உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சம்பவ் ஸ்மார்ட்போன்! சீனா பேச்சுவார்த்தையில் சம்பவம் செய்த இந்திய ராணுவம்

சம்பவ் ஸ்மார்ட்போன்! சீனா பேச்சுவார்த்தையில் சம்பவம் செய்த இந்திய ராணுவம்

புதுடில்லி; சீனாவுடனான முக்கிய எல்லை பிரச்னை தொடர்பான பேச்சுவார்த்தையின் போது இந்திய ராணுவ உயரதிகாரிகள் சம்பவ் ஸ்மார்ட் போன்களை பயன்படுத்திய விவரம் வெளியாகி உள்ளது. இந்திய ராணுவத்தில் முக்கிய தகவல் பரிமாற்றத்தின் போது எந்த சங்கதியும் கசிந்து விடக்கூடாது என்பதில் அதிக அக்கறையும், கண்காணிப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் முக்கிய அம்சமாக இந்திய ராணுவ உயரதிகாரிகள் சம்பவ் என்ற ஸ்மார்ட்போன்களை பயன்படுத்திய விவரம் தற்போது வெளியாகி இருக்கிறது. அதுபற்றிய விவரம் வருமாறு: கடந்த 2024ம் ஆண்டு அக்டோபரில் சீனாவுடான எல்லை பிரச்னை தொடர்பான பேச்சு நடைபெற்றது. சீனாவுடன் பல்வேறு தருணங்களில் எல்லை பிரச்னைகள் தொடர்கதையாகி வரும் நிலையில் இந்த பேச்சுவார்த்தை மிக முக்கியமானதாக பார்க்கப்பட்டது. இந்த பேச்சுவார்த்தையின் போது தங்களுக்குள் தகவல்களை பரிமாறிக் கொள்ள மிகவும் பாதுகாப்பான வழிமுறையை இந்திய ராணுவத்தினர் கையாண்டுள்ளனர். பாதுகாப்பான தகவல் தொடர்புக்காக சம்பவ் (SAMBHAV) ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தி இருக்கின்றனர். எல்லையில் இந்திய ராணுவத்தின் நிலைகள், சீன ராணுவத்தின் நிலைகள், அவற்றின் சாதக பாதகங்கள், பேச்சுவார்த்தையில் என்ன நிலை எடுக்க வேண்டும் என்பதை பற்றிய தகவல்களை பரிமாற, இந்த சம்பவ் ஸ்மார்ட்போன்களை புழக்கத்தில் வைத்து இருந்திருக்கின்றனர். இந்திய ராணுவம், தொழில்துறையின் கூட்டு முயற்சியில் உருவாக்கப்பட்ட இந்த ஸ்மார்ட்போன்கள் கிட்டத்தட்ட 30,000 அதிகாரிகளுக்கு விநியோகிக்கப்பட்டு உள்ளன.இது குறித்து ராணுவ உயரதிகாரிகள் சிலர் கூறியதாவது; முக்கிய விஷயங்களை கையாளும்போது மொபைல் தொழில்நுட்பம் என்பது அதிகம் ஆபத்து நிறைந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது. என்ன தகவல்கள் பரிமாற்றம் செய்யப்படுகின்றன என்பதை குறுக்கீடு செய்து அறிய முடியும். அதற்கு மாற்றாகவே சம்பவ் ஸ்மார்போன்கள் பயன்படுத்தப்படுகின்றன. சம்பவ் போன்கள், சவாலான சூழ்நிலைகளில் தங்கு தடையின்றி இயங்கும் வகையில் இணைப்பை தருகிறது. எந்த சூழ்நிலையிலும் யாராலும் ஒட்டு கேட்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

Baskar
ஜன 18, 2025 16:33

ராகுல் காந்தி கிட்ட இந்த ரகசியம் எல்லாம் சொல்லாதீங்க , ஏற்கனவே சீனாவுடன் என்ன அக்ரீமைண்ட் போட்டார் தெரியலியே


parani
ஜன 18, 2025 15:39

தமிழ் நாட்டின் கடன் எவ்வளவு, மின்சார கட்டணம் உயர்த்திய பிறகு மின் துறையோட வருமானம் எவ்வளவு ? மணல் கொள்ளை என்ன ஆச்சு? தமிழ்நாட்டோட குடி தண்ணீரின் தர ஆய்வு? தமிழ்நாட்டு சாலையின் தரம்? இதைப் பற்றி எல்லாம் எழுத பத்திரிகைகளுக்கு நேரம் போதவில்லை....


அப்பாவி
ஜன 18, 2025 14:26

நல்லா பாருங்க. பின்னாடி மேட் இன் சைனா போட்டிருக்கும். ஸ்மார்ட் போனில் வழக்கமான யூ டியூப், வாட்சப் செயலிகளை நோக்கில் விட்டு, வேறு செயலிகளை நிறுவ முடியாத படி செய்துவிடுவார்கள். ஆனாலும் ஆண்டிராய்ட், அல்லது ஆப்பிள் ஆபரேட்டிங் சிஸ்டம் தான் இருக்கும். வெளியில் சிக்னல் டவர்கள் ஒழுங்கா வேலை செய்தால் ஃபோனும் நல்லா வே வேலை செய்யும்.


Alagusundram Kulasekaran
ஜன 18, 2025 14:17

சீனாவை நம்பி ஏமாற்றம் முடியாது


Ganapathy
ஜன 18, 2025 12:23

இது பொதுமக்களுக்கு தெரிய வேண்டிய விஷயமல்ல. எதை செய்தியாக்குவது என்ற விவஸ்தை கிடையாதா பொறுபுள்ள பத்திரிக்கைக்கு? இதை விடுத்து வரிகட்டும் மக்களுக்கு தெரியவேண்டிய திராவிட ஊழல்களை வெளிப்படுத்தூங்கய்யா. ஐக்கிய அமீரகத்தில் ராணுவ வாகனத்தை போட்டோ எடுத்தாலை அவன் காலி. இங்க என்னடான்னா ராணுவம் எந்த போனை பயன்படுத்துகிறது என விவரித்து இதை பத்திரிக்கைகள் எழுதும் பொறுப்பற்ற மன நிலை உள்ளது..அந்த ஒழுக்கம் பொறுப்பு இங்கும் வேண்டும்.


Thiyagarajan S
ஜன 18, 2025 14:57

நீங்கள் சொல்வது உண்மைதான்.. இந்த விஷயத்தை பொது மக்களுக்கு, பொதுவெளியில் தெரிவிக்க வேண்டிய அவபுரியவில்லை.... ஏன் இப்படி செய்கிறார்கள் என்றும் புரியவில்லை...


Ray
ஜன 18, 2025 15:43

ஏன் இப்படி செய்கிறார்கள் என்றும் புரியவில்லை... புரியவில்லையா? மோடி சர்க்காரின் சாதனையை சொல்லி பீத்திக்கிறாங்க இங்கே ராணுவ ரகசியமெல்லாம் காணாம போய் பல ஆண்டாகிவிட்டது சில சொம்படிக்கும் ராணுவ உயர் அதிகாரிகளும் அரசாங்கத்தில் உயர் பதவிகளுக்கு வருகிறார்களே பார்க்கவில்லையா


RAMAKRISHNAN NATESAN
ஜன 18, 2025 19:11

Ray Mobile networks are prone to eavesping and therefore information security of mobiles is at risk of being compromised. An end-to-end secure mobile ecotem which is network-agnostic has been developed to provide secure communication with instant connectivity on the move. சீன அடிவருடி கட்சியின் ஆதரவாளராக இருந்துகிட்டு பேச்சு ....


Ramesh Sundram
ஜன 18, 2025 11:41

இந்நேரம் நமது ராணுவத்தில் பணி புரியும் சில கருப்பு ஆடுகள் இந்நேரம் சீனாவிற்கு அந்த technology விற்று காசு பார்த்து இருப்பார்கள் இவர்களுக்கு இந்தியா துரோக காட்சிகள் தொடர்பு இருக்க கூடும் .


sundarsvpr
ஜன 18, 2025 11:27

சீனாவை நினைத்தால் நேரு சு இன் லாய் ஒப்பந்தத்தில் ஜவஹர் ஏமாந்தது நினைவிற்கு வருகிறது.


Ray
ஜன 18, 2025 17:14

LOST SIGHT OF LOST "FINGERS ONE TO EIGHT" IN EASTERN LADAKH.


கிஜன்
ஜன 18, 2025 11:24

அவர்களும் இதேபோன்ற போன்களை வைத்திருந்திருப்பார்கள் ..... இராணுவம் ...போலீசார் பற்றிய ரகசிய செய்திகளை வெளியிடும்போது கவனம் தேவை .....


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை