உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ரூ.540 கோடி போதைப்பொருள் பரிவர்த்தனை: பஞ்சாப் முன்னாள் அமைச்சர் கைது

ரூ.540 கோடி போதைப்பொருள் பரிவர்த்தனை: பஞ்சாப் முன்னாள் அமைச்சர் கைது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சண்டிகர்: ரூ.540 கோடி அளவுக்கு சட்ட விரோதமாக போதைப்பொருள் பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக பஞ்சாப் மாநில முன்னாள் அமைச்சர் பிக்ராம் சிங் மஜிதாவை போலீசார் கைது செய்தனர்.சிரோண்மனி அகாலி தளம் கட்சி தலைவர் சுக்பீர் சிங் பாதலின் மைத்துனர் பிக்ரம் சிங் மஜிதா. இவர் சிரோன்மணி அகாலி தளம் ஆட்சியில் அமைச்சராக இருந்தவர். இவர் மீது போதைப்பொருள் தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது.இந்நிலையில், மாநில லஞ்ச ஒழிப்பு போலீசார், அமிர்தசரசில் உள்ள அவரது வீட்டில் சோதனை நடத்தினர். சண்டிகரில் உள்ள அவரது வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர். இந்த சோதனையில், ரூ.540 கோடி அளவுக்கு சட்டவிரோதமாக போதைப்பொருள் பணப்பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக போலீசார் குற்றம்சாட்டி உள்ளனர். மஜிதா மற்றும் அவரது மனைவி பெயரில் அசையும் மற்றும் அசையா சொத்துகள் அதிகரித்துள்ளன. ஆனால், அவற்றுக்கு முறையான கணக்கு ஏதும் இல்லை எனவும் தெரிவித்துள்ளனர். போலீசார் கூறுகையில், போதைப்பொருள் விற்பனை வாயிலாக ரூ.540 கோடி வரை சட்டவிரோதமாக சம்பாதித்தார். மஜிதாவின் கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனங்களின் வங்கிக் கணக்குகளில் ரூ.161 கோடி டெபாசிட் செய்யப்பட்டது.சந்தேகத்திற்கு உரிய வெளிநாட்டு நிறுவனங்கள் மூலம் ரூ.141 கோடியை பெற்றுள்ளார். மேலும் எப்படி பணம் கிடைத்தது என்பதை கணக்கு காட்டாமல் ரூ.236 கோடியை டெபாசிட் செய்தார். அமைச்சராக இருந்து கொண்டு தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி பணம் சம்பாதித்ததாகவும் தெரிவித்தார்.இதனிடையே, இந்த சோதனையில் 30 மொபைல் போன்கள், ஐந்து லேப்டாப்கள், 3 ஐ பேட்கள், 2 கணினிகள், பல டைரிகள், சொத்து சார்ந்த ஆவணங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Kasimani Baskaran
ஜூன் 26, 2025 03:50

எங்கெல்லாம் பாகிஸ்தான் பிரச்சினை செய்ய முடியுமோ அங்கெல்லாம் உதவிக்கு காங்கிரஸ் மற்றும் அவர்களது தோழர்கள் தீயாக வேலை செய்து நாட்டை கெடுக்கும் வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்கள் என்பது மகா சோகமானது.


Iyer
ஜூன் 25, 2025 23:05

 பஞ்சாப் அமைச்சர் போதைப்பொருள் விற்பனையில்.  பல ராஜ்ஜியங்கள் சாராய விற்பனை செய்து சம்பாதிக்கின்றன  பள்ளி கல்லூரிகளில் குடித்துவிட்டு வரும் ஆசிரியர்கள் சர்வசாதாரணம் ஆகிவிட்டது நாடு ஏன் அழிவு பாதையில் போய்க்கொண்டு உள்ளது. இதை தவிர்க்க BRITISH MODEL பாடத்திட்டங்களை ஒழித்துவிட்டு GURUKULAM SYSTEM த்தை திரும்பி கொண்டுவரவேண்டும்


ஜெய்ஹிந்த்புரம்
ஜூன் 25, 2025 23:02

நீண்டகால பாஜக கூட்டணி நண்பர்கள்.


Minimole P C
ஜூன் 26, 2025 08:25

Just by alliance we cannot find fault with political parties. It is the tem fault of Election commission. In fact, political parties are forced to have alliance because of numbers as it decides. To reduce corruption etc EC may try with some other tem. But one thing clear that apart from looting more than national parties, the state level parties now entered into the area of antinational activities like drug smuggling, tie up with enemy countries etc. EC/SC has to do something.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை