உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தொகுதி பங்கீட்டில் இழுபறி… காங்கிரசுக்கு அதிர்ச்சி கொடுத்த ஆர்ஜேடி!

தொகுதி பங்கீட்டில் இழுபறி… காங்கிரசுக்கு அதிர்ச்சி கொடுத்த ஆர்ஜேடி!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பாட்னா: பீஹார் சட்டசபை தேர்தலுக்கான தொகுதி பங்கீடு இன்னும் இறுதியாகாத நிலையில், 143 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை ராஷ்டிரிய ஜனதா தளம் வெளியிட்டிருப்பது இண்டி கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. மொத்தமுள்ள 243 தொகுதிகளுக்கு நவ. 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. நவ .,14ல் ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது. தேர்தலையொட்டி ஜக்கிய ஜனதா தளம், பாஜ, உள்ளிட்ட கட்சிகள் தங்களின் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதனிடையே, இண்டி கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் இன்னும் உடன்பாடு எட்டப்படவில்லை. இந்த சூழலில் 60 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை காங்கிரஸ் அறிவித்து விட்டது. ஆனால், தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடித்து வந்ததால், இண்டி கூட்டணியில் பெரிய கட்சியான ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி வேட்பாளர்களை அறிவிக்காமல் இருந்து வந்தது.இந்த நிலையில், 2வது கட்ட தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளான இன்று, 143 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை ராஷ்டிரிய ஜனதா தளம் வெளியிட்டுள்ளது. கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ், ரஹோபூர் தொகுதியிலும், சந்திரசேகர் மாதேபூராவிலும், வீணா தேவி மோகமா தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.கடந்த 2020ம் ஆண்டு 144 இடங்களில் போட்டியிட்ட ஆர்ஜேடி, இந்த ஆண்டு ஒரு சீட் குறைவாக 143 இடங்களில் போட்டியிடுகிறது. ஏற்கனவே, பீஹார் சட்டசபை தேர்தலில் இண்டி கூட்டணியில் இருந்து விலகி ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. தற்போது, முக்கிய கட்சிகளான காங்கிரஸ், ஆர்ஜேடி இடையே தொகுதி பங்கீடு விவகாரத்தில் உடன்பாடு எட்டப்படாத நிலையில், மாறி மாறி வேட்பாளர்களை மட்டும் அறிவித்து வருவது தொண்டர்களிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

தாமரை மலர்கிறது
அக் 20, 2025 22:49

இண்டி கூட்டணி போண்டி


பேசும் தமிழன்
அக் 20, 2025 20:40

எல்லாம் நன்மைக்கே.... இண்டி கூட்டணியின் அழிவு நாட்டுக்கு நன்மை பயக்கும்.....அங்கே இருப்பவர்கள் அத்தனை பேரும் நாட்டு நலனுக்கு.... எதிரான நிலையை எடுக்கும் ஆட்கள் தான்.


Rathna
அக் 20, 2025 19:12

தேச விரோத சக்திகள், குடும்ப கூட்டங்கள் அடித்து கொண்டு சாவது நாட்டிற்கு நல்லது.


panneer selvam
அக் 20, 2025 18:43

Do not rush up with your comments . Land was given to Adani to start solar power generation . Tamilnadu also has given the land to Adani to generate solar power . It is very common for major industries or major investment , state always offer free land as incentives. Last month , Chandrababu naidu offered free land to construct Google research center at Vizag . Hence do not expose your ignorance


Mahendran Puru
அக் 20, 2025 18:00

பீகாரில் 1000 ஏக்கர் நிலம் ₹1க்கு அதானிக்கு தாரை வார்த்துள்ளார் நிதிஷ் குமார். மீதம் இருக்கும் பீகாரையும் அள்ளிக் கொடுக்க பிகாரிகள் வாக்களிக்க வேண்டும். இங்கிருக்கும் .... அதற்கு முட்டுக் கொடுக்க வேண்டும்.


ஆரூர் ரங்
அக் 20, 2025 19:52

ஆந்திராவில் தொழில் துவங்க ஏக்கருக்கு ஆண்டு குத்தகை 99 பைசா மட்டுமே கேட்டு வரவேற்கிறார்கள். வேலைவாய்ப்பு பெருக அதுதான் வழி. தமிழகத்தில் அதெல்லாம் கொடுக்க மாட்டார்கள். மருமகனுக்கு பார்ட்னர்ஷிப் கொடுக்க மறுத்தால் ஓன்றும் நகராதாம்.


duruvasar
அக் 20, 2025 16:40

தேஜஸ்வி யாதவும், ஸ்டாலின் ஐயாவும் பிஹாரில் சந்தித்தியபோதே காங்கிரஸுக்கு தங்களுடைய மாநிலத்தில் எவ்வளவு சீட் தரவேண்டும் எனபதை முடிவு செய்துவிட்டதாக சொல்கிறார்கள்.


Balasubramanian
அக் 20, 2025 15:56

இதே நிலை தான் தமிழகத்திலும் தொடரும்! இனியாவது காங்கிரஸ் தன் கட்சியை கலைத்து விடுவது நலம்! எத்தனை நாள் தான் மாநிலக் கட்சிகள் தயவில் வாழ்வது?


Iyer
அக் 20, 2025 14:41

மோதி, யோகி பிரச்சாரம் சூறாவளியாக மாறி - குடும்ப கட்சிகளை கதிகலங்க வைத்துள்ளது. மத்திய அரசு பல்லாயிரக்கோடி முதலீட்டில் பெரும் PROJECTS பிஹாரில் செய்துவருகிறது நிதிஷ் குமார் நாணயம் மிகுந்த ஆட்சி செய்து வருகிறார். மக்களுக்கு இப்போதைக்கு வேறு ஊழல் கட்சிகளை பற்றி நினைக்கவே சமயம் இல்லை. பிஹாரில் பிஜேபி கூட்டணி 200 க்குமேல் சீட்டுகள் பெற்றாலும் ஆச்சரியம் இல்லை


மனிதன்
அக் 20, 2025 20:25

உண்மையாகவே இதையெல்லாம் சிரிக்காமல்தான் எழுதினீர்களா??? நம்ப முடியவில்லை...ஆனால் நான் படிச்சதுமே குபீர்னு சிரிச்சுட்டேன்....அப்பாடா.. ரொம்ப நாளைக்கப்புறம் மனம் விட்டு சிரித்தேன் ரொம்ப நன்றி...


VENKATASUBRAMANIAN
அக் 20, 2025 13:59

இதுதான் இந்தி கூட்டணியின் லட்சணம்.


Anbuselvan
அக் 20, 2025 13:45

மத்திய பிரதேசம், ராஜஸ்தான், ஹரியானா, கர்நாடக, தெலுங்கானா, கேரளா மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் மட்டுமே காங்கிரஸ் இன்னமும் உயிர்ப்புடன் இருக்கிறது. தெலுங்கானா, கர்நாடக மற்றும் ஹிமாச்சல் பிரதேசத்தில் ஆளும் கட்சியாகவும் உள்ளது. கழுதை தேய்ந்து கட்டெறும்பாக மாறியதற்கு யார் காரணம்?


vadivelu
அக் 20, 2025 15:29

கழுதைதான்


சமீபத்திய செய்தி