உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக பதவி ஏற்றார் சஞ்சீவ் கன்னா!

சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக பதவி ஏற்றார் சஞ்சீவ் கன்னா!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: சுப்ரீம் கோர்ட்டின் 51வது தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கன்னா பதவியேற்றார். அவருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் ஓய்வு பெற்றதை தொடர்ந்து, இன்று (நவ.,11) நீதிபதி சஞ்சீவ் கன்னா 51வது தலைமை நீதிபதியாக பதவியேற்றார். அவருக்கு ராஷ்டிரபதி பவனில் நடந்த விழாவில், ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவி பிரமாணம் செய்து வைத்தார். அவரது பதவிக்காலம் மே 13, 2025ம் ஆண்டு வரை நீடிக்கும்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ljqlh7bq&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

கடந்த வந்த பாதை

* 1960ம் ஆண்டு மே 14ம் தேதி டில்லியில் சஞ்சீவ் கன்னா பிறந்தார். டில்லி பல்கலையில் சட்டம் பயின்றார்.* இவரது தந்தை டில்லி உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாக 1985ம் ஆண்டு வரை பதவி வகித்துள்ளார். இவரது தாயார் சரோஜ் கன்னா டில்லி ஸ்ரீ ராம் கல்லூரியில் ஹிந்தி பேராசிரியராக பணியாற்றினார்.* இவர் 1983ம் ஆண்டு டில்லி பார் கவுன்சிலில் வழக்கறிஞராக பதிவு செய்து கொண்ட சஞ்சீவ் கன்னா மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் வழக்கறிஞராக இருந்தார்.* கடந்த 2004ம் ஆண்டு டில்லி அரசின் வழக்கறிஞராகவும் (சிவில்) நியமிக்கப்பட்டார்.* டில்லி உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக கடந்த 2005ம் ஆண்டு சஞ்சீவ் கன்னா நியமிக்கப்பட்டார். இவர், கடந்த 14 ஆண்டுகள் பல்வேறு உயர்நீதிமன்றங்களில் நீதிபதியாக பணியாற்றி உள்ளார்.* ஜனவரி 18, 2019 அன்று, எந்தவொரு உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக ஆவதற்கு முன்பே, சுப்ரீம் கோர்ட்டின் நீதிபதியாக பதவி உயர்வு வழங்கப்பட்டது.* இவர் தற்போது தேசிய சட்ட சேவைகள் ஆணையத்தின் செயல் தலைவராகவும், போபாலில் உள்ள தேசிய நீதித்துறை அகாடமியின் ஆளும் ஆலோசகராகவும் உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

என்றும் இந்தியன்
நவ 11, 2024 16:57

இன்னும் 7 மாதம் தான் இவருக்கு பதவிக்கலாமா???????


M S RAGHUNATHAN
நவ 11, 2024 14:36

நம் பாராளுமன்றத்தில் எதிர் கட்சி தலைவர் ஆக இருக்கும் ராகுல் இந்த விழாவில் கலந்து கொள்ளவில்லை. இது அவமானம். .தற்போது பதவி ஏற்கும் உச்ச நீதி மன்றத்தின் தலைமை நீதிபதியின் நெருங்கிய உறவினர் உச்ச நீதி மன்றத்தில் நீதிபதி ஆக இருந்தபோது இந்திரா அவர்களுக்கு எதிராக ஒரு வழக்கில் தீர்ப்பு கொடுத்ததற்காக அவருக்கு தலைமை நீதிபதி பொறுப்பு கொடுக்கப் பட வில்லை. அதன்.காரணம்.இன்று ராகுல் இந்த பதவி ஏற்பு விழாவை புறக்கணித்து இருக்கிறார். ராகுலுக்கு சரியான ஆலோசகர்கள் இல்லை என்று தெரிகிறது.


Kvm
நவ 11, 2024 14:34

இவர் சிறந்த ,,,, வாதி.


Kvm
நவ 11, 2024 14:33

இவர் சிறந்த அறிவாளி, அதனால் தான் தலைமை நீதிபதி பதவி பெற்று உள்ளார் இவர் சிறந்த ....வாதி.


Sampath Kumar
நவ 11, 2024 14:29

அடுத்த அடிமை பிஜேபிக்கு கிடைத்து விட்டது திரு குரான்கள் சொன்னது போல இந்திராவை ஏதிர்த்ததால் அந்த குடும்ப வாரிசுக்கு தலைமை நீதிபதி பதவி உங்க அரசியில் காழுப்புணர்ச்சிக்கு ஒரு அளவே கிடையாதா அடுத்து கவர்னர் பத்தி கோப்பானுக ஆக மொத்தத்தில் நீதி மக்களுக்கு கிடைக்காது நிதி உள்ளவனுக்கு ஒரு நீதி இல்லாதவனுக்கு ஒரு நீதி நாடு விளங்கிடும்


GMM
நவ 11, 2024 14:25

மாநில சட்ட பேரவை மசோதாவை கவர்னர், உயர் நீதிமன்றம் கட்டாயம் ஆய்வு செய்து தன் கருத்தை மக்களுக்கு பத்திரிகை மூலம் தெரிய படுத்த வேண்டும். இது போல் நாடாளுமன்ற மசோதா. அதிக வாக்கு பிரதிநிதிகள் கல்வி, குற்ற பின்னணி தேர்தல் ஆணையம் பார்ப்பது இல்லை. ஆளும் கட்சி மசோதா சட்டம், மரபு, நியாயம் கலந்து இருக்க வேண்டும். சுய நல மசோதாவை தடுக்க முடியும். சொத்து விவரம் ஒரு சொத்தை விவரம். சாதி, மத, சலுகை , சார்பு தீர்மானம் வெற்றியை தீர்மானிக்கும். பேரவை முடிவு பிற சமூக பாதிப்பை உச்ச நீதிமன்றம் கவனிக்க வேண்டும். எந்த மசோதாவிற்கு ஆயுள் காலம் அவசியம்.


ஆரூர் ரங்
நவ 11, 2024 10:45

இவரது தந்தை உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்த நேரத்தில் பதவியுயர்வைப் பற்றிக் கவலைப்படாமல் இந்திராவின் அரசியல் சட்ட, ஜனநாயக விரோத சட்டங்களை எதிர்த்து தீர்ப்பளித்தவர். அதனால் பழி வாங்கப்பட்டவர். இப்போது இந்திரா வாரிசுகளின் அட்டகாசங்களுக்கும் முடிவுகட்ட வேண்டும்.


Suresh Gurusamy
நவ 11, 2024 11:03

ஜனவரி 18, 2019 அன்று, எந்தவொரு உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக ஆவதற்கு முன்பே, சுப்ரீம் கோர்ட்டின் நீதிபதியாக பதவி உயர்வு வழங்கப்பட்டது. கூட்டி கழிச்சு பாருங்கள்.. 2019 திட்டம் இப்போது சரியாய் இருக்கும்...


M S RAGHUNATHAN
நவ 11, 2024 14:19

H R Khanna is paternal uncle of the present CJI. He was superceded because he gave a dissenting judgement against Indira Government action.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை