உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கர்நாடகாவில் குகையில் குழந்தைகளுடன் வசித்த ரஷ்ய பெண் மீட்பு!

கர்நாடகாவில் குகையில் குழந்தைகளுடன் வசித்த ரஷ்ய பெண் மீட்பு!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பெங்களூரு: கர்நாடகாவில் மலைப்பகுதியில் ஆபத்தான இடத்தில் உள்ள குகை ஒன்றில் வசித்து வந்த ரஷ்யாவை சேர்ந்த பெண்ணையும் அவரது இரண்டு பெண் குழந்தைகளையும் போலீசார் மீட்டுள்ளனர்.கர்நாடகாவின் ராமதீர்த்தம் மலைப்பகுதி அமைந்துள்ளது. இங்கு நிலச்சரிவு ஏற்படும் பகுதியில் குகை ஒன்று அமைந்துள்ளது. விஷப்பாம்புகள் மற்றும் வனவிலங்குகள் நடமாட்டம் உள்ள பகுதியாகவும் இது உள்ளது.இந்த பகுதிகளில் சுற்றுலா வருவோரின் பாதுகாப்பை உறுதி செய்வது குறித்து, போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது ஒரு பெண்ணின் நடமாட்டம் இருப்பதை அவர்கள் கண்டறிந்தனர். அந்த பெண்ணை பிடித்து விசாரித்த போது, அவரது பெயர் நினா குடினா(40) என்பதும் ரஷ்யாவை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது. மேலும், அவருடன் இரண்டு பெண் குழந்தைகள் இருந்தது தெரியவந்தது.மேலும், ஆன்மிக ரீதியில் இந்தியா வந்த அவர், தியானம் மற்றும் பிரார்த்தனைக்கு அமைதியான இடத்தை தேடி வந்தபோது இங்கு வந்து தங்கியதாக தெரிவித்தார். இதனையடுத்து அந்த இடத்தில் நிலவும் ஆபத்து குறித்து விளக்கிய போலீசார் அவரை பாதுகாப்பாக அழைத்து சென்று ஆன்மிக மடம் ஒன்றில், அவரின் கோரிக்கைப்படி தங்க வைத்தனர்.அவரிடம் நடத்திய விசாரணையில் நினாவின் ஆவணங்கள் குகை பகுதியில் தொலைந்துவிட்டதாக தெரிவித்தார். இதனையடுத்து அந்த பகுதிக்கு மீண்டும் சென்ற போலீசார், ஆவணங்களை தேடி கண்டுபிடித்தனர். பாஸ்போர்ட் மற்றும் விசாவை ஆய்வு செய்தில், கடந்த 2017 ம் ஆண்டு வர்த்தக விசாவில் நினா இந்திய வந்துள்ளார். 2018 ம் ஆண்டு ஏப்.,19 ல் காலாவதியாகிவிட்டது. அதுவரை கோவாவில் தங்கியிருந்த அவர் மீண்டும் கிளம்பி சென்று நேபளாளம் வழியாக மீண்டும் இந்தியாவுக்கு திரும்பி வந்து சட்டவிரோதமாக தங்கியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.இதனையடுத்து பெண்கள் காப்பகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவரை, குழந்தைகளுடன் ரஷ்யாவுக்கு அனுப்பி வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

மாலதி, கோவை
ஜூலை 13, 2025 11:47

குழந்தைகளை பார்த்தால் 7 வயதுக்கு குறைவாக தெரிகிறது. 8 வருடங்களாக இந்தியாவில் வசிக்கிறார். இந்தியா எவ்வளவு பாதுகாப்பாக உள்ளது? எத்தனை பயங்கரவாதிகள் இப்படி தங்கியுள்ளனரோ?


Padmasridharan
ஜூலை 13, 2025 04:52

என்ன சாப்பிட்டு வாழ்ந்தார். தினசரி வாழ்க்கையை எப்படி கடந்தார் இரு குழந்தைகளுடன் என்பதை விளக்கவில்லையே சாமி.


rama adhavan
ஜூலை 13, 2025 01:12

ரஷ்யாவில் இருப்பதை விட பயங்கர குஹை பரவாயில்லை என வந்து விட்டாரோ?


நிக்கோல்தாம்சன்
ஜூலை 12, 2025 22:07

என்ன எழுதுவதென்றே தெரியவில்லை


Sudha
ஜூலை 12, 2025 21:28

பாதுகாப்பான ஆசிரமம், கொஞ்சம் சிரிப்பு வருகிறது, இத்தனை நாள் எப்படி சாப்பிட்டார், குழந்தைகளை காப்பாற்றினார்?


Anantharaman Srinivasan
ஜூலை 12, 2025 23:26

சரியான கேள்வி.. ஆறு வருஷமா பணத்துக்கு என்ன செய்தார்.. கணவர்.?


Ramesh Sargam
ஜூலை 12, 2025 20:15

இப்படியும் ஒருசில வினோத மனிதர்கள்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை