaman Srinivasan
ஜூன் 01, 2025 23:26

என் உயிரினும் மேலான உடன்பிறப்பே, வருமானவரி லஞ்சத்துக்கும் திராவிட மாடல் ஆட்சிக்கும் என்ன சம்பந்தம்.? உன்தலையில் நீயே மண்ணை போட்டுக்கிட்டு ..


D.Ambujavalli
ஜூன் 01, 2025 18:19

கேட்டால், இந்த லஞ்சப்பணம் மேலிடம், மிகப்பெரிய இடம் வரை பாய்ந்து முடிந்த பிறகு எங்கள் கையில் நிற்பது ஒன்றிரண்டு லட்சம் கூட இல்லை என்பார்கள்


அப்பாவி
ஜூன் 01, 2025 15:02

முன்னாடியெல்லாம் அரசியல்வாதிகள், அமைச்சர்கள் துட்டு கேப்பாங்க. இப்போ அதிகாரிகள் மூலமா ஆட்டை நடக்குது.


GMM
ஜூன் 01, 2025 14:53

வருமான வரி வரம்பில் வராதவர், வரி ரிட்டர்ன் தாக்கல் தவிர்க்க வேண்டும். இது துறை வேலை பளுவை குறைக்கும். வெறும் எண்ணிக்கை காட்டி பயன் இல்லை. எதற்கும் வருமான வரி விலக்கு கூடாது. 0.1 சதம் முதல் வசூலிக்க வேண்டும். வரி விலக்கு மூலம் சேமிப்பு என்றால், அந்த தொகை வங்கியில் சேமிக்க வேண்டும். குறைந்தது ஆண்டுக்கு 100 ரூபாய் ஒவ்வொரு குடிமகனுக்கும் தன்னை அடையாள படுத்த குறைந்த வருமான வரி செலுத்தும் முறை வேண்டும். வருமான வரி எல்லையில் வருபவர் தோராயமாக ஒரு தொகை மாத மாதம் செலுத்த வேண்டும். அதிகாரிகள் தணிக்கையில் மீதியை கேட்டு நோட்டீஸ் அனுப்பி வசூலிக்கலாம். தனி ஒரு அதிகாரி அபராதம், குற்ற நடவடிக்கை எடுக்க அதிகாரம் கூடாது. ஊழல் இங்கு இருக்கும். ?


vels
ஜூன் 01, 2025 14:25

இதே தமிழ் நாட்டில் நடந்துருந்தால் திராவிட ஆட்சியின் லட்சணம் பார் என கூவியிருப்பார்கள்


Barakat Ali
ஜூன் 01, 2025 14:09

என்னது மத்திய பாஜக அரசு இன்னும் லஞ்சத்தை, ஊழலை ஒழிக்கலையா??


உண்மை கசக்கும்
ஜூன் 01, 2025 13:57

லஞ்சத்திற்கு பஞ்சம் இல்லை இந்தியாவில். தர்மம் இறந்து போய் 100 வருடங்கள் ஆகி விட்டது. லஞ்சம் கொடுப்பதும் வாங்குவதும் குற்றம் இல்லை என்ற எண்ணம், நம் எல்லோருக்கும் வந்து விட்டது. அனைவரும் இறந்து, புதிய இந்தியர்கள் உருவானால் தான், இந்தியாவில் தர்மம் நிலைக்கும்.


SANKAR
ஜூன் 01, 2025 14:03

please note news suggests DHARMAM VELLUM and if one victim decides he can fix the taker. no need to be overwhelmingly negative


chennai sivakumar
ஜூன் 01, 2025 14:16

இதை எல்லாம் மாற்ற ஒரு சர்வாதிகாரி வந்தால் மட்டுமே விமோசனம் எதிர் பார்க்கலாம். மற்றபடி ஒரு மாற்றமும் இருக்காது


புதிய வீடியோ