உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / உலக வங்கி நிதி ரூ.14 ஆயிரம் கோடியை தவறாக பயன்படுத்தினர்; பிரசாந்த் கிஷோர் கட்சி புகார்

உலக வங்கி நிதி ரூ.14 ஆயிரம் கோடியை தவறாக பயன்படுத்தினர்; பிரசாந்த் கிஷோர் கட்சி புகார்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: பீஹார் தேர்தல் வெற்றிக்காக உலக வங்கியின் ரூ.14 ஆயிரம் கோடி நிதி தவறாக பயன்படுத்தப்பட்டது என ஜன் சுராஜ் கட்சி குற்றம் சாட்டி உள்ளது. பீஹார் சட்டசபை தேர்தலில் ஆளும் தேஜ கூட்டணி அரசு ஆட்சியை தக்க வைத்துள்ளது. அதே நேரத்தில் தேர்தலில் போட்டியிட்ட ஜன் சுராஜ் கட்சி ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. இந்த சூழலில், ''தேர்தலுக்கு முன்னதாக, பெண்களை தொழில்முனைவோர் ஆக்குவதற்காக வங்கி கணக்கில் ரூ.10,000 வரவு வைக்கப்பட்டது. இதற்கு முதல்வர் நிதிஷ் குமார் உலக வங்கியின் ரூ.14 ஆயிரம் கோடி நிதியை பயன்படுத்தினார். இதன் மூலம் சமீபத்தில் முடிவடைந்த தேர்தல்களில் செல்வாக்கு செலுத்தப்பட்டது. இது பொது பணத்தை தவறாக பயன்படுத்தும் முயற்சியாகும். இது தொடர்பாக விரிவான விசாரணை நடத்த வேண்டும்'' என பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளது.

கஜானா காலி

இது குறித்து, ஜன் சுராஜ் கட்சியின் தேசியத் தலைவர் உதய் சிங் கூறியதாவது: மாநிலத்தில் பெண்களுக்கு வழங்கப்பட்ட ரூ.10 ஆயிரம் பணம், உலக வங்கியிலிருந்து வேறு சில திட்டங்களுக்காக வந்த ரூ.21,000 கோடியிலிருந்து வழங்கப்பட்டது. தேர்தலுக்கான முன்பாக, ரூ.14,000 கோடி எடுக்கப்பட்டு மாநிலத்தில் உள்ள 1.25 கோடி பெண்களுக்கு விநியோகிக்கப்பட்து. பீஹாரின் பொதுக் கடன் தற்போது ரூ.4.06 லட்சம் கோடியாக உள்ளது. தினசரி வட்டி சுமை ரூ.63 கோடியாக இருக்கிறது. அரசு கஜானா காலியாக உள்ளது. பொதுப் பணத்தைப் பயன்படுத்தி, அவர்கள் மக்களின் ஓட்டுக்களை வாங்கினார்கள். உலக வங்கியிலிருந்து பெறப்பட்ட நிதி செலவிடப்பட்டு இருக்கிறது. அரசு ஆட்சிக்கு வந்த பிறகு பொது நலனுக்காக செலவிட இப்போது பணம் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

0 தொகுதிகள்

தேர்தல் வியூகவாதியாகவும் அரசியல்வாதியாகவும் மாறிய பிரசாந்த் கிஷோரால் நிறுவப்பட்ட புதிதாக உருவாக்கப்பட்ட ஜன் சுராஜ் கட்சி, பீஹார் சட்டசபை தேர்தலில் பெரும் பின்னடைவைச் சந்தித்து இருக்கிறது. 238 தொகுதிகளில் போட்டியிட்ட போதிலும் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை என்பது பேசும் பொருளாகி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 26 )

veluswamy
நவ 17, 2025 10:32

ஒரு வேலை குறட்டை விட்டு தூங்கும் நம்ம ஊர் தேர்தல் கமிஷன் போல தானோ என்னவோ


Suppan
நவ 16, 2025 17:47

தேர்தல் ஆணையம் இந்த மாதிரி இலவசங்கள் அளிப்பதை தடை செய்யுமா ?


Suppan
நவ 16, 2025 17:44

பிரஷாந்த் கிஷோர் அடித்து விடுகிறார். உலக வங்கியின் கட்டுப்பாடுகளை மீறி கையாடுவது மிகக்கடினம். பணப்பட்டுவாடாவும் நேரடி கண்காணிப்பில் உள்ளது. சமீபத்தில் மின்மாற்றிகளை மின்வாரியங்களுக்கு விற்கும் ஒரு நிறுவனம் லஞ்சம் கொடுத்ததால் உலக வங்கியால் கருப்பு லிஸ்டில் செக்கப்பட்டிருக்கிறது. வாசகர்களுக்குத் தெரியும் அது எந்த மின்வாரியம் என்று .


GUNA SEKARAN
நவ 16, 2025 15:53

நிதிஷ் பாஜக அரசாங்கம் மதுவிலக்கை அமல்படுத்தியது தான் மிகப்பெரிய காரணம், பெண்கள் வாக்களித்ததற்கு.


visu
நவ 16, 2025 15:28

பிஜேபி ன் நட்சத்திர பிரச்சாரகர் ராகுல் காந்தி இப்ப ரெண்டாவதா ஸ்டாலின் சென்று பீகார் பிரசாரம் பலன் போன தேர்தலை விட சீட்டு துடைத்தெறியப்பட்டதுதான் .ராகுல் சென்ற தேர்தலில் வேலையாள் திருடன் என்றார் தோல்வி இந்த தேர்தலில் வோட் சோரி என்றார் படு தோல்வி


Raj
நவ 16, 2025 15:18

தோல்வியை தழுவியாச்சு இனி என்ன வேணும்னாலும் பேசலாம். உங்களது கட்சியை பீகார் மக்கள் அங்கிகரிக்க படவில்லை. முட்டை பூஜ்யம் தான்.


Shankar
நவ 16, 2025 14:13

பொது பணம் பொதுமக்களுக்கு கொடுத்ததில் என்ன தவறு இருக்கிறது. தமிழகத்தில் தான் பொது பணத்தை பொதுமக்களுக்கு தராமல் கோபாலபுரத்து சொத்தாக வைத்துக்கொள்கிறார்கள்.


Duruvesan, தர்மபுரி பாட்டாளி
நவ 16, 2025 14:02

பெங்களூர்ல பெண்களுக்கு 24000 கொடுக்கிறாங்க, எங்க ஊர்ல 12000 குடுக்கிறாங்க , உங்களுக்கு 400 கோடி விடியல் குடுத்தாரு, இதெல்லாம் நீங்க குடுத்த ஐடியா இப்போ டெபாசிட் காலி பொங்கறீங்க


Nathansamwi
நவ 16, 2025 13:58

ஒரு யோக்கியன் சொன்னான் ....நான் இலவசமே மக்களுக்கு குடுக்க மாட்டேன்னு ...ஆனா இப்போ 10,000 ரூபாய் குடுத்து தேர்தல் ல ஜெய்ச்ருக்கான் ...


N Sasikumar Yadhav
நவ 16, 2025 14:35

உரிமைப்பணம் என சொல்லி கொடுத்துவிட்டு அந்த பணத்தை சாராயக்கடை மூலம் வசூலித்து திருட்டு திமுகவின் சொத்துக்களாக மாற்றவில்லை . பெண்களை தொழில் முனைவோர்களாக்க 10000 ரூபாய் கொடுத்திருக்கிறது


Kumar Kumzi
நவ 16, 2025 14:44

ஓசிகோட்டருக்கு வக்கில்லாம ஓவாவுக்கு ஓட்டு போடுற டாஸ்மாக் கொத்தடிமை கதறுறான்யா ஹாஹாஹா


Prasath
நவ 16, 2025 15:25

நல்லா அறிவாலய கேட்டுக்கு முட்டுக்கொடு பிஜேபி கொடுத்த பணம் பீகார் பெண்களின் நேரடி வங்கி கணக்கிற்கு செலுதபட்டது. அது பெண்கள் தொழில் முனைவோர்களாக கொடுக்கபட்டது


vadivelu
நவ 16, 2025 15:59

இந்த யோக்கியன் எதை சொல்கிறான்


Nathansamwi
நவ 16, 2025 16:09

...பாஜாக வ எதிர்த்து கருத்து சொன்னா அவன் திமுக வ இருப்பன இருப்பானா ?


V K
நவ 16, 2025 13:39

இது தேர்தலுக்கு முன்னாடி தெரியாம போச்சு இந்த ரெண்டு நாள் அவ்வளவு பெரிய காரியம் நடந்து இருக்கு இல்லாவிட்டால் இவர் தான் பீகார் முதல்வர்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை