உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / உயிர் காத்த டிரைவரை கவுரவித்தார் சயிப் அலி கான்!

உயிர் காத்த டிரைவரை கவுரவித்தார் சயிப் அலி கான்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மும்பை: தக்க நேரத்தில் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று தன் உயிரைக் காப்பாற்றிய ஆட்டோ டிரைவர் பஜன் சிங் ராணாவை, நடிகர் சயிப் அலி கான் வீட்டுக்கு வரவழைத்து நன்றி தெரிவித்து, 50 ஆயிரம் ரூபாய் வழங்கினார்.பிரபல பாலிவுட் நடிகர் சயிப் அலி கான் மும்பையில், வி.ஐ.பி.,க்கள் வசிக்கும் அபார்ட்மென்டில் வசித்து வருகிறார். கடந்த வாரத்தில் நள்ளிரவு நேரத்தில் அவரது குடியிருப்பில் புகுந்த கொள்ளையன், பிடிக்க முயற்சித்த சயிப்பை கத்தியால் குத்தி விட்டு தப்பினான்.இந்த சம்பவத்தில், சயிப் படுகாயம் அடைந்தார். 6 இடங்களில் குத்தப்பட்ட அவர், ரத்த வெள்ளத்தில் நடந்து வந்தார். கார் ஓட்ட ஆள் இல்லாத நிலையில், சாலையில் நின்று ஆட்டோ தேட வேண்டிய நிலை ஏற்பட்டது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=88v8s5f2&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அந்த நேரத்தில் ஆட்டோவில் வந்த டிரைவர் பஜன்சிங் ராணா என்பவர், உடனடியாக அவரை மருத்துவமனையில் சேர்த்தார். ரத்த வெள்ளத்தில் இருந்த நபர் யாரென்றே தெரியாத நிலையில், ராணா அவரை மருத்துவமனையில் கொண்டு சேர்த்தார். ஆட்டோ கட்டணமும் வாங்கவில்லை.மருத்துவமனையில் சேர்த்த பிறகே, அவர் பிரபல பாலிவுட் நடிகர் என்பது தெரியவந்தது. மருத்துவமனையில் இருந்து குணம் அடைந்து வீடு திரும்பிய சயிப் அலி கான், தன்னை மருத்துவமனையில் சேர்த்த ஆட்டோ டிரைவர் பஜன் சிங் ராணாவை வீட்டுக்கு அழைத்து நன்றி தெரிவித்தார்.அவரது வீட்டுக்கு சென்ற ராணாவுக்கு, சயிப் குடும்பத்தினர் அனைவரும் மனதார நன்றி தெரிவித்தனர். அவருக்கு 50 ஆயிரம் ரூபாய் வழங்கி சயிப் கவுரவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

இளந்திரையன் வேலந்தாவளம்
ஜன 23, 2025 06:45

15000 கோடிகளுக்கு சொந்தக்காரர். கத்தி குத்துக்கு பிறகு தனியாக சாலையில் அனாதையாக. உதவியது அறிமுகம் இல்லாத ஆட்டோ ஓட்டுனர்..


pmnr pmnr
ஜன 22, 2025 22:28

super


Ramesh Sargam
ஜன 22, 2025 21:06

ஆக சயீப் அலி கான் தன்னுடைய உயிருக்கு அவரே வைத்த மதிப்பு வெறும் ரூ. 50,000.


தர்மராஜ் தங்கரத்தினம்
ஜன 22, 2025 19:29

இரண்டு நாட்களுக்கு முன்பு வரை கூட அந்த ஆட்டோ டிரைவர் விசாரிக்கப்பட வில்லை என்கிற செய்தி பார்த்தேன் ..... தந்தை பட்டோடியின் காலத்திலிருந்து பசையான குடும்பம்தான் ..... ஆட்டோ டிரைவரை நன்கு கவனித்திருக்கலாம் .... தாக்கியவன் வீட்டின் அமைப்பு கூட தெரிந்தவனாக இருக்கிறான் ... அவன் பலருடன் வந்திருந்தால் நடிகரின் வாகனங்கள் அருகில் கூட அவர்கள் மறைந்திருக்கலாம் .... அதன் காரணமாக அவற்றைப் பயன்படுத்தாமல் ஆட்டோவில் சென்றிருக்கலாம் என்று நம்ப இடமிருக்கிறது .....


N Annamalai
ஜன 22, 2025 19:07

உங்கள் மதிப்பு இவ்வளவுதானா ?.அவர்கள் குழந்தைகளை படிக்க வைத்து இருக்கலாம் .


Barakat Ali
ஜன 22, 2025 18:58

அப்போ உங்க வாழ்க்கைத் துணை எங்கே இருந்தாங்க சயீஃப் ஜி ???? உசுரயே காப்பாத்துனதுக்கு ஜஸ்ட் ஐம்பதாயிரமா ???? அது உங்க பையனுக்கு ஒருவேளைக்கான பாக்கெட் மணியா இருக்கும் ....


Venkatesan Ramasamay
ஜன 22, 2025 18:29

நம்மிடத்தில் ஓர் உதவியும் முன்னாள் பெறாதவராக இருந்தும் , தக்க சமயத்தில் ஒருவர் தாமாகவே வந்து செய்கிற உதவிக்கு ஈடாக இந்த மண்ணுலகமும் , விண்ணுலகத்தையும் தந்தாலும் ஈடாகாது.


சமீபத்திய செய்தி