வாசகர்கள் கருத்துகள் ( 7 )
இதே விதியை ஆங்கில சிகிச்சைக்கும் வைத்து குணமாக்கும் மருந்துகளையும், சிகிச்சை முறைகளையும் மட்டுமே அங்கீகரிக்க வேண்டும். ஆங்கில மருத்துவர்கள் கேரண்டியுடன் கூடிய சிகிச்சை அளிக்கவேண்டும். தவறினால் நோயாளி தரப்புக்கு நஷ்ட ஈடு தர சட்டம் வேண்டும்.
உண்மை உண்மை , சரித்திரமும் , பாரம்பரிய மருத்துவமும் நவீன வியாபாரிகளால் மறைக்க படுகின்றன , 140 வருடங்களுக்கு முன்பு , கெமிக்கல் மருந்துகள் வராத காலத்தில் , எல்லோரும் , இந்த இலை செடியை தானேடா மருந்து என்று தின்றீர்கள்
ஆனால் CD வாங்கி இடுப்பில் வைத்தால் உடனே குணமாகும் என்று மதமாற்றக் கூட்டத்தில் விற்கிறார்கள். அதற்கு தடை வருமா?
ஆங்கில மருத்துவ விளம்பரத்திற்கு எந்த கடிவாளமும் கிடையாது. அத்தனையும் அற்புதம, அற்புதம் நம்புங்கள் மக்கட்கூட்டமே
நீரிழிவு நோய்க்கு எல்லா மருத்துவர்களும் வரிந்து கட்டிக்கொண்டு மாத்திரை மேல் மாத்திரை கொடுத்து குணமாகும் என்று நம்பிக்கை அளிக்கின்றனர். மருந்து தயாரிப்பாளர்களும் கண்டமேனிக்கு விளம்பரம் செய்கின்றனர். ஆனால் நடப்பது என்னவோ மாத்திரையின் அளவு அதிகமாகிறது. சாகும் வரை மாத்திரை சாப்பிட வேண்டியிருக்கிறது. பல பேருக்கும் கை கால்கள் எடுக்கப்படும் நிலை வருகிறது. இது தான் ஆங்கில மருத்துவத்தின் பலன்.
எந்த நவீன மருத்துவரும் சர்க்கரை நோய் குணமாகும் எனக் கூறுவதில்லை. சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டில் வைக்க மட்டுமே மருந்துகள் பரிந்துரைக்கப்படுகின்றன. உடற்பயிற்சியும் உணவுக் கட்டுப்பாடும் இல்லாவிட்டால் எந்த மருத்துவ முறையும் பலனளிக்காது.
தார்மீக ரீதியாக தவறான விளம்பரம் கொடுப்பது தவறு என்றாலும் மேற்கத்திய வைத்தியத்தில் அளவில்லாமல் அடிக்கும் கொள்ளைக்கு எல்லையே இல்லாமல் இருக்கிறதே அதை யார் கவனிப்பது?