உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ரூ.10,500 கோடி கடன் வாங்க எஸ்.பி.ஐ., திட்டம்

ரூ.10,500 கோடி கடன் வாங்க எஸ்.பி.ஐ., திட்டம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி,: நாட்டின் மிகப்பெரிய பொதுத் துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, இதுவரை இல்லாத பெரிய கடன் தொகையாக, 10,500 கோடி ரூபாய், அதாவது, 125 கோடி டாலர் கடன் பெற திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.எஸ்.பி.ஐ.,க்கு இந்த கடனை பெற்றுத் தருவதில், 'எச்.எஸ்.பி.சி., ஹோல்டிங்ஸ், சி.டி.பி.சி., பாங்க், தைபே பியூபான் வங்கி' ஆகியவை ஈடுபட்டுள்ளன.ஐந்து ஆண்டுகளில் திருப்பிச் செலுத்தக்கூடிய இந்தக் கடன் குறித்து எஸ்.பி.ஐ., தரப்பில் தகவல் ஏதும் தெரிவிக்கவில்லை.வங்கிகளை பொறுத்தவரை, 75 கோடி டாலர் கடன் தான் இதுவரை அதிகபட்சமாக பெற்ற கடனாக இருந்தது. இதற்கு முன், 'பாங்க் ஆப் பரோடா' 75 கோடி டாலர் கடன் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

ஆரூர் ரங்
நவ 16, 2024 10:59

அரசு வங்கிகளின் வாராக்கடன் குறைந்து வரலாறு காணாத அளவுக்கு சிறப்பாக செயல்படுகின்றன. பங்கு விலைகள் வரலாற்று உச்சத்தில் உள்ளன. . கடனுக்கு அதிக டிமாண்ட் உள்ள நேரங்களில் அன்னிய மற்றும் உள்ளூர் நிதி நிறுவனங்களிடம் குறைந்த செலவில் கடன் வாங்குவது வழக்கமான ஒன்று. லாபகரமானதும் கூட.


தர்மராஜ் தங்கரத்தினம்
நவ 16, 2024 08:36

எஸ் பி ஐ அதாவது ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா இந்தக்கடனை எங்கிருந்து - உலகவங்கி / பன்னாட்டு நிதியம் - பெறப்போகிறது என்கிற விபரமே செய்தியில் இல்லை ..... அதற்கு நிதியமைச்சகம் அல்லது ரிசர்வ் வங்கியின் ஒப்புதலும் தேவைப்படலாம் .... இந்த விவரமெல்லாம் தெரியாமல் கருத்துச் சொல்வது அறிவு முதிர்ச்சியைக் காட்டாது .....


Rajarajan
நவ 16, 2024 07:53

படு சுத்தம். அப்போ கோவிந்தா வங்கின்னு சொல்லுங்க. ஆக்ஸிஜனுக்கே ஆக்ஸிஜென்னா, நிலைமை புரியுது. சமீபத்தில் தான் இந்திய பொருளாதாரம் வளர்ந்துட்டதா உருட்டு உருட்டுனு உருட்டினாங்க. வழக்கம் போல, இந்த கடனையும், திருவாளர் தனியார் தானே கட்டணும் ?? உங்களுக்கு நாங்க தானே இளிச்சவாய் ATM. நஷ்டத்துல இயங்குற அரசு / பொதுத்துறை நிறுவனங்களை இழுத்து மூடி இருந்தா, எங்க தலையில இது விடியாம தப்பிச்சிருப்போம். எவ்வளவு அடிச்சாலும் தங்கறோம், தனியார் துறையினர் நாங்க ரொம்ப நல்லவங்க.


ஆரூர் ரங்
நவ 16, 2024 10:55

நாம் போடும் டெபாஸிட்கள் கூட வங்கியின் பார்வையில் கடன்தான். தொழிற்கடன் உதவிக்கு அதிக கிராக்கி உள்ள நேரத்தில் கடன் பத்திரங்களை விற்று அந்தப் பணத்தை கூடுதல் வட்டிக்கு தொழிற்கடனாக அளிப்பது வழக்கமே. அதிகம் பேர் கடன் விண்ணப்பம் போடுவது பொருளாதார வளர்ச்சியின் அடையாளம்.


Rajayogan Palanichamy
நவ 16, 2024 07:24

GST Collection are in Lakhs of Crores Rupees then why Government should allow banks and other state government to borrow in $? When India borrows in $ interest rates seems less than ₹ interest rate initially but when paying back in $ always appreciate wrt ₹ and we pay more interest than ₹ interest rate. Foreign investors get low interest in their country when they lend in $ they get better return and more we borrow from foreign in $ more and $ get appreciate and Indian ₹ falls.Unless Indian Government should allow foreign lenders to lend in Indian rupees we should pay back in Indian rupees then only Indian ₹ will become strong. Unless any foreign government wants to help India should lend only in Indian ₹ rate at the time of lending as well as paying back then only it is real help otherwise it is not


Kasimani Baskaran
நவ 16, 2024 06:40

திமுக இது போல பல லட்சம் கோடிகளை நிதிகளை முதலீடாக பெற்று வந்திருக்கிறது கூட தெரியாமல் இப்படி கவலைப்பட்டால் என்ன ஆகப்போகிறது.


அப்பாவி
நவ 16, 2024 06:03

நிதியமைச்சகம் 2020 ல 20 லட்சம் கோடி குடுத்திச்சி. அதெல்லாம் அந்நிய முதகுட்டாளர்கள் ஸ்வாகா செஞ்சுட்டு வெளியேறியாச்சு. அடுத்த முறை 20 லட்சம் கோடியை விட அதிகமா குடுப்பாங்க. இந்தியா சூப்பர்னு அவிங்க திரும்ப வந்து முதலுடு செஞ்சு 2030 ல வெளியேறுவாங்க. rinse, wash, repeat.


அப்பாவி
நவ 16, 2024 06:03

நிதியமைச்சகம் 2020 ல 20 லட்சம் கோடி குடுத்திச்சி. அதெல்லாம் அந்நிய முதகுட்டாளர்கள் ஸ்வாகா செஞ்சுட்டு வெளியேறியாச்சு. அடுத்த முறை 20 லட்சம் கோடியை விட அதிகமா குடுப்பாங்க. இந்தியா சூப்பர்னு அவிங்க திரும்ப வந்து முதலுடு செஞ்சு 2030 ல வெளியேறுவாங்க. rinse, wash, repeat.


Mani . V
நவ 16, 2024 05:37

புரிஞ்சு போச்சு. அதை வாங்கி அதானி, அம்பானிக்குத்தானே கொடுப்பீங்க? அப்புறம் அதை வாராக்கடனில் சேர்த்து தள்ளுபடி செய்வீங்க. குட் அப்படித்தான் செய்யோணும்.


N Sasikumar Yadhav
நவ 16, 2024 07:29

முரசொலி மூளை உங்களுக்கு நன்றாக வேலை செய்கிறது


Apposthalan samlin
நவ 16, 2024 10:29

கேன பய ஊரிலே கிறுக்கு பய நாட்டாமையாம் இது இந்தியா அரசுக்கு சாரும் மதத்தை வைத்து அரபு தேசம் தான் அப்படி செய்யுது என்றால் இந்தியாவும் செய்கிறது கார்பொரேட் கம்பெனிக்கு ஏன் கூஜா தூக்கனும் .


சமீபத்திய செய்தி