உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / முதல்வர் பதவி காலியில்லை யூகங்களுக்கு சித்து முற்றுப்புள்ளி

முதல்வர் பதவி காலியில்லை யூகங்களுக்கு சித்து முற்றுப்புள்ளி

“ஐந்து ஆண்டுகளும் நானே முதல்வராக தொடருவேன். கர்நாடகாவில் முதல்வர் பதவி காலியாக இல்லை; முதல்வர் மாற்றம் குறித்து விவாதிக்கவும் இல்லை,” என, அம்மாநில முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.மத்திய அமைச்சர்களை சந்திப்பதற்காக புதுடில்லி சென்றுள்ள கர்நாடக முதல்வர் சித்தராமையா, அங்கு கட்சியின் தலைவர் சோனியாவை சந்தித்து பேசினார்.பின், சித்தராமையா நேற்று அளித்த பேட்டி:கர்நாடகாவில் முதல்வர் பதவி காலியாக இல்லை; முதல்வர் மாற்றம் குறித்து விவாதிக்கவும் இல்லை. துணை முதல்வர் சிவகுமாரும், 'சித்தராமையாவே ஐந்து ஆண்டுகள் முதல்வராக நீடிப்பார்; அவருக்கு நான் ஆதரவு அளிப்பேன்' என்று கூறியுள்ளார்.'கட்சி எந்த முடிவெடுத்தாலும் கட்டுப்படுவோம்' என்று நாங்கள் இருவரும் வாக்குறுதி அளித்துள்ளோம்; அதன்படி செயல்படுவோம்.காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்களுடன் மேலிட பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா பேசியது குறித்து, அவரிடம் தான் கேட்க வேண்டும். மாநில தலைமை மாற்றம் குறித்து விவாதிக்கவில்லை என்று அவரும் தெளிவாக கூறிஉள்ளார்.முதல்வர் மாற்றம் என்ற செய்தி, ஊடகத்தில் மட்டுமே பேசப்படுகிறது; கட்சி அளவில் நடக்கவில்லை. ராகுலை சந்திக்க அனுமதி கேட்டிருந்தேன்; இதுவரை கிடைக்கவில்லை.இதுதவிர, கட்சியில் யாரின் ஆதரவும் எனக்கு தேவையில்லை. அடுத்த சட்டசபை தேர்தலில், எம்.எல்.ஏ.,க்கள் மீண்டும் வெற்றி பெற வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார் - நமது நிருபர் -.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை