இறந்த பெண்களுக்கு ரூ.2 லட்சம்
பெங்களூரு: பெங்களூரின் விதான்சவுதாவில் முதல்வர் சித்தராமையா நேற்று அளித்த பேட்டி:பல்லாரி மாவட்ட மருத்துவமனையில் இறந்த பெண்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும்.பல்லாரி மாவட்ட மருந்துகள் கட்டுப்பாட்டு அதிகாரியை 'சஸ்பென்ட்' செய்துள்ளோம். தரமற்ற மருந்துகளை சப்ளை செய்த, மேற்கு வங்கத்தின் நிறுவனத்தை பிளாக் லிஸ்டில் சேர்த்துள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.