உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் அதிரடி: பயங்கரவாதிகள் மூவர் சுட்டுக் கொலை

காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் அதிரடி: பயங்கரவாதிகள் மூவர் சுட்டுக் கொலை

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில், பாதுகாப்பு படையினருடன் நடந்த மோதலில் பயங்கரவாதிகள் மூன்று பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். 4 போலீசார் காயமடைந்துள்ளனர்.காஷ்மீரில் பயங்கரவாதிகள் அவ்வபோது தாக்குதல் நடத்தி வருகின்றனர். நேற்று புத்கம் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் உ.பி.,யை சேர்ந்த இரண்டு தொழிலாளர்கள் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஸ்ரீநகரின் கன்யார் பகுதியில் பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்தினர். இதற்கு பாதுகாப்பு படையினரும் பதிலடி கொடுத்து வருகின்றனர்.இந்நிலையில், அனந்த்நாக் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி உள்ளதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனடியாக அவர்கள் அங்கு விரைந்தனர். அப்போது இரு தரப்புக்கு இடையே கடும் துப்பாக்கிச்சண்டை நடந்தது. இதில் மூன்று பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். 4 போலீசார் காயமடைந்துள்ளனர்.இறந்தவர்களில் ஒருவன் வெளிநாட்டை சேர்ந்தவன் என்பதும், மற்றொருவன் உள்ளூரைச் சேர்ந்தவன் என்பதும் தெரியவந்துள்ளது. அவர்கள் எந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்ற தகவல் வெளியாகவில்லை. அந்த பகுதியை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ள பாதுகாப்பு படையினர், வேறு பயங்கரவாதிகள் யாரேனும் தங்கி உள்ளனரா என தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

சிவராஜ்
நவ 02, 2024 22:40

வாழ்த்துக்கள்... இதற்கு விமர்சனம் செய்யும் அரசியல் வியாதிகளையும் போட்ட தள்ள வேண்டும். ராணுவ வீரர் மற்றும் காவலர் இழக்க கூடாது.


Ramesh Sargam
நவ 02, 2024 20:15

பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை. ஆஹா, நமது ராணுவ வீரர்கள் கொண்டாடும் தீபாவளி வேற லெவல். தொடரட்டும் உங்கள் தீபாவளி வேட்டை.


N.Purushothaman
நவ 02, 2024 18:50

வெளிநாட்டை சேர்ந்த பயங்கரவாதிகளின் உடலை கழுகிற்கு விட்டு விட வேண்டும் ....


ஷாலினி
நவ 02, 2024 16:22

வேட்டை தொடரட்டும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை