உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ராஜஸ்தானில் துவங்கியது ஆர்.எஸ்.எஸ்., கூட்டம்

ராஜஸ்தானில் துவங்கியது ஆர்.எஸ்.எஸ்., கூட்டம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஜோத்பூர்: ஆர்.எஸ்.எஸ்., மற்றும் அதனுடன் தொடர்புடைய 30 சங்கங்களின் அமைப்பு பிரதிநிதிகள் பங்கேற்கும் ஒருங்கிணைப்பு கூட்டம் ராஜஸ்தானின் ஜோத்பூரில் நேற்று துவங்கியது. இதை ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத், பொதுச்செயலர் தத்தாத்ரேய ஹோசாபலே ஆகியோர் துவக்கி வைத்தனர். கூட்டத்தில் இந்த அமைப்புடன் தொடர்புடைய அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத், பாரதிய கிஷான் சங்கம் உள்ளிட்ட 30 அமைப்புகள் பங்கேற்கின்றன. இதன் பிரதிநிதிகள் தேசிய ஒருமைப்பாடு, குடும்ப அமைப்பு, சமூக நல்லிணக்கம், சுற்றுச்சூழலுக்கு உகந்த வாழ்க்கை முறை உள்ளிட்ட ஐந்து தலைப்புகள் குறித்து விவாதிப்பர். இந்த கூட்டத்தில் சக அமைப்புகளை சேர்ந்த 320 பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர். தேசிய கல்விக் கொள்கை- 2020 தொடர்பாக பல்வேறு அமைப்புகள் மேற்கொண்ட பணிகளை மதிப்பாய்வு செய்தல், பழங்குடியினரை பிரதான நீரோட்டத்துடன் எவ்வாறு இணைப்பது என்பது குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

ShaSha
செப் 06, 2025 11:23

நல்ல நலன்களாக இயக்கங்கள் செயல்படுவதற்க்கு எல்லோருக்கும் நலம் எல்லோரும் மனிதர்களின் இனம்,மொழி மதம் உடை மற்றும் உணவு ஆகியவை அவர்களின் விருப்பம் அவர்களின் உடல்நிலை சுற்றுப்புறசூழல்களை கொண்டது இதில் எந்த இயக்கமும் அரசாங்கமும் இதில் தலையிடுவது சிந்திக் கூடியது ஆதலால் நற்செயல் செயல் செய்து நற்பண்புகள் வாங்குவது சிறப்பு.


BALAJI
செப் 06, 2025 09:22

ராஜஸ்தானில் விரைவில் கலவரத்தை தூண்டுவதற்கு ரெடி பன்றானுங்க மக்களே உஷாரு


vivek
செப் 06, 2025 13:35

அப்போ தமிழ்நாட்டுல நடக்கிற கலவரம் திமுக பண்ணுவது


venkat venkatesh
செப் 06, 2025 08:08

jai hind


R SRINIVASAN
செப் 06, 2025 07:39

தமிழ்நாட்டில் அந்தந்த பகுதி மக்களுடன் இணைந்து சாலை வசதிகளை மேம்படுத்த வேண்டும் .தமிழ் நாட்டில் எல்லா சாலைகளிலும் கல்லும் ,மண்ணும் ,குப்பையும் கலந்து கன்றாவியாக காட்சியளிக்கிறது. குளங்களை பொது மக்களுடன் சேர்ந்து தூர்வாரி குளங்களை ஆழப்படுத்தினால் தண்ணீர் வீணாவது தடுக்கப்படும்.இதில் கல்லூரி மாணவர்களை ஈடுபுடித்தினால் அவர்களிடம் சேவை மனப்பான்மை வளரும். இதனால் அவர்களிடம் தேசிய உணர்வு வளரும்.


Kasimani Baskaran
செப் 06, 2025 07:03

தமிழகத்தில் பட்டி தொட்டி தோறும் ஆர் எஸ் எஸ் தனது சேவைகளை விரிவு படுத்த வேண்டும். திராவிட விஷ முறிவு மருந்து ஆர் எஸ் எஸ் மட்டுமே.


BALAJI
செப் 06, 2025 09:43

விச முறிவு மருந்து எது?


புதிய வீடியோ